September 01, 2023

 கண்பார்வை குறைபாட்டை நீக்கும் வெள்ளீஸ்வரர் திருத்தலம்:-


 

வெள்ளீஸ்வரர் திருத்தலம்

சுக்ரன் வழிபட்டு பேறுபெற்ற திருத்தலங்களில் முக்கியமானது, காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு என்ற ஊரில் உள்ள வெள்ளீஸ்வரர் திருத்தலம் ஆகும். நவக்கிரகங்கள், இறைவனை வழிபட்டு சிறப்பு பெற்ற திருத்தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றுள் முக்கியமானது அசுரர்களின் குருவாகவும், நவக்கிரகங்களில் குருவிற்குப் பிறகு வலிமை கொண்டவராகவும் விளங்கும் சுக்ரன் ஆவார். ‘சுக்ராச்சாரியார்என்பதையே சுருக்கமாகசுக்ரன்என்று அழைக்கிறோம். இந்த சுக்ரன் வழிபட்டு பேறுபெற்ற திருத்தலங்களில் முக்கியமானது, காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு என்ற ஊரில் உள்ள வெள்ளீஸ்வரர் திருத்தலம் ஆகும். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்த இந்த திருத்தலத்தில்வெள்ளீஸ்வரர்’ (பார்க்கவேஸ்வரர்) என்ற பெயரில் இறைவன் அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரை காஞ்சி காமாட்சி அம்மனே அனைத்து சிவாலயங்களுக்கும் மூலவராக பாவிக்கப்படுவதால், இங்கு அம்மனின் பாதம் மட்டும் காணப்படுகிறது. தலவிருட்சமாக மாமரமும், தீர்த்தமாக சுக்ர தீர்த்தமும் உள்ளன. இந்த ஆலயத்தின் வரலாற்றை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

ஒரு சமயம் சிவபெருமான் கயிலாயத்தில் தனித்து அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த அம்பாள், விளையாட்டாக சிவனின் கண்களை தன் கைகொண்டு மூடினாள். சந்திரனும், சூரியனுமே சிவபெருமானின் இரு கண்களாக இருப்பதால், அம்பாள் கண்களை மூடிய அந்த நொடியே இந்த உலகம் இருளில் மூழ்கிப்போனது. உலக உயிர்கள் அனைத்தும் துன்பத்தில் ஆழ்ந்தன. இதனால் அம்பிகை மீது கோபம்கொண்ட சிவன், அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சாபம் கொடுத்துவிட்டார். அம்பிகை, தவறை மன்னித்து அருளும்படி சிவனிடம் வேண்டினாள். சிவபெருமானும் அம்பாள் மீது இரக்கம் கொண்டு, “நீ பூமியில் என்னை நினைத்து தவம் இருந்து வா.. நான் உரிய காலத்தில் உன்னை கயிலாயம் அழைத்து வருவேன்என்று அருளினார். அதன்படி பூமியில் பிறந்த அம்பாள், இத்தலத்திற்கு வந்து பஞ்சாக்னியில் நின்று தவம் செய்தாள். அவளுக்கு அருள்புரிவதற்காக சிவன், இத்தலத்திற்கு வந்தார். இதனிடையே, சுக்ராச்சாரியாரும் இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் மகாவிஷ்ணுவால் கண்களை இழந்து, அந்த கண்களைத் திரும்பப் பெறுவதற்காக இங்கே தவம் செய்துகொண்டிருந்தார்.

மகாவிஷ்ணு, வாமனராக அவதரித்தபோது மகாபலி சக்கரவர்த்தியிடம் சென்று மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை உணர்ந்த சுக்ராச்சாரியார், தானம் கொடுக்க வேண்டாம் என்று மகாபலியை தடுத்தார். அதையும் மீறி நீர் இருக்கும் தாரை பாத்திரத்தை எடுத்து தானம் கொடுக்க முன்வந்தான், மகாபலி. அப்போது தாரை பாத்திரத்தின் நீர் வரும் பாதையை வண்டாக மாறி அமர்ந்து தடுத்தார், சுக்ராச்சாரியார். அதை அறிந்த வாமனர், தர்ப்பை புல்லை எடுத்து வண்டு இருக்கும் இடத்தில் குத்தினார். இதில் வண்டாக இருந்த சுக்ராச்சாரியாரின் கண்பார்வை பறிபோனது. இழந்த கண்பார்வையை மீட்பதற்காகவே சுக்ராச்சாரியார், இத்தலத்தில் தவம் செய்துகொண்டிருந்தார்.

