August 30, 2011

கடவுள் சிவனுடைய படங்கள்

இந்து மதம் காலத்திற்கு தக்கபடி தன்னை புதுப்பித்துக் கொள்ளும் ஓர் அதிசய மதம். பல்வேறு காலக்கட்டங்களில் மிகவும் அழியும் நிலைக்கு சென்று மீண்டு வந்த மதம். உலகம் முழுக்க பரவி நிற்கும் புத்தமும், ஜைனமும் இந்தியாவில் நிற்க முடியாமல் செய்த மதம். இதோ காலங்களை கடந்து முதல் நாகரீகம் தொட்டு வணங்கப்படும் கடவுள் சிவபெருமானின் அறிய படங்கள். முதல் நாகரீக மனிதன் தோன்றியது நமது பாரத நாட்டின் சிந்து சமவெளியில் தான். அங்கு அவர்கள் வணங்கிய பசுபதி என்ற சிவ உருவம் தானே முதல் கடவுள். அதை தான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.




சித்தமெல்லாம் சிவமயம் தொடருக்காக பல நூல்களை வாங்கி படிக்க வேண்டிய சூழ்நிலையால் அத்தொடர் சற்று தாமதப்பட்டிருக்கிறது என்றாலும் ஈசன் அருளால் விரைவில் அடுத்த இடுகை உங்கள் மனம் மயக்க வரும் என்பதில் ஐயமெதுவும் இல்லை.

சிவன்

சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர், சமயத்தின் ஒரு பிரிவான சைவ சமயத்தவரின் முழு முதற் கடவுள். சிவனை வழிபடுவதாலேயே சைவம் என்ற பெயர் ஏற்பட்டது. மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் என்பவர்களுள் சிவன் அழித்தல் தொழிலுக்கு அதிபதியாகக் கருதப்படுகிறார். சிவன் பல்வேறு வடிவங்களில் வணங்கப்படுகிறார். நடராஜர், தட்சிணாமூர்த்தி, உருத்திரன், அர்த்தநாரிசுவரர் என்னும் மூர்த்தங்கள் இவற்றுட் சில.

சிவனின் ஜந்து முகங்கள் -
1. சத்யோ ஜாதம்
2. வாமம்
3. அகோரம்
4. தற்புருடம்
5. ஈசானம்
இம்முகத்தின் மூலம் ஆகம இரகசியப்பொருளினைக் கேட்டு அறிந்தனர் அறுபத்தாறு முனிவர்கள்.

சிவனின் தோற்றம்

மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பெற்ற தியானத்திலுள்ள பசுபதி சின்னத்தின் மூலமே சிவவழிபாடு அப்பகுதியிலேயே முதன்முதலில் நடைபெற்றிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்றாகும்.

சிவனது தனித்துவ அடையாளங்கள்

சிவ பெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வருவன கொள்ளப்படுகின்றது.இவ் வடிவங்களையும் இறைவனது குணங்களைனையும் பற்றி தேவார பதிகங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.
நெற்றிக்கண் காணப்படல்.
கழுத்து நிலநிறமாக காணப்படல்.
சடைமுடியில் பிறைநிலாவை கொண்டிருத்தல்.
நீண்ட சுருண்ட சடாமுடி
தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.
உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.
புலித்தோலினை ஆடையாக அணித்திருத்தல்.
கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.
கையினில் உடுக்கை,திரிசூலம் தாங்கியிருத்தல்.
நந்தியினை(எருது) வாகனமாக கொண்டிருத்தல்.

சிவனது உருவத்திருமேனி

நடராஜர் -

வெண்கலதால் அமைந்த சோழர்கால நடராசர் சிலை

சிவனது உருவதிருமேனிகளில் நடராஜர் வடிவம் மிக பிரபல்யமானது.சிவனை ஆடலரசனாக கொள்ளும் வடிவாகும்.

