August 23, 2011

இறைவனும் இறை உணர்வும்


உண்மையாய் வாழ்வது துன்பம் என்றிருந்தேன்
உண்மையாய் வாழ இயலாது தவித்திருந்தேன்
பொய்மையை மனதில் நிறைத்து இருந்தேன்
கயமை குணத்துடனே வாழ்வை கழித்து இருந்தேன்
ஐயனே உன்னை அறிந்த பின்னும்
பொய்யனாய் வாழ்வது முறையோ?

என பாடிய ஒருவரை எதேச்சையாகச் சந்தித்த மற்றொரு நபர், பாடியவரிடம் சென்று நன்றாக இருந்தது பாடல், சிலர்தான் தங்கள் செயல்களை பரிசீலனை செய்து முறையாக வாழப் பழகிக் கொள்வார்கள் என வாழ்த்திவிட்டுச் சென்றார்.

சில வருடங்கள் பின்னர் அந்த பாடலை பாடியவரைச் சந்திக்கும் வாய்ப்பு எதிர்பாரா விதமாக மீண்டும் அந்த நபருக்கு கிட்டியது. பாடலும் ஒலித்தது. அதே வரிகள். ஐயனே உன்னை அறிந்த பின்னும் பொய்யனாய் வாழ்வது முறையோ? என்றே முடித்ததைக் கேட்டதும் அந்த நபரிடம் சென்று ‘’சில வருடங்கள் முன்னர் இதே வரிகளைத்தான் பாடீனீர்கள், நீங்கள் பொய்யான வாழ்க்கையில் இருந்து மீள முயற்சிப்பதில்லையா’’ என்று கேட்டார்.

‘’முடியவில்லை, பொய்யாகவே வாழ்ந்து பழகிவிட்டது. அந்த பொய்யில் இருந்து உண்மையாய் வாழ்வது என்பது இயலாததாக இருக்கிறது’’ என்றார் பாடியவர். ‘’இறைவனைத்தானே ஐயன் எனக் குறிப்பிட்டீர்கள், இறைவனை அறிந்த பின்னும் பொய்யாக வாழ்வது முறையா என்றுதானே அர்த்தம் சொல்கிறது பாடல்’’ என்றார் அந்த நபர்.

‘’ஆமாம், எனது இயலாமையைத் தான் ஐயனிடம் சொல்லி புலம்புகிறேன்’’ என்றார் பாடியவர். ‘’இறைவனிடம் இப்படி புலம்புவதன் மூலம் எப்படி நீங்கள் உண்மையாக வாழ முடியும், உண்மையாக வாழ முயற்சி செய்ய வேண்டுமல்லவா’’ என்றார் அந்த நபர்.

‘’முயற்சி செய்து கொண்டிருக்கிறேன், ஆனால் முடியவில்லை. என்னை ஆட்டிப்படைக்கும் ஐயனிடம் அதனால்தான் மன்றாடிக் கேட்கிறேன். ஐயனை அறியாதபோது செய்த தவறெல்லாம் ஐயனை அறிந்த பின்னும் தொடர்வது ஐயனின் விளையாட்டுதானேயன்றி வேறென்ன?’’ என்றார் பாடியவர்.

‘’ஐயனின் விளையாட்டு அல்ல அது, இது உங்கள் விளையாட்டு. மன தைரியத்துடன் உண்மையாகவே வாழ்வது என பொய்மையையும், கயமையையும் ஒழித்துவிட்டு வாழ்ந்து பாருங்கள். உண்மையாய் வாழ்வது இன்பம் எனப் பாட வரும்’’ என்றார் நபர்.

‘’அந்த ஐயனே உங்களை அனுப்பி இருக்கிறார். என்ன தவம் செய்தேன் நான்’’ என்றார் பாடியவர்.

‘’எந்த ஒரு ஐயனும் என்னை அனுப்பவில்லை, நீங்கள் ஒரு தவமும் செய்யவில்லை. எதேச்சையாக உங்களை நான் பார்க்க நேரிட்டது. எனக்கென்ன வருத்தமெனில் நீங்கள் அந்த ஐயனை அறியவே இல்லை. அந்த ஐயனை அறிந்து அந்த ஐயன் வழி நடந்திருந்தால் நீங்கள் பொய்யான வாழ்வினை வாழ மாட்டீர்கள்’’ எனச் சொல்லிவிட்டு நடக்கலானார் அந்த நபர்.

இறைவனை நம்புவர்கள் மட்டுமே உண்மையாக இருப்பார்கள் என எவர் எங்கு எழுதிக் கொடுத்த நியதி?. இறைவனை நம்பாதவர்கள் உண்மையாக இருக்கமாட்டார்கள் என எழுதித் தரப்பட்டா இருக்கிறது? சில வேதங்கள் அப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அதனாலேயே நான் மிகவும் உண்மையானவன், ஆனால் இறைவனை நான் நம்புவதில்லை, நான் இறைவனை நம்பாத காரணத்தினால் உண்மையில்லாதவன் என என்னைச் சொல்ல இயலுமா என குரல்கள் எழுப்பப்படுகின்றன.

இறைவன் ஒரு உண்மை. அந்த உண்மையை நம்பாதபோது நீ எப்படி உண்மையாக இருக்க இயலும் என்றே எதிர் குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன. அப்படியெனில் உண்மையின் சொரூபமாக மட்டுமேத் திகழ்பவரா இறைவன்?
படிமம்:T 500 21.jpg


புளிய மரங்கள் அதிகம் வளர்ந்து செழித்து இருந்த அந்த கிராமம்தான் புளியம்பட்டி. வாகன வசதிகள் எல்லாம் இல்லை. ஆனால் சாலையெல்லாம் போடப்பட்டு இருந்தது. லாரிகள் புளியம்பட்டிக்கு அருகில் இருக்கும் ஆற்றுப் படுகையில் மணல் அள்ளி செல்லும், அதற்காகவே இந்த சாலைகள் பயன்பட்டுக் கொண்டிருந்தது.