இத்தலத்தில் அம்பிகைக்கு காட்சி கொடுக்க வந்த சிவன், முதலில் சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார். அப்போது அவர் சிவபூஜை செய்யவே, சிவனால் இங்கிருந்து செல்ல முடியவில்லை. எனவே, இங்கிருந்தபடியே அம்பிகையிடம் அசரீரியாக காஞ்சிபுரத்தில் தவம் செய்யும்படியும், அங்கு வந்து காட்சி தருவதாகவும் கூறினார். அதன்படி அம்பிகையும் காஞ்சிபுரம் சென்று தன் தவத்தை தொடர்ந்து, சிவனருள் பெற்றாள். சுக்ராச்சாரியாருக்கு காட்சி தந்த சிவன் இத்தலத்தில் எழுந்தருளினார். இக்கோவிலில் சதுர பீடத்துடன் சிவலிங்கம் உள்ளது. கருவறைக்கு வெளியே துவாரபாலகர்கள் கிடையாது. சுக்ராச்சாரியாருக்குவெள்ளிஎன்றும் பெயருண்டு. எனவே அவருக்கு காட்சி கொடுத்த ஈசன், ‘வெள்ளீஸ்வரர்ஆனார். சுவாமி சன்னதி எதிரே, அம்பாள் பாதம் மட்டும் இருக்கிறது. இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்பவர்கள், சன்னிதி எதிரே தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இந்தக் கோவில் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.  

சென்னையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, மாங்காடு திருத்தலம். சென்னையில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.

கண்பார்வை குறைபாட்டை நீக்கும் வெள்ளீஸ்வரர் திருத்தலம்

https://www.maalaimalar.com/devotional/temples/2020/10/20065710/1995755/Velleswarar-Temple-Mangadu.vpf
கண்பார்வை குறைபாட்டை நீக்கும் வெள்ளீஸ்வரர் திருத்தலம்

https://www.maalaimalar.com/devotional/temples/2020/10/20065710/1995755/Velleswarar-Temple-Mangadu.vpf
கண்பார்வை குறைபாட்டை நீக்கும் வெள்ளீஸ்வரர் திருத்தலம்

https://www.maalaimalar.com/devotional/temples/2020/10/20065710/1995755/Velleswarar-Temple-Mangadu.vpf

September 25, 2022

சிவபெருமானின் சிறப்புகள்

சிவபெருமானின் சிறப்புகள்

சிவபெருமானின் சிறப்புகள்

சிவபெருமானின் சிறப்புகள் பற்றிய ஓர் பார்வை

சிவம் என்றால் அன்பு. கடவுள் சிவனை சிவம் என்றும் சிவபெருமான் என்றும் பரவலாக அழைக்கின்றனர்.

இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினார். பின்னர் இருவரும் சேர்ந்து ஆனந்த தாண்டவமாடி அண்ட சராசரங்களை உருவாக்கினார். தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் என்னும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார்,

சிவன் என்றால், தமிழில் சிவந்தவன். வடமொழியில் சிவம் என்றானது. யோகநிலையில் ஆழ்ந்திருப்பதால் யோகி என்றும் அழைக்கின்றனர். அஷ்டமா சித்திகளில் வல்லவர் என்பதால் இவரைச் சித்தன் என்றும், சுடுகாட்டில் மனம் பேதலித்துப் பேய்களுடன் ஆடுபவராகச் சித்தரிக்கப்படுவதால் பித்தன் என்று குணங்களின் அடிப்படையில் அழைக்கப்படுகிறார்.

சிவபெருமான் பிறப்பும் இறப்பும் இல்லாதவர். மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும், பிரளய காலத்தில் அனைத்தையும் அழித்துத் தன்னுள் ஒடுக்கிச் சிவன் மட்டும் நிலையாக இருப்பதாகச் சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்துச் சிவ பெருமானை வழிபட்டதால் சிவ லிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திரு நாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

கயிலையில் பார்வதி தேவி ஒரு குழந்தையைத் தோற்றுவிக்கிறார். சிவபெருமானை அறியாத அக்குழந்தை அவருடன் சண்டையிட்டு தலையை இழக்கிறது. பார்வதி தேவியின் வேண்டுகோளை ஏற்று யானை முகம் பொருத்தி அம்மகனை மீட்பதாக இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன.

சூரன் என்ற அரக்கனை அழிக்கச் சிவபெருமான் தனது ஆறுமுகங்களிலுள்ள நெற்றிக் கண்களிலிருந்து நெருப்புப்பொறியை உருவாக்கினார். அந்த ஆறு நெருப்புப் பொறிகளையும் வாயு பகவான் சரவணப்பொய்கை எனும் ஆற்றில் விட்டார்.

