August 10, 2011

முத்தரசநல்லூர் மாற்றங்கள் 2009 - 2010

கடந்த ஆண்டில் முத்தரசநல்லூர் இல் பல குறிப்பிட தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன அவை

*நமது ஊரில் அகரஹர்ரம் செல்லும் வழியில் உள்ள தாமரை குளம் சுற்றிலும் சுவர் எழுப்ப பட்டு புதிப்பிக்க பட்டுள்ளது, மற்றும் படிதுறை அமைக்க பட்டுள்ளது.
*கடைவீதியில் குடமுருட்டி சேகர் டவர்ஸ் கட்டப்பட்டு உள்ளது இதனால் நமது ஊரின் கடை வீதியில் மேலும் பல கடைகள் வரும் என எதிர்பார்கலாம், மேலும் ஆக்ராஹாரத்தில் உள்ள SOUTH INDIAN BANK இந்த டவர்சுக்கு மாற்ற பட உள்ளது.
*மேலும் நமது ஊரின் RAILWAY STATION புதுபிக்க பட்டு நாற்காலிகள் போட பட்டுள்ளன.
*முத்தரசனல்லுரில் இருந்து பலூர் செல்லும் சாலையை புதுபிக்கும் பணி நடந்து கொண்டு இருக்கிறது.
*காவேரி நகரில் புதிதாக விளையாட்டு பூங்கா அமைக்க பட்டுள்ளது
*கடைவீதியில் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் நூலகம் கட்டப்பட்டுள்ளது.




MUTHARASANALLUR RAILWAY STATION(OLD VIEW)
VELLANTHERU MARIYAMMAN KOVIL
SPY WATER COMPANY
SOUTH INDIAN BANK
RAMANATHAPURAM WATER PLANT
AGRAHARAM NARAYANAN KOVIL
TAMARAI KULAM PUDHUPIKUM PANI
AGRAHARAM SIVAN KOVIL
MUTHARASANALLUR POST OFFICE
SCHOOL

mutharasanallur pics








முத்தரசநல்லூர் சிவன் கோவில் வரலாறு



முத்தரசநல்லூர் சிவன் கோவில் வரலாறு

முத்தரசநல்லூர் சிவன் கோவில் வரலாறு : முத்தரசனல்லுரை ஆட்சி செய்து வந்த முத்தரசன் என்ற மன்னர் சிவபெருமானின் மீது மிகுந்த பக்தி வைத்திருந்தார் அதனால் அவர் தினமும் அதிகாலையில் முசிறி அருகே உள்ள திரு ஈங்கோய் மலைக்கு சென்று ஈங்கோய் நாதரையும் பின்பு குளித்தலை அருகே உள்ள கடம்பவநேஸ்வரரையும் அதன் பின்பு சுவாமி மலைக்கு சென்று ரத்னக்ரிஸ்வரரையும் வணங்கிய பின்பு தான் தனது அன்றைய வேலைகளை தொடங்குவர், அனால் அவருக்கு வயதான பின்பு தினமும் அதிக தூரம் சென்று இம்மூன்று சிவபெருமானையும் வழிபட முடியவில்லை எனவே இந்த மூன்று கோவில்களிலும் மண் எடுத்து வந்து முத்தரசனல்லுரில் சிவன் கோவிலை கட்டினான், இந்த கோவிலின் சிறப்பே இந்த கோவிலில் திரு ஈங்கோய் மலை ஈங்கோய் நாதர, கடம்பவநேஸ்வரரையும் மற்றும் சுவாமி மலை ரத்னக்ரிஸ்வரர் ஆகிய மூன்று சிவலிங்கங்களும் ஒரே இடத்தில இருப்பதுதான்

முத்தரசநல்லூர் பயண விவரங்கள்


முத்தரசநல்லூர் பயண விவரங்கள்

முத்தரசநல்லூர் திருச்சில் இருந்து 7k.m தொலைவில் உள்ளது , இதன் பயண தூரம் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 20 நிமிடம் , திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரயில்களும் இயக்க படுகின்றன , கரூர் , ஈரோடு , passanger ரயில்கள் இங்கு நின்று செல்லும் , திருச்சில் இருந்து முதல் ரயில் நிறுத்தமே முத்தரசநல்லூர், பேருந்து மார்க்கமாக வருபவர்கள் ஜீயபுரம் , முக்கொம்பு , பேட்ட வாய் தலை , குளித்தலை ஆகிய பேருந்துகள் மூலமாக முத்தரசநல்லூர் வந்தடையலாம் .சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து முத்தரசநல்லூர் வருவதற்கு தற்போதைய பேருந்து கட்டணம் 3 ரூபாய் , ரயில் கட்டணம் 3 ரூபாய் , ஆட்டோ கட்டணம் 70 ரூபாய் ஆகும்
 