தட்சணாமூர்த்தி -

ஆலமரத்தின் கீழ் தெற்குதிசையினை பார்த்தவாறு முனிவர்களுக்கு யோகத்தினை விளக்க்கும் வகையில் அமர்திருக்கும் வடிவ்மாகும்.

அர்த்த நாரிசுவரர் -

சிவனின் ஆண் உருவம் பாதியும்,பார்வதியின் பெணுருவம் பாதியும் கொண்டு ஆண் கூறு வலப்பக்கமும்,பெண் கூறு இடப்பக்கமும் அமைந்த வடிவாகும்.

இலிங்கம் -

சிவனது அரு உருவத்திருமேனிவடிவாகும்.

இலிங்கோற்பவர் -

சிவனது உருவதிருமேனிகளில் ஒன்றாகும்.கருவறையின் பின் புறமாக மேற்கு நோகிகி அமைந்திருக்கும்.இறைவனது பாதமும் முடியும் கண்ணிற்கு புலப்படத வகையில் இவ் வடிவம் அமைந்திருக்கும்.


புகழ் பெற்ற சிவதலங்கள்

சைவசமயத்தவர்களது முழுமுதற் கடவுள் சிவனாகும்.சிவனை மூலமூர்த்தியாகக் கொண்டு இந்தியா,இலங்கை,நேபாளம் உட்பட பல நாடுகளில் கோயில்கள் பல உண்டு.

ஜோதி லிங்கங்கங்கள் உள்ள சிவதலங்கள்

இந்தியாவில் அமைந்துள்ள பன்னிரண்டு ஜோதி லிங்கங்களும் அது அமைந்துள்ள இடங்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

1. சோமநாதேசுவரர்- சோமநாதம் (குஜராத்)

2. மல்லிகார்ச்சுனர்-ஸ்ரீசைலம் (ஆந்திரா)

3. மகா காளேசுவரர்-உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)

4. ஓம்காரம் மாமலேசுவரர்- ஓம்ஹாரம் (மத்தியபிரதேசம்)

5. வைத்திய நாதேசுவர்-பரளி (மகராஷ்டிரம்)

6. பீமாநா தேசுவர்- பீமசங்கரம் (மகராஷ்டிரம்)

7. இராம நாதேசுவரர்-இராமேஸ்வரம் (தமிழ்நாடு)

8. நாக நாதேசுவரர்-நாகநாதம் (மகராஷ்டிரம்)

9. விசுவ நாதேசுவரர்-காசி (உத்திரப்பிரதேசம்)

10. திரியம்ப கேசுவரர்- திரியம்பகம் (மகாராஷ்டிரம்)

11. கேதாரேசுவரர்-இமயம் (உத்திரப்பிரதேசம்)

12. குருணேசுவரர்-குண்ருனேசம் (மகாராஷ்டிரம்)

பஞ்சபூத சிவதலங்கள்

உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. மண், நீர், தீ, வளி,வான், என்பன ஐம்பூதங்கள். இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்று கூறப்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும்.(அடைப்புக் குறிக்குள் வடமொழிப்பெயர்)

1.மண் (பிருத்திவித்தலம்) - காஞ்சிபுரம், திருவாரூர்.

2.நீர் (அப்புத்தலம்) - திருவானைக்கா

3.தீ (தேயுத்தலம்) - திருவண்ணாமலை

4.வளி (வாயுத்தலம்) - திருக்காளத்தி

5.வான் (ஆகாயத்தலம்) - சிதம்பரம்

ஐந்து தாண்டவங்களுக்கான சிவதலங்கள்

சிவ பெருமானின் ஐம்பெரும் தாண்டவங்கள் என்று அடையாளம் காட்டப்படும் ஆலயங்களும் அவை இருக்கும் இடங்களும் இதுதான்.

1.தில்லை (சிதம்பரம்) - ஆனந்த தாண்டவம்.

2.திருவாரூர் - அசபா தாண்டவம்.

3.மதுரை - ஞானசுந்தர தாண்டவம்.