அந்த நெருப்புப் பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறின. அவற்றைக் கார்த்திகைப் பெண்கள் வந்து வந்தனர். அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி அரவணைத்த பொழுது ஆறு முகங்களைக் கொண்ட முருகனாக அக்குழந்தை மாறியது என்று இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன.

அன்பாக அருட்பெருஞ்ஜோதியாக, இன்பமாக மங்களமாக மறைபொருளாக எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்தப் பரமனைக் கடல் கொஞ்சும் குமரி முதல் கைலைப்பனிமலை வரை ஆலயங்கள் அமைத்து வழிபட்ட பெருமை நமது புண்ணிய பூமிக்கு உண்டு.

சிவ வழிபாட்டின் சிறப்புகளை வேதங்கள் விளக்குகின்றன. வேதங்களில் சிவபெருமான் ருத்ரன் என்று அழைக்கப்படுகிறார். ருத்ரன் என்றால் துன்பங்களைத் துடைப்பவன் என்று அர்த்தம். பசுபதி, பூதபதி பூதநாதர் என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு.

சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்களில் உள்ளார்.

அருவத்திருமேனி சித்தர் என்றும், அருவுருவத்திருமேனி பரம்பொருள் என்றும், உருவத்திருமேனி பிரவிருத்தர் என்றும் அழைக்கப்படுகிறது.

தடத்தநிலையில் ஈசன் கொள்ளும், அறுபத்து நான்கு வடிவங்கள் ஆகமங்களில் விளக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிறப்பான இருபத்தைந்து சிவமூர்த்தங்கள் மகேஸ்வர  மூர்த்தங்கள் என அழைக்கப்படுகின்றன.

சர்வேஸ்வரனைச் சரணடைவோம், கிருமித் தாக்குதலின்றி விடுபடுவோம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

July 10, 2013


!!हम आप और देश!!

इस ब्लॉग में मेरा उद्देश्य है की हम एक आम नागरिक की समश्या.सभी के सामने रखे चाहे चारित्रिक हो या देश से संबधित हो !आज हम कई धर्मो में कई जातियों में बटे है और इंसानियत कराह रही है, क्या हम धर्र्म और जाति से ऊपर उठकर सोच सकते इस देश के लिए इस भारतीय समाज के लिए ? सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः। सर्वें भद्राणि पश्यन्तु मा कश्चिद दुःख भाग्भवेत।। !! दुर्भावना रहित सत्य का प्रचार :लेख के तथ्य संदर्भित पुस्तकों और साइटों पर आधारित हैं!!

!!भगवान शिव और विश्व का इतिहास!!

Lord Shiva and world history


பஞ்ச முகம் கொண்ட சிவன்

பஞ்ச முகம் கொண்ட சிவன்




சிவனின் ஐந்து முகங்கள் அனைவரும் அறிந்ததே. அதிலுள்ள ஒவ்வொரு முகத்தின் பெயரும் அதன் வடிவமும் அனைவரும் அறியவே இந்த பதிவு.

ஒரு முகம் - சிவ சொருபம்

இரண்டு முகம் - சிவன் பார்வதி

மூன்று முகம் - ப்ரம்மா, விஷ்னு, சிவன் மூண்றையும் நெற்றிக்க்ண்ணில் ஆட்கொள்பவர்

நான்கு முகம் - ப்ரம்மா

ஐந்து முகம் - மேற்கண்ட நான்கு முகங்களையும் ஆட்கொண்டு ஐந்தாவது சொருபத்துடன் சேர்ந்து சதாசிவன் என போற்றப்படுகிறது.




பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆட்கொள்வதனாலும் இவரை ஐமுகக் கடவுள் என்று போற்றுகின்றனர்.

இதிலே அனைத்து தெய்வங்களின் அம்சங்களும் அடங்கிவிடுகிறது.



இதே போல அந்ததந்த முகம் கொன்ட ருத்ராட்சங்களை அணியும் போது அந்த சொருப தெய்வங்கள் நம்மில் சேர்ந்து அருளை பொழிகின்றன.


ஸ்ரீ சிவ காயத்ரி மந்திரம்




ஓம் தத் புருசாய வித்மஹே மகாதேவனாய தீமஹீ
தந்நோ ருத்ர பிரசோதயாத். 


என்ற சிவனின் காயத்ரி மந்திரத்தை இந்த தமிழர் திருனாள் முதல் ஓதி அவன் அருள் பெற்று அவனின் பாத கமலங்களை நோக்கி செல்ல அவனை வணங்கி அவந்தாள் பணிகிறேன்.