September 15, 2011

காதலாகிக் கசிந்து




நமச்சிவாய வாழ்க.சிவனடியார்களில் சரித்திரத்தில் உள்ளத்தை உருகவைப்பவர் நந்தனார்.வாழ்க்கையில் எப்படியாவது ஒருதரம் சிதம்பரத்தில் நடமாடும் நடராஜனை கண்டுவிடவேண்டும் என்பதில் ஆழ்ந்த பற்றுள்ளவர்.பல்வேறு இடையூறுகளை தாண்டி சிதம்பரம் வந்து விடுகிறார். தூரத்தில் இருந்தபடியே தில்லைக்கூத்தனின் கோயிலின் கோபுரத்தை பார்த்து பரவசமாகி கண்டறியாதன கண்டேன் என்று மனதில் உவகை பொங்க மெய்சிலிர்த்து கணகளில் ஆனந்த வாரி சொறிய பாடுகிறார்.இதுதானோ தில்லைத் தானம் என்ற ஊர்.ஆஹா இத்தனை நாள் தெரியாமல் வழ்க்கையை வீணடித்து விட்டேனே. அந்தத்தெயவம் இந்தத்தெய்வம் என்று ஒரு நிலை கொள்ளாமல் அலையும் நேயனை இதோ பிடி உனக்கு கதிஎன்று கைகாட்டி அழைத்திடும் கருணாநிதி அவன்

இந்த உலகத்தில் கயிலை என்று சொன்னால் அது சிதம்பரம் என்று எல்லோரும் கூறுகிறார்கள் ஆனால் நான் இதுவரை அதை ஒருதடவை கூட சிறப்போடு பார்த்ததில்லை. அப்பேற்ப்பட்ட தில்லையா இது இங்கேயா என் ஈசன் இருக்கிறான் என்று பாடுகிறார்.திருமதிகள். ரஞ்சனி காயத்ரி குரலில் கேட்டு, பார்த்துதான் பாருங்களேன். குரலின் குழைவும் ராகங்களின் பங்கீடும் மிக நேர்த்தியாக உள்ளது

கோபலகிருஷ்ண பாரதியின் பாடல் இது. பக்தியும் பணிவும் தாபமும் வெளிப்படும் விதம் கேட்பவர் மனதை உருகவைக்கும். திருவாசகத்துக்கு உருகாதவர்கூட நந்தனின் பாட்டுக்கு உருகுவார்கள்

ராகம்;- ஷ்ண்முகப்பிரியாகாதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது

வேதநான் கினும் மெய்பொருள் ஆவது

நாதன் நாமம் நமச்சிவாயமே

ஆடிய பாதனாய் நின்ற அம்பலத்தானை

நாடிய நேசற்கு நற்கதி நல்கியானை

கூடிய கரமும் நாவில் துதியுமாய்

தேடிய வந்தேன் புகல்


ராகம்:- பெஹாக் தாளம்:-ஆதி


பல்லவி

இதுதனோ தில்லைத்தலம்

இத்தனை நாளும் அறியேனே.....(இதுதானோ)

அனுபல்லவி

அதுவோ இதுவோ என்று அலைந்திடும் நேயனை

கதிதருவேன் என்று கைகாட்டி அழைத்திடும்...(இதுதானோ)

சரணம்

காசினியில் இதை கயிலை என்று எல்லோரும்

பேசக்கேட்டதே அன்றி பேணிப் பார்த்ததில்லை ....(இதுதானோ)

No comments:

Post a Comment