கிராமத்தில் பள்ளிக்கூட வசதியும் கிடையாது. அருகில் இருக்கும் சின்னாளம்பட்டிக்குத்தான் ஐந்து வரை படிக்கச் செல்ல வேண்டும். படிக்கச் சிரமப்பட்டு ஊர் சுற்றுபவர்களே இங்கு அதிகம். விவசாயத்தையும், நெசவுத் தொழிலையும் மட்டுமே நம்பி, ஊரில் இருப்பவர்கள் எல்லாம் பணக்காரர்களாக ஆவதென்பது சாத்தியமில்லாமல்தான் இருந்து வருகின்றது. இதில் மணல் லாரியில் வேலைக்குச் செல்பவர்களும் உண்டு. சிறுக சிறுக பணத்தை சேமிக்கலாம் என்றால் உடல் வலி நீங்கும் என சாராயமும், வெற்றியாளர்கள் என நிரூபிக்க சீட்டாட்டமும் பணத்தை பழுது பார்க்கும். பொறுப்பற்றவர்களாக இளைஞர்கள் இருக்கிறார்களெனில் அவர்களது தந்தையர்களும் பொறுப்பில்லாமலே இருந்து வருகிறார்கள். வீட்டு வேலை பார்ப்பதோடு தோட்ட வேலையென பார்த்து கிடைத்தவரை போதும் என அடுப்படிக்குள் புகைந்து போகும் தாய்மார்கள்தான் இங்கு அதிகம்.

வார இறுதி நாட்கள் என வந்துவிட்டால் ஒரு பஞ்சாயத்தாவது நடக்காமல் இருக்காது. சத்தமும் சண்டையுமாகவே அந்த நாட்கள் கழியும். பின்னர் எதுவும் நடக்காதது போல அனைவரும் சகஜமாக பழகி கொள்வார்கள். சாதிப் பிரச்சினை அவ்வப்போது தலை தூக்கும். ஆனால் வெட்டிக் கொள்ளமாட்டார்கள். இப்படி மிகவும் பின் தங்கிப் போய் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காணாமல் இறந்து போனவர்களும், இருந்து போகப்போவோர்களும் கிராமத்து கணக்கில் அதிகமாகவே தெரியும்.

அந்த புளியம்பட்டியில் வசித்து வந்த செல்லாயி தனது ஒரே மகன் கதிரேஷனை கஷ்டப்பட்டு பன்னிரண்டு வரை படிக்க வைத்து விட்டார். படிப்பினை சிரமம் இல்லாது படித்து வளர்ந்தான் கதிரேசன். கதிரேஷனுக்கு நான்கு வயதாகும் போதே காச நோயினால் அவனது தந்தை முருகேசன் சிவலோக பதவி அடைந்தார். புளியம்பட்டியில் மறுமணம் எல்லாம் செல்லுபடியாகாது. செல்லாயி தனது மகனே வாழ்க்கை என வாழ்ந்து வருகிறார்.

அப்படிப்பட்ட வாழ்க்கைக்கு குறுக்கே பாலிடெக்னிக் படிப்பு வந்து நிற்கிறது. கதிரேசன் இன்று சாயந்திரம் விடுதிக்குச் சென்று சேர்ந்து, நாளையிலிருந்து படிப்புத் தொடங்க வேண்டும். விடுதிக்கான பணத்தை மாதம் தவறாமல் கட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையில் செல்லாயி கதிரேசனை மேற்கொண்டு படிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். கதிரேசனும் படிப்பின் மேல் கொண்ட அக்கறையினால் சரியென கேட்டுக் கொண்டான். மன உறுதியுடன் செல்லாயி இருந்தாலும் மகனைப் பிரிந்து இருப்பது என்பது கடினமானதாகத்தான் இருக்கும் என உணரத் தொடங்கினாள். கண்கள் கலங்கியவாறே முறுக்கு, கடலை மிட்டாய், சேவு என எல்லாம் எடுத்து வைத்து 'பத்திரம்பா' என வழி அனுப்பியபோது இருந்த பாதி உயிரும் போனதாகவே உணர்ந்தாள் செல்லாயி.

ஓட்டு வீட்டிலிருந்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தவாரே நடந்தான் கதிரேசன். ஊரின் எல்லையைத் தாண்டிச் செல்லும் முன்னர் ஓடிப்போய் அம்மா முகத்தை மறுபடியும் பார்த்துவிட்டு வரலாமா என்றுதான் இருந்தது கதிரேசனுக்கு.

August 21, 2011

சிவனின் கோபம்

பிரம்மாவின் குமாரரான தட்சப்பிரஜாபதிக்கு 16 பெண்கள்.

அவர்களில் ஸ்வாஹாவை அக்னிதேவரும், ஸ்வதாவை பித்ருவிற்கும், சதிதேவியை பரமசிவனாரும், மற்ற பெண்களை தர்ம தேவர்களும் திருமணம் செய்து கொண்டனர்.

(நாம் ஹோம குண்டத்தில் "ஸ்வாஹா" "ஸ்வதா" என்று சொல்லி கொடுக்கும் ஆகுதி இம்மனைவிகளின் மூலமாகவே அக்னியையும் பித்ருக்களையும் சென்றடையும்)

ஒரு முறை பிரஜாபதிகள் சேர்ந்து நடத்திய யாகத்திற்கு மாமனாராகிய தடசன் வந்தபோது அங்கிருந்த பரமசிவன் , அவருக்கு எழுந்திருந்து மரியாதை செலுத்தவில்லை.

