September 17, 2011


நாலு மண்டை பிரம்மனின் மகனான நாரைவாய் நாரதருக்கு ஆளுங்கட்சி மாநாட்டுக்கு சென்றபோது ரெண்டு குவார்டர் ஒத்தைக் கண்ணன் (ஓல்ட் காஸ்க்) சரக்கு கிடைத்தது ! ஒன்றை விழாப் பந்தலிலேயே பிரியாணி சகிதமாக குடித்த நாரதர் உபரியாக இருந்த சரக்கை நைசாக பட்டாப் பட்டியில் ஒளித்துக் கொண்டார் ! யார் குடியைக் கெடுக்கலாம் என்று யோசித்தவாறே மேல் லோகத்தை சுற்றி ஒரு ரவுண்ட் வந்தார் ! வைகுண்டத்தில் ஜலக் கிரீடை போரடித்து சர்ப்ப கிரீடை நடந்தேறிக் கொண்டிருந்தது. இதற்க கிடையில் புகுந்தால் நாராயணன் மெர்சிலாகி நாகப் பாம்பை தூக்கி தன் மீது ஏவிவிட்டால் என்னாவது என்று பயந்த நாரதர் முன்னும் பின்னும் மூடிக் கொண்டு அடுத்த தெருவுக்குள் நுழைந்தார் . அங்கு வீட்டில் தன் தந்தை நாலு தலையன் சரசுவை கிதார் வாசிக்கவிட்டு ஜாக்சனின் "மூன் வால்க்" நடனத்தை பயிற்சி செய்து கொண்டிருந்ததைக் கண்டு குமட்டலும் , வாந்தியும் ஏற்பட்டதால் குடும்பமே குதூகலமாய் சிரித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்த கைலாசத்துக்குள் காலடி எடுத்து வைத்தார் .
 
அங்கு மானாட மயிலாட பார்ட் 9 ன் பிரமாண்டமான இறுதிப் போட்டி சிவா பெருமான் தலையில் சாரி தலைமையில் நடந்து கொண்டிருந்தது . தொடர்ந்து ஆறாவது பாட்டுக்கும் போட்டியாளர்களை ஆடவிடாமல் தானே கலா (மாஸ்டர் ) ஆடிக் கொடிருக்க சிவ பெருமான் மைக்கில் சந்தியா தாண்டவத்தையும் ஊர்த்தவ தாண்டவத்தையும் சேர்த்து ஒரு குத்து போடுமாறு கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார். குஷ்பூ ஆடுவதைப் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த முருகனும் புள்ளையாரும் கடுப்பின் உச்சத்துக்கே சென்றனர் ! ஒரு கட்டத்தில் பொறுமைஇழந்த புள்ளையார் அந்த நடனக்குழுவை ஆட்ட மேடையுடன் அலேக்காக தூக்கி பூலோகத்தில் வீசி எறிந்துவிட்டார் !

சிவ பெருமான் மூனாங்கண்ணில் பூவிழுந்து பார்வை மங்கலாகிவிட்ட படியால் , நெருப்பெல்லாம் வருவதில்லை எனவே தன் கோவத்தை அடக்கிக் கொண்டு நின்றார்.

சூழ்நிலையை உணர்ந்த நாரதர் நல்லா ஊதிவிட்டா குடும்பத்துல கும்மி கொட்டிட்டு ஓடிடலாம்னு பிளான் பண்ணினாரு !

 


சிவ பெருமான் : டேய் மாப்ள என்னடா இந்த பக்கம் ? லைட்டா மப்புல இருப்ப போல !

நாரதர் : மகா தேவா ! நீர் நாயினும் கூரிய மூக்கினர் !

சிவ பெருமான் : நான்லாம் மூடிய ஓடைக்காமலே மொத்த சரக்கையும் மூக்குல உறிஞ்சற பய ! எனக்கேவா ? ஹா ஹா ஹா

பார்வதி : யோவ் ! அந்தாளு உன்ன நாய் மாரின்னு சொல்றான் , நீ இன்னாடான்னா கெத்தா இளிச்சுகினு கீற ! த்த்த் த் த் த் தூ .......

புள்ளையார் : மே ! துப்பரதுன்னா அந்தாளு மேல மட்டும் துப்பு . இப்ப இன்னாத்துக்கு எம்மூஞ்சில சாரலடிக்கற ?