4.அவிநாசி - ஊர்த்தவ தாண்டவம்.

5.திருமுருகன் பூண்டி - பிரம தாண்டவம்.

ஐந்து மன்றங்களுக்கான சிவதலங்கள்

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்தினைக் கூறலாம்.அந்த ஐம்பெரும் மன்றங்கள் அமைந்துள்ள சிவாலயங்கள்(அடைப்புக் குறிக்குள் சபைகள்)

1.தில்லை(சிதம்பரம்) - பொன் மன்றம் (கனக சபை).

2.திருவாலங்காடு - மணி மன்றம் (இரத்தின சபை).

3.மதுரை - வெள்ளி மன்றம் (இராஜ சபை).

4.திருநெல்வேலி - செப்பு மன்றம் (தாமிர சபை).

5.திருக்குற்றாலம் – ஓவிய மன்றம் (சித்திர சபை).

சத்த விடங்க சிவதலங்கள்

வடமொழியில் "டங்கம்" என்பது உளியைக் குறிக்கும். விடங்கம் என்றால் உளியால் செதுக்கப் பெறாத என்று பொருள். ஏழு திருத்தலங்களில் சிவபெருமான் விடங்கராக வீற்றிருக்கிறார்.அந்த ஏழு திருத்தலங்கள் அமைந்துள்ள இடங்கள்.

1.திருவாரூர் - வீதிவிடங்கர் (அசபா நடனம்).

2.திருநள்ளாறு - நகரவிடங்கர் (உன்மத்த நடனம்).

3.திருநாகைக் கோரணம் என்கிற நாகபட்டிணம் - சுந்தரவிடங்கர் (வீசி நடனம்).

4.திருக்காறாயில் என்கிற திருக்காரைவாசல் -ஆதிவிடங்கர் (குக்குட நடனம்).

5.திருக்கோளிலி என்கிற திருக்குவளை -அவனிவிடங்கர் (பிருங்க நடனம்).

6.திருவாய்மூர் - நீல விடங்கர் (கமல நடனம்).

7.திருமறைக்காடு என்கிற வேதாரண்யம்- புவனி விடங்கர் (கம்சபாத நடனம்)

முக்தி தரவல்ல சிவதலங்கள்

முக்தி தரவல்ல தலங்கள் என்று நான்கு சிவாலய தலங்கள் உள்ளது. அந்த தலங்கள் அமைந்துள்ள இடங்கள்

1.திருவாரூர் - பிறக்க முக்தி தருவது

2.சிதம்பரம் - தரிசிக்க முக்தி தருவது

3.திருவண்ணாமலை - நினைக்க முக்தி தருவது

4.காசி - இறக்க முக்தி தருவது


தமிழகத்தின் நவ கைலாயங்கள்(சிவதலங்கள்)

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலும் தூத்துக்குடி மாவட்டத்திலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயங்கள் என அழைக்கப்படும் சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. நவ கைலாயங்கள் அமைந்திருக்கும் ஊர்கள்:

1.பாபநாசம்

2.சேரன் மகாதேவி

3.கோடகநல்லூர்

4.குன்னத்தூர்

5.முறப்பநாடு

6.திருவைகுண்டம்

7.தென் திருப்பேரை

8.ராஜபதி

9.சேர்ந்த பூ மங்கலம்  

சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர், சமயத்தின் ஒரு பிரிவான சைவ சமயத்தவரின் முழு முதற் கடவுள். சிவனை வழிபடுவதாலேயே சைவம் என்ற பெயர் ஏற்பட்டது. மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் என்பவர்களுள் சிவன் அழித்தல் தொழிலுக்கு அதிபதியாகக் கருதப்படுகிறார். சிவன் பல்வேறு வடிவங்களில் வணங்கப்படுகிறார். நடராஜர், தட்சிணாமூர்த்தி, உருத்திரன், அர்த்தநாரிசுவரர் என்னும் மூர்த்தங்கள் இவற்றுட் சில.