கோபமுற்ற தட்சன் பரமசிவனுக்கு இனி யாகத்தில் அவிர்பாகம் கிடைக்காது என்று சபித்து விட்டார். அன்று முதல் தட்சனும், பரமசிவனும் பகையானார்கள்.

பலநாள் கழித்து தட்சன் நடத்திய மிக உயர்ந்த யாகத்திற்கு ஸதி தேவி தனக்கு அழைப்பு இல்லாவிடிலும் செல்ல விரும்பி சிவனிடம் அனுமதி வேண்டினாள்.

அஹங்காரமுள்ள, ஆத்மஞானமில்லாத இடத்திற்குச்சென்றால் அவமானம் ஏற்படும் என்று தடுத்தார்.

ஆனாலும் கேட்காமல் சதிதேவி யாகத்திற்கு சென்று அவமானப்பட்டு உயிர் துறந்தாள்.

அதைக் கேட்ட பரமசிவனின் கோபம் கொண்டமேனியிலிருந்து ஆயிரம் கைக்கள் கொண்ட வீரபத்திரர் தோன்றி ,தட்சரையும் யாகத்தையும் அழித்தார்.

பரம்மா பொறுமையின் பெருமையை சிவனுக்கு உபதேசித்து அவரை சாந்தப்படுத்தவே, சிவனும் தட்சரை உயிர்ப்பித்தார். அங்கு திருமாலும் கருடன் மீதுதோன்றி அனுக்கிரகித்தார்.

வெட்டப்பட்ட தட்சனின் தலையில் ஆட்டின் தலை பொருத்தப்பட்டது.

ருத்ரமந்திரம் "மே மே" என்று முடியும் வகையில் இருப்பது இதனால்தான்.

பல்வேறு ஸ்தலத்தில் உள்ள சிவனின் நாமங்கள் (Lord siva's names)



