February 03, 2012


தமிழகத்தில் பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட சிவத்தலங்கள்


சேலம் மாவட்டம் சேர்வராயன் மலையில் உற்பத்தியாகின்ற திருமணிமுத்தாறு என்ற அழகிய நதி சேலம் மாவட்டம் நாமக்கல் மாவட்டங்களில் ஒடுவது நாம் அறிந்த ஒன்றாகும் .

தமிழகத்தில் பல சிவலாயங்கள் ஒவ்வொரு சிறப்பு பெற்று இருப்பினும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சிவாலயங்கள் ஐந்தும் "பஞ்சபாண்டவர்களால் வழிபட்ட ஸ்தலம் " என்னும் சிறப்பை பெற்ற அழகிய ஸ்தலங்களாகும் .

அவை

1. சேலம் ஸ்ரீ சுகவனேஷ்வரர் திருக்கோவில்
2. சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் சங்ககிரி ரோட்டில் பெரியூரில் அமைந்துள்ள உத்தமசோழபுரம் ஸ்ரீகரபுரநாதர் திருக்கோவில்
3.நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகேயுள்ள பில்லூர் ஸ்ரீ வீரட்டீஷ்வரர் திருக்கோவில்
4. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டத்தில் மாவுரட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ பெருவுடையார் திருக்கோவில் 
5.நாமக்கல் மாவட்டம் நஞ்சை இடையாரில் அமைந்துள்ள ஸ்ரீ திருவேலீஸ்வரர் திருக்கோவில்

எங்கும் நிறைந்துள்ள சிவபெருமான் திருமணிமுத்தாரின் மேற்குகரையில் மேற்கூறிய ஐந்து ஆலயங்களும் அமைந்துள்ளது மிகச்சிறப்பான ஒன்றாகும் .

அழகிய இந்த ஐந்து சிவாலயங்களில் ஒன்றை ரசித்து அடுத்த இடுகையில் எழுதியுள்ளேன் .படித்துப்பாருங்கள் .மேற்கூறிய ஐந்து ஆலயங்கள் ,அமைப்புகள் பற்றி விபரங்கள் தேவைப்படுபவர்கள் கீழ்கண்ட அலைபேசியில் உள்ள சிவனடியாரை தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் . 

திரு. கார்த்திக்ராஜா 94434-62072 .

பெருமை வாய்ந்த பஞ்சபாண்டவர்களால் வணங்கப் பெற்ற பழங்கால சிவத்தலங்கள் ஐந்தையும் தரிசனம் செய்து நலம் பெற அன்புடன் விழையும்

No comments:

Post a Comment