சிவனின் ஜந்து முகங்கள் -
1. சத்யோ ஜாதம்
2. வாமம்
3. அகோரம்
4. தற்புருடம்
5. ஈசானம்
இம்முகத்தின் மூலம் ஆகம இரகசியப்பொருளினைக் கேட்டு அறிந்தனர் அறுபத்தாறு முனிவர்கள்.

சிவனின் தோற்றம்

மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பெற்ற தியானத்திலுள்ள பசுபதி சின்னத்தின் மூலமே சிவவழிபாடு அப்பகுதியிலேயே முதன்முதலில் நடைபெற்றிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்றாகும்.

சிவனது தனித்துவ அடையாளங்கள்

சிவ பெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வருவன கொள்ளப்படுகின்றது.இவ் வடிவங்களையும் இறைவனது குணங்களைனையும் பற்றி தேவார பதிகங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.
நெற்றிக்கண் காணப்படல்.
கழுத்து நிலநிறமாக காணப்படல்.
சடைமுடியில் பிறைநிலாவை கொண்டிருத்தல்.
நீண்ட சுருண்ட சடாமுடி
தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.
உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.
புலித்தோலினை ஆடையாக அணித்திருத்தல்.
கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.
கையினில் உடுக்கை,திரிசூலம் தாங்கியிருத்தல்.
நந்தியினை(எருது) வாகனமாக கொண்டிருத்தல்.

சிவனது உருவத்திருமேனி

நடராஜர் -

வெண்கலதால் அமைந்த சோழர்கால நடராசர் சிலை

சிவனது உருவதிருமேனிகளில் நடராஜர் வடிவம் மிக பிரபல்யமானது.சிவனை ஆடலரசனாக கொள்ளும் வடிவாகும்.

தட்சணாமூர்த்தி -

ஆலமரத்தின் கீழ் தெற்குதிசையினை பார்த்தவாறு முனிவர்களுக்கு யோகத்தினை விளக்க்கும் வகையில் அமர்திருக்கும் வடிவ்மாகும்.

அர்த்த நாரிசுவரர் -

சிவனின் ஆண் உருவம் பாதியும்,பார்வதியின் பெணுருவம் பாதியும் கொண்டு ஆண் கூறு வலப்பக்கமும்,பெண் கூறு இடப்பக்கமும் அமைந்த வடிவாகும்.

இலிங்கம் -

சிவனது அரு உருவத்திருமேனிவடிவாகும்.

இலிங்கோற்பவர் -

சிவனது உருவதிருமேனிகளில் ஒன்றாகும்.கருவறையின் பின் புறமாக மேற்கு நோகிகி அமைந்திருக்கும்.இறைவனது பாதமும் முடியும் கண்ணிற்கு புலப்படத வகையில் இவ் வடிவம் அமைந்திருக்கும்.


புகழ் பெற்ற சிவதலங்கள்

சைவசமயத்தவர்களது முழுமுதற் கடவுள் சிவனாகும்.சிவனை மூலமூர்த்தியாகக் கொண்டு இந்தியா,இலங்கை,நேபாளம் உட்பட பல நாடுகளில் கோயில்கள் பல உண்டு.

ஜோதி லிங்கங்கங்கள் உள்ள சிவதலங்கள்

இந்தியாவில் அமைந்துள்ள பன்னிரண்டு ஜோதி லிங்கங்களும் அது அமைந்துள்ள இடங்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

1. சோமநாதேசுவரர்- சோமநாதம் (குஜராத்)

2. மல்லிகார்ச்சுனர்-ஸ்ரீசைலம் (ஆந்திரா)

3. மகா காளேசுவரர்-உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)

4. ஓம்காரம் மாமலேசுவரர்- ஓம்ஹாரம் (மத்தியபிரதேசம்)

5. வைத்திய நாதேசுவர்-பரளி (மகராஷ்டிரம்)