சங்கமேஸ்வரர்
அர்த்தநாரீஸ்வரர்
பசுபதிநாதர் கருவூர்
திருமுருகநாதசுவாமி
கொடுமுடிநாதர்
அவிநாசியப்பர்
விகிர்தநாதேஸ்வரர்
தீர்த்தபுரீஸ்வரர்
சுடர்கொழுந்தீசர்
நர்த்தன வல்லபேஸ்வரர்
திருநீலகண்டர்
சிவக்கொழுந்தீசர்
சோபுரநாதர்
அதிகை வீரட்டநாதர்
திருநாவலேஸ்வரர்
பழமலைநாதர்
வெண்ணையப்பர்
வீரட்டேஸ்வரர்
அறையணிநாதர்
இடையாற்று நாதர்
அருணாசலேஸ்வரர்
சொக்கநாதர்
ஆப்புடையார்
பரங்கிரிநாதர்
ஏடகநாதேஸ்வரர்
கொடுங்குன்றீசர்
திருத்தளிநாதர்
பழம்பதிநாதர்
இராமநாதசுவாமி
ஆடானைநாதர்
காளையப்பர்
பூவணநாதர்
திருமேனிநாதர்
குறும்பலாநாதர்
நெல்லையப்பர்
ஏகாம்பரேஸ்வரர்
திருமேற்றளிநாதர்
ஓணகாந்தேஸ்வரர்
அநேகதங்கா பதேஸ்வரர்
காரை திருநாதேஸ்வரர்
வாலீஸ்வரர்
அடைக்கலம்காத்த நாதர்
வேதபுரீஸ்வரர்
பனங்காட்டீஸ்வரர்
வில்வநாதேஸ்வரர்
மணிகண்டேஸ்வரர்
ஜலநாதேஸ்வரர்
தெய்வநாதேஸ்வரர்
திரிபுரநாதர்
வடாரண்யேஸ்வரர்
வாசீஸ்வரர்
விருந்திட்ட ஈஸ்வரர்
ஞானபுரீஸ்வரர்
வேதகிரீஸ்வரர்
ஆட்சீஸ்வரர்
சந்திரசேகர்
அரசிலிநாதர்
மாகாளேஸ்வரர்
நடராஜர்
பாசுபதேஸ்வரர்
உச்சிநாதேசுவரர்
பால்வண்ண நாதர்
சிவலோக தியாகேசர்
திருமேனிஅழகர்
முல்லைவன நாதர்
சுந்தரேஸ்வரர்
சாயாவனேஸ்வரர்
பல்லவனேஸ்வரர்
சுவேதஆரன்யேஸ்வரர்
ஆரண்ய சுந்தரேஸ்வரர்
வெள்ளடையீசுவரர்
பிரம்மபுரீசர்
சத்தபுரீசுவரர்
வைத்தியநாதர்
கண்ணாயிரநாதர்
கடைமுடிநாதர்
மஹாலக்ஷ்மி நாதர்
சிவலோகநாதர்
அருட்சோம நாதேஸ்வரர்
ஆபத்சகாயேஸ்வரர்
கல்யாணசுந்தரர்
ஐராவதேஸ்வரர்
அருள்வள்ள நாதர்
வீரட்டேஸ்வரர்
குற்றம் பொருத்த நாதர்
கோந்தல நாதர்
மாணிக்கவண்ணர்
நீலகண்டேசர்
துயரந்தீர்த்தநாதர்
பதஞ்சலி நாதர்
சௌந்தரேசுவரர்
அமிர்தகடேசர்
பசுபதி நாதர்
அக்னீஸ்வரர்
திருக்கோடீஸ்வரர்
பிராண நாதேஸ்வரர்
 செஞ்சடையப்பர்
பாலுகந்த ஈஸ்வரர்
 சத்யகிரீஸ்வரர்
கற்கடேஸ்வரர்
சிவயோகிநாத
கோடீஸ்வரர்
எழுத்தறிநாதர்
சாட்சி நாதேஸ்வரர்
விஜயநாதர் 
வில்வவனநாதர்
தயாநிதீஸ்வரர்
ஆபத்சகாயநாதர்
ஐயாரப்பர்
நெய்யாடியப்பர்
வியாக்ர புரீசர்
வஜ்ரதம்ப நாதர்
வடமூலநாதர்
செம்மேனி நாதர்
சத்யவாகீஸ்வரர்
ஆம்பிரவன நாதர்
திருமூலநாதர்
ஜம்புகேஸ்வரர்
ஞீலிவனேஸ்வரர்
மாற்றுறை வரதீஸ்வரர்
மரகதேஸ்வரர்
ரத்னகிரிநாதர்
கடம்பவன நாதேஸ்வரர்
பராய்த்துறை நாதர்
உஜ்ஜீவ நாதர்
பஞ்சவர்னேஸ்வரர்
தாயுமானவர்
எறும்பீசர்
நித்திய சுந்தரர்
தீயாடியப்பர் மேலை
ஆத்மநாதேஸ்வரர்
புஷ்பவன நாதர்
பிரம்மசிரகண்டீசர்
தொலையாச்செல்வர்
வேதபுரீசர்
வசிஷ்டேஸ்வரர்
ஆலந்துறை நாதர்
சக்ரவாகேஸ்வரர்
முல்லைவன நாதர்
பாலைவன நாதர் 
கல்யாண சுந்தரேஸ்வரர்
பசுபதீஸ்வரர்
சிவகொழுந்தீசர்
தேனுபுரீஸ்வரர்
சோமேஸ்வரர்
கற்பகநாதர் 
கும்பேஸ்வரர்
நாகேஸ்வரசுவாமி
காசி விஸ்வநாதர்
சண்பக ஆரண்யேஸ்வரர்
மஹாலிங்கேஸ்வரர்
ஆபத்சகாயநாதர்
நீலகண்டேஸ்வரர்
வைகன் நாதர்
உமாமஹேஸ்வரர்
கோகிலேஸ்வரர்
 மாசிலாமனி ஈஸ்வரர்
உக்தவேதீஸ்வரர்
வேதபுரீஸ்வரர்
மயூரநாதர்
வீரட்டேஸ்வரர்
சுவர்ணபுரீசர்
நற்றுணையப்பர்
வலம்புரநாதர்
சங்கருனாதேஸ்வரர்
தான்தோன்றியப்பர்
அமிர்தகடேஸ்வரர்
பிரம்மபுரீஸ்வரர்
திருமேனிஅழகர்
பார்வதீஸ்வரர்
யாழ்மூரிநாதர்
தர்பாரண்யேஸ்வரர்
ஐராவதேஸ்வரர்
பிரம்மபுரீசர் அம்பர்
மாகாளநாதர்
முயற்சிநாதேஸ்வரர்
சகலபுவனேஸ்வரர்
மதிமுத்தீஸ்வரர்
பாம்பு புரேஸ்வரர்
மங்களநாதர்
நேத்ரார்பனேஸ்வரர்
அக்னீஸ்வரர்
சற்குனநாதேஸ்வரர்
சிவானந்தேஸ்வரர்
சித்தி நாதேஸ்வரர்
படிக்காசு அளித்த நாதர்
சிவபுரநாதர்
அமிர்தகலேஸ்வரர்
சற்குனலிங்கேஸ்வரர்
வாஞ்சிநாதர்
மதுவனேஸ்வரர்
பசுபதீஸ்வரர்
சௌந்தர்யநாதர்
வீரட்டானேஸ்வரர்
அக்னீஸ்வரர்
வர்த்தமானேஸ்வரர்
இராமணதேஸ்வரர்
திருபயற்றுநாதர்
உத்தராபதீஸ்வரர்
இரத்தினகிரீஸ்வரர்
அயவந்தீஸ்வரர்
காயாரோகனேஸ்வரர்
வெண்ணைலிங்கேஸ்வரர்
கேடிலியப்பர்
தேவபுரீஸ்வரர்
முக்கோண நாதேஸ்வரர்
வன்மீகி நாதர்
அறனெறியப்பர்
தூவாய் நாயனார்
பதஞ்சலி மனோஹரர்
கரவீரநாதர்
பிரியாதநாதர்
ஆடவல்லீஸ்வரர்
கோனேஸ்வரர்
செந்நெறியப்பர்
ஞானபரமேஸ்வரர்
சொர்ணபுரீசுவரர்
ஆபத்சகாயேஸ்வரர்
பாதாளேஸ்வரர்
சாட்சி நாநர்
பரிதியப்பர்
வெண்ணிக்கரும்பர்
புஷ்பவனநாதர்
சர்ப்ப புரீஸ்வரர்
களர்முலைநாதேஸ்வரர்
பொன்வைத்த நாதேஸ்வரர்
மந்திர புரீஸ்வரர்
சற்குனநாதேஸ்வரர்
கற்பகநாதர்
நீணெறிநாதர்
கொழுந்தீசர்
வெண்டுறைநாதர்
வில்வவனேஸ்வரர்
ஜகதீஸ்வரர்
அக்னீஸ்வரர்
வெள்ளிமலைநாதர்
நெல்லிவனநாதேஸ்வரர்
மாணிக்கவண்ணர்
கண்ணாயிரநாதர்
நடுதறியப்பர்
மனத்துனைநாதர்
கைசின நாதேஸ்வரர்
கோளிலிநாதர்
வாய்மூர்நாதர்
மறைக்காட்டு மணாளர்
அகஸ்தீஸ்வரர்
அமிர்தகடேஸ்வரர்
ஊண்றீஸ்வரர்
சிவானந்தேஸ்வரர்
ஆதிபுரீசர்,
வலிதாய நாதர்
மாசிலாமனி ஈஸ்வரர்
வேதபுரீசர்
கபாலீஸ்வரர்
மருந்தீஸ்வரர்
தடுத்து ஆட்கொண்டநாதர்
சிஷ்டகுருநாதர்
வடுகூர்நாதர் வடுகூர்
வாமனபுரீஸ்வரர்
பாடலீஸ்வரர்
சிவலோக நாதர்
பனங்காட்டீசர்
அழகிய நாதர்

