August 12, 2011

வேலூர்
சிவன்-பார்வதி திருக்கல்யாணம்
 


குடியாத்தம், ஜூலை 3: குடியாத்தம் ஆர்.எஸ். நகரில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
 இக் கோயில் திருவிழா கடந்த மாதம் 14 ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 29 ஆம் தேதி தேரோட்டமும், 30 ஆம் தேதி பூப்பல்லக்கும் நடைபெற்றது.
 சனிக்கிழமை சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், திருமண வைபோக விருந்தும் நடைபெற்றது.
 நகர்மன்ற உறுப்பினர் என்.மாரியப்பன், அரசு மருத்துவர் எம்.மாறன்பாபு, கோயில் நிர்வாகிகள், விழாக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

No comments:

Post a Comment