6. பீமாநா தேசுவர்- பீமசங்கரம் (மகராஷ்டிரம்)

7. இராம நாதேசுவரர்-இராமேஸ்வரம் (தமிழ்நாடு)

8. நாக நாதேசுவரர்-நாகநாதம் (மகராஷ்டிரம்)

9. விசுவ நாதேசுவரர்-காசி (உத்திரப்பிரதேசம்)

10. திரியம்ப கேசுவரர்- திரியம்பகம் (மகாராஷ்டிரம்)

11. கேதாரேசுவரர்-இமயம் (உத்திரப்பிரதேசம்)

12. குருணேசுவரர்-குண்ருனேசம் (மகாராஷ்டிரம்)

பஞ்சபூத சிவதலங்கள்

உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. மண், நீர், தீ, வளி,வான், என்பன ஐம்பூதங்கள். இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்று கூறப்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும்.(அடைப்புக் குறிக்குள் வடமொழிப்பெயர்)

1.மண் (பிருத்திவித்தலம்) - காஞ்சிபுரம், திருவாரூர்.

2.நீர் (அப்புத்தலம்) - திருவானைக்கா

3.தீ (தேயுத்தலம்) - திருவண்ணாமலை

4.வளி (வாயுத்தலம்) - திருக்காளத்தி

5.வான் (ஆகாயத்தலம்) - சிதம்பரம்

ஐந்து தாண்டவங்களுக்கான சிவதலங்கள்

சிவ பெருமானின் ஐம்பெரும் தாண்டவங்கள் என்று அடையாளம் காட்டப்படும் ஆலயங்களும் அவை இருக்கும் இடங்களும் இதுதான்.

1.தில்லை (சிதம்பரம்) - ஆனந்த தாண்டவம்.

2.திருவாரூர் - அசபா தாண்டவம்.

3.மதுரை - ஞானசுந்தர தாண்டவம்.

4.அவிநாசி - ஊர்த்தவ தாண்டவம்.

5.திருமுருகன் பூண்டி - பிரம தாண்டவம்.

ஐந்து மன்றங்களுக்கான சிவதலங்கள்

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்தினைக் கூறலாம்.அந்த ஐம்பெரும் மன்றங்கள் அமைந்துள்ள சிவாலயங்கள்(அடைப்புக் குறிக்குள் சபைகள்)

1.தில்லை(சிதம்பரம்) - பொன் மன்றம் (கனக சபை).

2.திருவாலங்காடு - மணி மன்றம் (இரத்தின சபை).

3.மதுரை - வெள்ளி மன்றம் (இராஜ சபை).

4.திருநெல்வேலி - செப்பு மன்றம் (தாமிர சபை).

5.திருக்குற்றாலம் – ஓவிய மன்றம் (சித்திர சபை).

சத்த விடங்க சிவதலங்கள்

வடமொழியில் "டங்கம்" என்பது உளியைக் குறிக்கும். விடங்கம் என்றால் உளியால் செதுக்கப் பெறாத என்று பொருள். ஏழு திருத்தலங்களில் சிவபெருமான் விடங்கராக வீற்றிருக்கிறார்.அந்த ஏழு திருத்தலங்கள் அமைந்துள்ள இடங்கள்.

1.திருவாரூர் - வீதிவிடங்கர் (அசபா நடனம்).

2.திருநள்ளாறு - நகரவிடங்கர் (உன்மத்த நடனம்).

3.திருநாகைக் கோரணம் என்கிற நாகபட்டிணம் - சுந்தரவிடங்கர் (வீசி நடனம்).

4.திருக்காறாயில் என்கிற திருக்காரைவாசல் -ஆதிவிடங்கர் (குக்குட நடனம்).

5.திருக்கோளிலி என்கிற திருக்குவளை -அவனிவிடங்கர் (பிருங்க நடனம்).

6.திருவாய்மூர் - நீல விடங்கர் (கமல நடனம்).