முருகன் : டேய் ! அதுக்குதாண்டா அளவா வளரணும்னு சொல்றது ! ஆனா மண்டையா ! ஊடு உம்மூஞ்சிதாண்டா நெறஞ்சு இருக்குது .

நாரதர் : சரி சரி சண்டை போடாதீர்கள் குழந்தைகளே !

முருகன் : டேய் ! இன்னாது இவனப் பாத்தா உனுக்கு கொளந்த மாரீ தெர்தா . தட்னன்னா தாராந்துருவ ! கோழிக்கண்ணா ஓடிப் போயிரு !

நாரதர் : போங்கடா ................... ளா , பாவம் புள்ளைகன்னு சரக்கு வாங்கியாந்தா என்னையே ஓட்டறீங்களா ? சரக்குமில்ல ஒரு மயிருமில்ல போங்கடான்னு,

வாசல் பக்கம் எஸ்கேப் ஆக டிரை பண்ணினாரு . ஒடனே தும்பிக்கைய நீட்டி நாரதரின் டவுசரோடு பாட்டிலைப் பிடுங்கி எடுத்தார் புள்ளையார் . டவுசர் கிழிஞ்ச கடுப்பில் நாரதர் வண்டை வண்டையாய் திட்டிவிட்டு ஓடி விட்டார் .
அதை பற்றி கவலை படாமல் புழுதில் பிரண்டு சண்டையிட்டனர் மகேசன் மகன்கள்.

பார்வதி : யோவ் ! புள்ளைங்க ரெண்டும் அடிச்சுகினு சாவுது . சும்மா உக்காந்து பீடி வழிக்கரையே உன்னையெல்லாம் கம்முனாட்டின்னு சொல்லாத வேற இன்னா சொல்றது

கடுப்பேறிய சிவன் குறுக்கே பூந்து பாட்டிலை பிடுங்கினார்

சிவ பெருமான் : டேய் ! அடங்குங்கடா ! உங்க ரெண்டு பேருக்கும் ஒரு போட்டி வெக்கப் போறேன் அதுல எவன் ஜெயிக்கறானோ அவனுக்குதான் சரக்கு ~!

முருகன் : இன்னா போட்டி நைனா !

சிவ பெருமான் : ரெண்டு பேத்துல போயி எவன் நல்ல பிகர் மடிச்சுட்டு வரானோ அவன்தான் கில்லி ! அவனுக்குதான் மில்லி !

ஒடனே பூலோகத்துக்கு கெளம்பினான் முருகன் ! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஆடிகிட்டு இருந்த குண்டு அக்காவ கூட்டியாந்தா ஜொள்ளு விட்டுக்கினே சரக்க குடுத்துருவாருன்னு கால்குலேசன் போட்டான் !

புள்ளையாருக்கு தொந்திய தூக்கிகினு எங்கயும் போக முடியல ஒடனே தும்பிச்சாங்கைய கொண்டு போயி சிவனோட கொண்டைல தடவினாரு ! மவன் எதோ பாசத்துல நெரவரான்னு கண்டுக்காத விட்டாரு சிவ பெருமான் .

ஆனா இவுரு தடவின தடவுல சிவன் கொண்டைல இருந்த கங்கை மயங்கி எறங்கி வந்து கட்டி புடிச்சு உம்மா குடுக்க ஆரமிச்சிருச்சு !

சிவ பெருமான் : டேய் ஆழ வாயா ! உங்கொப்பன் சின்ன வூடு ஒனக்கு சித்தி மாதிரி இல்ல ! அதப் போயி கரெக்ட் பண்ண பாக்கறையேடா"ன்னு சூலத்த எடுத்து புள்ளையாரு வாய்க்குள்ள சொருவிட்டாரு!
வலி பொறுக்காத புள்ளையாரு வந்த கடுப்புல சிவன சிலுக்கா மாத்தி சாபம் குடுத்துட்டாரு !

திரும்பி வந்த முருகன் சிவனைப் பாத்து ஷாக் ஆயிட்டாரு !

அப்பறம் பஞ்சாயத்து பேசி சிலுக்க நாரதருக்கு கட்டி வெச்சுட்டாங்க ! கலாக்காவ முருகன் மூனாவதா கட்டிகிட்டாரு !

புள்ளையாரு கண்ணாலமே வேணாம்னு சொல்லிட்டாரு !


கதையின் நீதி : ஓசி சரக்குக்காக உயிரையும் கொடுப்பவனே கடவுள் !  

No comments:

Post a Comment