பிரதோஷத்தின் பலனும் மகிமையும்



பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் 
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமசிவாயத்தை நான் மறவேனே.
   
"நற்றவா உனை நான் மறக்கினும்   சொல்லும் நா நமசிவாயவே."     
 



பிரதோச வழிபாட்டினைக் கடைப்பிடித்து  சகல நலனும் பெறுவோமாக 
     பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.
பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம்.
எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
அதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.
நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.
மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.
எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.
காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.
எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும்காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும்.
120 பிரதோஷ சிவன் கோவிலுக்குச் சென்று மாலை 4.30 - 6.00 மணிக்குள் நடைபெறும் பிரதோஷ பூஜையில் கலந்து ஓம் நமசிவாய என்று 108 முறை எழுத்தாலோ அல்லது மனதாலோ பிரார்த்தனை செய்து சகல செல்வங்களும் பெற்று மறு பிறவி இல்லாமல் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை பெருங்கள்
                                                       
"திருச்சிற்றம்பலம்"
                     பிரதோஷ  தினம்  நாள்காட்டி 

               01.01.11 சனி மஹா                     28.06.11 செவ்வாய்
               17.01.11 திங்கள்                            12.07.11 செவ்வாய்
               31.01.11 திங்கள்                            28.07.11 வியாழன்  
               16.02.11 புதன்                                11.08.11 வியாழன்
               02.03.11 புதன்                                26.08.11 வெள்ளி
               17.03.11 வியாழன்                        09.09.11 வெள்ளி
               31.03.11 வியாழன்                        25.09.11 ஞாயிறு
               15.04.11வெள்ளி                            09.10.11 ஞாயிறு
               30.04.11 சனி மஹா                      24.10.11 திங்கள்
               15.05.11  ஞாயிறு                          08.11.11 செவ்வாய்
               30.05.11 திங்கள்                             23.11.11 புதன்
               13.06.11 திங்கள்                             07.12.11 புதன்                             
                                                                       22.12.11 வியாழன்


  சிவனை நினை- சிவனை துதி- சிவயொகம்பெறு 

முருகாசரணம் திருச்சிற்றம்பலம்

கேள்வி: நடராஜர் வடிவத்தின் தத்துவம் என்ன? 

பதில்: நடராஜ வடிவத்தின் தத்துவம் உலகைப் படைத்து, அதை தனது பொற்கரத்தால் காத்து, அக்கினி தாங்கிய கரத்தால் தீமைகளை எரித்து, ஊன்றிய திருவடியின் அடியில் அநுக்கிரகம் செய்வதுமாகும்
கேள்வி: தட்சினாமூர்த்தி திருக்கோலத் தத்துவம் என்றால் என்ன?

பதில்: சிவனின் தட்சிணாமூரத்திக் கோலம் என்பது பிரம்ம நிலையை துலங்க வைப்பது அங்கே செயல் இல்லை. ஒரே மௌனம்தான்.வெளியில் சகல காரியங்களும் செய்யும் ஈசுவரன் எப்போதும் உள்ளே அடங்கி பிரமமாக இருக்கின்றார். பேசாமல் புரிவைக்கும் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி அவருக்கு முனனால் கீழே அமர்ந்துள்ள முனிவர்கள்  சனதர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்  நால்வரும் மௌன உபதேசம் பெறுகின்றார்கள் என்பதாகும்.
கேள்வி: மானின் தத்துவம் என்றால் என்ன?

பதில்:சிவபெருமானின் கையில் உள்ள மான் என்ன தத்துவத்தை நமக்கு உணர்த்துவது என்றால். மானின் நான்கு கால்களும் நான்கு வேதங்கள். சிவபெருமான்தாம் வேதப்பொருளாக உள்ளவர். இதை உலகிற்கு உணர்த்துவதற்காகவே மானை கையில் ஏந்தினார். வேதநாயகன் ஈசன் என்பதை அவரின் கையில் உள்ள மான் உணர்த்துகின்றது.
கேள்வி: பாம்பு புலித்தோல் ஆகியவவை உணர்துகின்ற தத்துவங்கள் என்ன?
பதில்.சிவனின் கழுத்தை சுற்றியுள்ள பாம்பு. நம்மை ஒவ்வொரு நிமிடமும் பாவப் படுகுழியில்தள்ள சந்தற்பம்பார்த்தபடி நச்சுப்பாம்பாக நம்மைச்சுற்றி வளைத்துக்கொள்ள காத்திருக்கின்றது என்பதையும், ஆடையாக அணிந்திருக்கும் புலித் தோல் நம்மனம் மிருக உணர்சிக்கு இணங்கக் கூடாது. உயர்வான குணத்துடன் இருக்கவேண்டும் என உணர்த்துகின்றன.
கேள்வி:-பிறை உணரத்தும் தத்துவம் என்ன?