7.திருமறைக்காடு என்கிற வேதாரண்யம்- புவனி விடங்கர் (கம்சபாத நடனம்)

முக்தி தரவல்ல சிவதலங்கள்

முக்தி தரவல்ல தலங்கள் என்று நான்கு சிவாலய தலங்கள் உள்ளது. அந்த தலங்கள் அமைந்துள்ள இடங்கள்

1.திருவாரூர் - பிறக்க முக்தி தருவது

2.சிதம்பரம் - தரிசிக்க முக்தி தருவது

3.திருவண்ணாமலை - நினைக்க முக்தி தருவது

4.காசி - இறக்க முக்தி தருவது


தமிழகத்தின் நவ கைலாயங்கள்(சிவதலங்கள்)

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலும் தூத்துக்குடி மாவட்டத்திலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயங்கள் என அழைக்கப்படும் சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. நவ கைலாயங்கள் அமைந்திருக்கும் ஊர்கள்:

1.பாபநாசம்

2.சேரன் மகாதேவி

3.கோடகநல்லூர்

4.குன்னத்தூர்

5.முறப்பநாடு

6.திருவைகுண்டம்

7.தென் திருப்பேரை

8.ராஜபதி

9.சேர்ந்த பூ மங்கலம்

சிவ லிங்கம் ஆண்குறியைக் குறிப்பதா?

உலகின் முதல் நாகரீகமான சிந்து சமவெளி நாகரீகத்திற்கு
 முன்பிருந்தே சிவ வழிபாடு நிகழ்ந்திருக் கிறது.
அருவம், உருவம், அருவுருவம் என மூன்று வகையான வழிபாடே உலகத்தில் காணப்ப டுகிறது. லிங்க வழிபாடு அருவுருவ வகை யைச் சார்ந்தது.
லிங்கம் என்பதன் பொருள் -
லிங்கம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். இதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் மனித ஆண்குறி. மேலே உள்ள படத்தில் மனித ஆண்குறியின் வடி வம் தெளிவாக செதுக்கப்பட்டிருப் பதைக் காணலாம்.
இது லிங்கத்துடன் ஆவுடையாரும் உள்ள உருவம். லிங்கம் எப்படி ஆண்குறியைக் குறிக்கின்றதோ அப்படியே ஆவுடையா ரும் பெண்க்குறியைக் குறிக்கின்றது. மக்கள் ஆண் பெண் குறிகளின் இணைப் பை கடவுளாக வழிபடுகின்றனர். ஏன்.
உடலுறவு -
ஒரு புது உயிர் பெண்ணின் கருவ றையில் உருவாக வேண்டும் என் றால் ஆணின் பிறப்புறுப்புகள் சரி யாக இருப்பதுடன், அதன் செயல் பாடுகளும் நன்றாக இருக்க வேண் டும். அதிலிருந்து போதுமான விந் து வெளியேறி, பெண்ணின் பிறப் புறுப்பில் சேரவேண்டும். இதற்கு பெண்ணின் பிறப்புறுப்பும் சரியாக அமைந்து, அதன் செயல் பாடும் நன்கு அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான், விந்திலிருந்து வெளியேறும் உயிரணு, கருவாக உருமாற வாய்ப்பு ஏற்படும்.
இந்த உடலுறவைப் பற்றி அறியாத பலர் இன்னும் இருக்கத் தான் செய்கின்றார்கள். எதையும் வெளிப்படையாக பேசிப் போகும் இந்தக் காலக் கட்டத்தில் கூட இப்படி சிலர் இருக் கையில், பண்டையக் காலத்தை நினைத்துப் பாருங்கள். (பல்லாயிரம் ஆண்டுகளாக ‘ஆணும் பெண்ணும் செக்ஸில் ஈடுபட்டு, ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை சந்தித்துக் கரு உருவாகிறது’ என்பது தெரியாமலே இருந்தது என்பதே உண்மை! – டாக்டர் நாராயண ரெட்டி.) இதை தீர்ப்பதற்காக ஆண் பெண் சங்கமம் கடவுளாக மாற்றப் பட்டிருக்கலாம்.
தமிழர் வழிபாடு -
ஒரு புறம் உடலுறவு என்பதே தெரியாதவர்களுக்காக லிங் கம் உருவாக்கப்பட்டது என்று சொன்னாலும். இந்து மதம் பற்றிய வெகு காலம் ஆய்வில் ஈடுபட்டிருந்த வேதங்களின் பொருள் உணர்ந்த அக்னி ஹோத்திரம் தாத்தாச்சாரியார், லிங்க வழிப்பாட்டை தமிழர் வழிபாடு என்று சொல்லுகிறார்.
சிவ லிங்க உருவங்கள் –
சிவன் முகமுள்ள லிங்கம்
***
தொன்மையான குடிமல்லம் லிங்கம்
***
தியான லிங்கம்