முத்தரசநல்லூர் (Mutharasanallur) திருச்சி மாநகரத்திற்கு மேற்கே 7 கி.மீ தொலைவில் காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு
மிக்க ஓர் கிராமம் ஆகும். பண்டைய மக்களின் வாழ்க்கை குறிப்புகள் உள்ள
பழைமையான கல்வெட்டுக்களை கொண்ட கோவில்கள் இங்கு காணப்படுகிறன. இக்கல்வெட்டுக்கள் இந்திய தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு
வருகிறன.


வரலாறு

முன்னர் இப்பகுதியை அண்டி ஆட்சி செய்ததாக கூறப்படும் முத்தரசன் என்ற
குறுநில மன்னனின் பெயராலேயே இந்த ஊர் முத்தரசநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஊர் மிக பழமையான கிராமம். இங்குள்ள தொடருந்து நிலையம் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புகைவண்டி நிலையம்,
திருச்சி - கரூர் தடத்தில் மூன்றாவது நிலையமாகும்.
(பாலக்கரை, கோட்டை, முத்தரசநல்லூர்). அருகே உள்ள சிற்றூர்கள்
ஜீயபுரம், அல்லூர், பழூர், கூடலூர், முருங்கப்பேட்டை,
கம்பரசம்பேட்டை ஆகியவை.

[தொகு]முன்னாள் ஊராட்சி தலைவர்கள்

  • திரு. அ. மருதநாயகம்
  • திரு. சீனிவாசன்
  • திரு. சீ. இராஜசேகரன்
  • திரு. என். காமராஜ்


தற்போதைய ஊராட்சி தலைவர்

  • திருமதி. லலிதா காமராஜ்


அரசியல்

அரசியல் பிரிவுகளில், இந்த கிராமம் ஓர் ஊராட்சி.
அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது. ஸ்ரீரங்கம் வட்டத்தின்
ஒரு பதியாக விளங்குகிறது.


மக்கள்

சுமார் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கின்றனர்.
இவர்களின் முக்கிய தொழில் விவசாயம்.
நெல், கரும்பு, வாழை, எள், உளுந்துஆகியன முக்கிய பயிர்களாகும்.


விழாக்கள்


மாரியம்மன் திருவிழா

சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் ஒன்றாக இணைந்து, வரி வசூலித்து
7 நாட்கள் திருவிழா அம்மனுக்கு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த
திருவிழாக்களின் வரவு செலவு கணக்குகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக
பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடக்தக்கது. மேலும் இந்த
திருவிழாவின் முடிவில் பெளர்ணமி வெளிச்சத்தில், காவிரி ஆற்றின்
மணலில் சுமார் 25 ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் வழக்கப்படுகிறது.


மதுரகாளியம்மன் திருவிழா

இந்த திருவிழா, 1 வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில்
நடைபெறுகிறது. பாம்பு ஆட்டம், மஞ்சள் நீர் விளையாட்டு பொன்றவை
இவ்விழாவின் சிறப்பு.


புள்ளியியல் குறிப்புகள்

  • வட்டம்: ஸ்ரீரங்கம்
  • ஒன்றியம்: அந்தநல்லூர்
  • பரப்பளவு: ____ ச.கி.மீ
  • நன்செய் நிலம்: ____ ஏக்கர்
  • புன்செய் நிலம்: ____ ஏக்கர்
  • மக்கள் தொகை: சுமார் 10 ஆயிரம்
  • முக்கிய தொழில்: விவசாயம்
  • சாகுபடி பயிர்கள்: நெல், கரும்பு, வாழை, உளுந்து, எள்
  • துவக்கப் பள்ளிகள்: 2
  • நடுநிலைப் பள்ளிகள்: 1 (ஆதாரம்:

No comments:

Post a Comment