சிவனின் ஜடாமுடியில் இருக்கும் சந்திரன் நம் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வளர்பிறையாகவும் தேய்பிறையாகவும் வரும் என்ற தத்துவத்தை சொல்லுகின்றது.
கேள்வி: கங்கை உணர்த்துகின்ற தத்துவம் என்ன?

பதில்: ஜடாமுடியில் இ;ருக்கும் கங்கை சொல்லும் தத்துவமானது எப்பொழுதும் தன்னைப்போல் தூய்மையாக உள்ளம் இருக்க வேண்டும் என்பதை விளக்குகின்றது.
கேள்வி ஐந்து நாகங்களை அணிந்திருக்கும் தத்துவம் என்ன.?

பதில்: சிவபெருமான் ஐந்து நாகங்களை ஆபரணமாக அணிந்திருப்பதின் தத்துவம் யாதெனில் நம்மைச்சுற்றி நாகங்களைப்போல் நிற்கும் ஐந்து புலன்களை அடக்கி நிறுத்துவதை விளக்குயாகும்.
கேள்வி: அர்த்தநாதீஸ்வர தத்துவம் என்பதின் விளக்கம் என்ன..?

புதில்: சிவன் அர்த்தநாதீஸவராக நிற்பது எமக்கு எதை உணர்துகின்றது என்றால் அவர் காமத்தை வென்றவர் என்பதையும். பெண்ணுக்கு சரிபாதி இடம் உண்டு என்பதையும் உணரவைக்கவே யாகும.;
கேள்வி: பஞ்சாட்சர மந்திர தத்துவம் என்றால் என்ன?

பதில்: சைவசமயத்துகே உரித்தான பதி,பசு,பாசம் என்னும் தத்துவமும் இதனுள் அடங்கும்.
“நமசிவாய” என்பதில் நம- பசுவையும் சி-பதியையும் வய-பாசத்தையும் குறிக்கும். அதாவது பசுவாகிய ஆன்மாக்கள் பாசமாகிய சுகங்களை தொலைத்துப் பதியாகிய பரம்பொருளுடன் இணைதல் வேண்டும் என்ற பரமானந்த தத்துவத்தையும் இந்த நமசிவாய நமக்கு உணர்த்துகின்றது.

கேள்வி: ரிஷப வாகனத் தத்துவ விளக்கமென்ன.?

பதில்: தரும தேவதையானவள் தான் அழியாது என்றும் நித்தியமாக இருக்க விரும்பி ரிஷப உருவம்கொண்டு சிவனிடத்தில் வேண்டினாள். சிவனும் அவள் வேண்டுதலை ஏற்று ரிஷபத்தைவாகனமாக ஏற்றுக் கொண்டார்.தருமத்துக்கு அழிவில்லை. தருமத்தையே வாகனமாக கொண்டவன் இறைவன் என்பதையே சிவபெருமானின் ரிஷபவாகனம் உணரத்துகின்றது.
விநாயகரின் தத்துவ விளக்கம்

கேள்வி : விநாயகப் பெருமான் அரவத்தை தனது இடுப்புக் கச்சையாக
அணிந்திருக்கும் தத்துவம் என்ன.!?

பதில்: மாயையினைத்  தமது விருப்பம்போல இயக்கும் வல்லமை பெற்றவர் என்பதாகும்.
கேள்வி . விநாயகரின் பெருச்சாளித் தத்துவத்தின் விளக்கம் என்ன..?
பதில்:  பெருச்சாளி இருளை விரும்பும், கீழறுத்துச் சென்று கேடு விளைவிக்கும். அதனால் அது அறியாமை அல்லது ஆணவ மலத்தைக் குறிக்கும். எனவே அப் பெருச்சளியைப் பிள்ளையார்  தமது காலின்கீழ்  கொண்டிருப்பது அவர் அறியாமையையும், செருக்கையும் அடக்கி ஆட்கொள்பவர் என்பதை உணர்த்துகின்றது.
கேள்வி  -  காகவடிவாக வந்து கமண்டல தணணீரை தட்டி ஊத்திய தத்துவம்
உணர்துவது எதனை!?


புதில்: அகத்தியரின்  கமண்டலத்தில் உள்ள காவிரி நதியினை காகவடிவத்தில் வந்த விநாயகப் பெருமான் கவிழ்த்துவிட இந்த நதி பெருகி பலசோலைகளைக் கடந்து  இறுதியில் கடலுடன் கலந்தது என்றகதை என்ன தத்துவத்தை விளக்குகின்றது என்றால், கமண்டலம் மனித உடல் அதற்கள் இருந்த காவிரிநீர் ஆனமசக்தி. ஆன்மா அறியாண்மை காரணமாக இவ்வுடலே நிலையானது என்று நினைத்திருக்கின்ற காலத்தில் குரு வந்து நினைப்பது பிழை நீ போகவேண்டிய தூரம் வெகுதொலைவு என்பதைப்போல காக வடிவத்தில் வந்த விநாயகர் கமண்டலத்தை கவிழ்த்துவிட. வெறும் உடம்புக்குள் இருந்த ஆன்மா இறுதியில் இறைவனைப்போய் சேருவது போல காவிரி  நீரானது இறைவனைப்போய் சேருகின்றது. என்ற பரந்த ஆழமான தத்துவத்தை அர்த்தப்புடுத்தி விளக்குகின்றது.
கேள்வி :  விநாயகநின் பெருவயிற்றின் தத்துவ விளக்கம் என்ன..?

பதில: பிரபஞ்சம் முழுவதும் இறைவனுக்குள் அடக்கம் என்பதை உணர்த்துகின்றது விநாயகருக்கு அமைந்துள்ள பெருவயிற்றின் தத்துவம்.
கேள்வி :  இருபெருங் காதுகளின் விளக்கம் என்ன.!?

பதில்: பலகோடி உயிர்களின் முறையீடுகளைக்  களைவதற்காகப் பெருங்ம் இரு காதுகளை கொண்டுள்ளார் என்பதாகும்.
கேள்வி  : பஞ்சபூத தத்துவத்தின் விளக்கம் என்ன..!?

பதில்: பஞ்சபூதங்களை தம்முள் அடக்கி ஆள்பவர் என்பதைக் காட்டுவதற்காக. அவர் மடித்து வைத்தள்ள ஒருபாதம் பூமியையும், சரிந்த தொந்தி நீரையும், அவருடைய மார்பு நெருப்பையும், இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம் காற்றையும், அதன் நடுவில் வளைந்திருக்கும் கோடு அகாயத்தையும் உணர்தி நிற்கின்ற னஎன்பதாகும்.
கேள்வி -  அவர் வைத்திருக்கம்  ஆயுதங்கள் எதை விளக்குகின்றன.!?

பதில்: விநாயகப் பெருமான் திருக்கரங்களில் ஏந்தியுள்ள ஆயுதங்கள் ஐந்தொழிலை உணர்த்துகின்றன. அவரது பாசம் படைத்தலையும், அங்குசம் அழித்தலையும், ஒடிந்த தந்தம் காத்தலையும், துதிக்கை மறைத்தலையும், மோதகம் அருளலையும் உணர்த்தி நிற்கின்றன.
கேள்வி : கணபதி தத்துவம் என்றால் என்ன..!?

பதில்:கணபதி தத்துவ விளக்கம் யாதெனில்  கணபதி
என்ற சொல்லில் உள்ள (‘க்’) என்ற எழுத்து
ஞானத்தைக் குறிக்கின்றது. ‘(ந’)  என்ற எழுத்து மோட்ஷத்தை குறிக்கின்றது.(‘பதி’) என்பது பரம்பொருளைக் குறிக்கின்றது. அதாவது தன்னை வழிபடுவோருக்கு ஞானத்தையும் மோட்ஷத்தையும் கொடுப்பவர் கணபதியாவார் என்பதேயாகும்.

கேள்வி :  விநாயகருக்குமுன் நெற்றிப்பொட்டில் குட்டிக்கொள்வது, தோப்புக்கரணம்
போடுவதின் விளக்கம் என்ன?


பதில்: விநாயகருக்கு முன் நெற்றிப்பொட்டில் குட்டிக் கொள்வதற்கான தத்துவ விளக்கமானது நெற்றிப் பொட்டில் குட்டிக்கொள்வதால் குண்டலினி சக்தி தட்டி எழுப்பப் படுகின்றது. தொடர்ந்து இறைவழிபாட்டில் ஈடுபடுவதற்கு எற்ற முறையில் மனதைக் கட்டுப்படுத்துகின்றது இதைவிட மனிதரின் நெற்றிப்பொட்டில்தான் உடலின் சகல நரம்புகளும் ஒன்றிணைவதால் ஞாபக சக்தியும் பலப்படுகின்றது. உடலுக்கும் உற்சாகம் தருகின்றது. தோப்புக் கரணம் போடுவதற்கான காரணம.; அகந்தையும், ஆணவமும்  அழிவதைக் காட்டுவது என்பதும், உடல் இயக்க ரீதியாக பெரும்பயன் தருகின்றது என்பதுவும் ஆகும்.
கேள்வி :  விநாயகரின் திருக்கரங்கள் உணர்த்துகின்ற தத்துவங்கள் என்ன?


பதில்:சிவாய நம” என்ற திருவைந்தெழுத்தை உணர்த்துவதாக விநாயகரின் அங்குசம் தாங்கிய வலக்கை, சிகரம், பாசம் பற்றிய இடக்கை வகரம், தந்தம் ஏந்திய வலக்கை யகரம், மோதகம் உள்ள இடக்கை நகரம், துதிக்கை மகரம், இவ்வாறு “சிவாய நம” என்ற திருவைந்தெழுத்தை விநாயகரின் ஐந்து திருக்கரங்களும் உணர்த்துகின்றன.


கேள்வி : சிதறுதேங்காய் உணர்த்தும் தத்துவம் என்ன?

பதில்: விநாயகருக்கு முன் சிதறு தேங்காய் உடைப்பது என்பது இரண்டு தத்துவங்களை கொண்டுள்ளது. ஒன்று மனிதருக்குள் இருக்கின்ற தான் என்ற அகம்பாவ உணர்ச்சி தேங்காயின் ஓட்டைப்போல உறுதியானது. அது தேங்காயைப்போல உடைந்து சிதறிவிட்டால் இனிய நீரும், வெண்மையான தேங்காயும், கிடைப்பதைப் போல. பக்குவமான ஞான உணர்வு நமக்குள் கிடைக்கின்றது. இப்படி நாம் விநாயகருக்கு முன் நாம் பக்குவம் பெற முயலுவதாக உணர்த்துவது ஒரு தத்துவம். இரண்டாவதாக இறை சன்னிதானத்தில் தேங்காய் உடைக்கும் போது தேங்காய் சிதறுவதுபோல்  நம் மனக் கவலைகளும் சிதறிப்போகும் என்பதாகும்.


கேள்வி : அறுகம்புல்லின் தத்துவம் என்ன ?


பதில்: தான் என்ற அகங்காரம் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே விநாயகப்பெருமான் எளிதான அறுகம் புல்லை விரும்பி ஏற்கின்றார். மேலும் அந்த அறுகம்புல் ஒரே காம்பில் மூன்று முனைகள் உடையதாக இருக்கவேண்டும் என்றும். மனம், வாக்கு, காயம். ஆகிய மூன்றையும் கூர்மைப்படுத்தி இறையருளை பெறவேண்டும் என்பதை காட்டவேயாகும்.


தொடரும்:
தொகுப்பு: பொன்னண்ணா

கேள்வி: நடராஜர் வடிவத்தின் தத்துவம் என்ன?
பதில்: நடராஜ வடிவத்தின் தத்துவம் உலகைப் படைத்து, அதை தனது பொற்கரத்தால் காத்து, அக்கினி தாங்கிய கரத்தால் தீமைகளை எரித்து, ஊன்றிய திருவடியின் அடியில் அநுக்கிரகம் செய்வதுமாகும்

சிவனின் வருகை...

மந்திரங்களைப்பற்றி தற்சமயம் நான் கொண்டுஇருக்கும் எண்ணம் வேறு, இருப்பினும் நான் கடந்து வந்த பாதையை தான் இங்கு எழுதுகிறேன், "

"யாரும் தவறாக என்னை எண்ண வேண்டாம். "

எமக்கு கிடைத்த அமான்ஷ்ய சக்தியைப்பற்றி எழுத முயற்சித்த போது, பல தரப்பட்ட பழைய நினைவுகள் எம்மைசுற்றிசுற்றி வந்து.. ஒரு மாதிரியாகி போய்விட்டது. சித்தர்களின் உத்தரவு கிடைக்கவில்லைபோலும் என உள்மனது கூறுகிறது.

இருப்பினும், எம் வாழ்வில் அந்த ஆதி சித்தன் எம்மை தேடி வந்ததை இன்று  பகிர்ந்து கொள்கிறேன்.

இது நடந்தது 2004  ம் ஆண்டு.
எங்கள் ஊரில் உள்ள சிவனாலயம் மிகச்சிறப்பு வாய்ந்தது. கைலாசநாதர் மற்றும் காமாட்சி அம்மனுடன் உள்ள ஒரு சின்ன கோவில் ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்ப்பட்டது , சோழர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இது விளங்கியது .

சதா காலம் சிவனின் திருவிளையாடல்கள் பற்றி பேசிக்கொண்டு இருந்ததொரு காலம்( வேலை வாய்ப்பு இல்லாததனால் ) . நன்று படித்தும் ,வேலை கிடைக்காத விரக்தியால் ஆன்மிகத்திற்கு ஈர்க்கப்பட்ட காலம் அது.   எமது நண்பர்கள் ஈசா யோகத்தில் பயிற்சி பெற்றவர்கள் நானோ எதுவும் தெரியாத ஆனால்  சிவன் மேல் மட்டும் பித்து கொண்டவனாக இருப்பவன். பல நல்ல ஆத்மாக்களின் நட்புறவு கிடைத்தால் எங்கள் மனம் எப்போதும் சிவனை நோக்கியும் , சத்சங்கத்திலும் இருக்கும்.


அன்று தான், வாழ்க்கையின் மிக சிறந்த நாளாக கருதுகிறேன், எம்மை எம்பெற்றோர்கள் இந்த தரணிக்கு அறிமுகப்படுத்திய(பிறந்தநாள்) நாளாகும்.
வழக்கம் போல் எல்லாரும்( நண்பர்களுடன் ) சாயங்காலம் கோவிலுக்கு சென்றோம்.   எப்போதும் எம் தந்தையை சுத்த தமிழால் அர்ச்சனை செய்வது வழக்கம்.  அன்றும் அதுப்போல் நடந்தது.  அந்த அர்ச்சனைக்கு நிகர் இந்தவுலகில் எதுவும் கிடையாது . அவனே வந்து வழிய கேட்கும் மந்திரம் அது .  இதனை பல இடங்களில்( இமய மலையிலும் கூட) பரிச்சித்து பார்த்தவன் என்ற முறையில் கூறுகிறேன்.


மனதில் எம்தந்தை நினைத்து , பின்வருமாறு கூறினேன்.
ஐயா,
  எனக்கு இன்னைக்கு பிறந்த நாள்,   வாழ்த்து சொல்ல எல்லாரும் வந்தார்கள் உம்மை தவிர.
என் மேல் உங்களுக்கு எண்ண கோபம், என்னை ஏன் வந்து பார்க்க மாற்றிங்க ,இருந்தாலும் நீங்க ரொம்ப பெரியவங்க , உலக மக்களை காக்கும் மிகப்பெரிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது. இருப்பினும் இந்த பிள்ளையை பார்க்க ஒரு முறை  வாங்க என்று கூறினேன்,  உங்களால் நேரில் வர முடியலனா கூட  பரவாயில்லை  கனவிலாவது வாங்க என்று கூறினேன்,


பிரார்த்தனை முடிந்து , என் நண்பர்களிடம் கூறினேன் , இன்று எம் தந்தை எம்மை பார்க்க வருவார் என்று.

எல்லாரும் சிரித்தார்கள் , இந்த சிலை (சிவலிங்கம்) எப்படி வரும் என்று நன்றாக நக்கலடித்தார்கள் . என் மனமோ சித்தனை நோக்கி , அப்பா இவர்களுக்கு நல்ல என்ணத்தை கொடுக்க வேண்டும் , அதுக்காவது வாங்க என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்  .