Thanks: Mr. Jagadeeswaran
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பகல் முழுவதும் சிவன் கோவில்களில் பூஜை செய்ய வாய்ப்பு இல்லை! திராவிடம் சொல்கிறது!!


பகல் முழுவதும் சிவன் கோவில்களில் பூஜை செய்ய வாய்ப்பு இல்லை :துணை ஆணையர் கைவிரிப்பு
 

General India news in detail
திண்டுக்கல்:பக்தர்கள் நெரிசலை குறைப்பதற்காக, சிவன் கோவில்களை பகல் முழுவதும் திறந்து பூஜை செய்ய ஆகம விதிகளின்படி வாய்ப்பு இல்லை,” என மதுரை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் கோவிந்தராமன் தெரிவித்தார்.திண்டுக்கலில் அவர் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் கவுமாரியம்மன் கோவில் வெள்ளி, செவ்வாய் கிழமைகளிலும், மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் தினமும் பகல் முழுக்க திறக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மதுரை மீனாட்சியம்மன் கோவில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில்களுக்கும் அதிக பக்தர்கள் வருவதால், பகல் முழுக்க திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளன.ஒவ்வொரு கோவிலிலும் ஆகம விதிகள், பாரம்பரிய பழக்கம், ஊர் நடைமுறைகளின் படி விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
இதன்படி மாரியம்மன், காளியம்மன், காமாட்சியம்மன் கோவில்களை பகல் முழுக்க திறப்பதில் எந்த தடையும் இல்லை. ஆனால், சிவன் கோவில்களில் ஆகம நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த நடைமுறைப்படி பகலில் நடை சாத்தியே ஆக வேண்டும். எனவே, சிவன் கோவில்களை பகல் முழுவதும் திறப்பது சாத்தியம் இல்லை.இவ்வாறு கோவிந்தராமன் தெரிவித்தார்.
விமர்சனம்:
கருணாநிதி வந்ததிலிருந்து கோவில்களில் பிரச்சினைகள்தாம் வளர்ந்துள்ளது.
நாத்திகம், இந்துமத துவேஷம்,  என்ற இருகிப்போன மனப்பாங்கால், எல்லாவற்றையும் ஒழித்துவிடவேண்டும் என்ற ஔரங்கசீப் செறிதான் உள்ளது.
“ஆகமநெறிகள்” என்று இப்பொழுது பேசுகிறார்களே, அந்த ஆகமநெறிகளை மதித்திருந்தால், இதுவரை நாம் கண்டவை தமிழகத்தில் “சிவனிருக்கும் தென்னாட்டில்”, இவ்வாறெல்லாம் நடந்திருக்குமா?
திருமூலை சொன்னாரே?
கோவில் மதிற்சுவரிலிருந்து ஒரு கல் விழுந்தால், அரசன் அழிவான் என்று!
ஆனால், ஒன்றும் நடக்கவில்லையே என்று திராவிட கருணாநிதி “ஔரங்கசீப்-வேலையில்” பல “ஷேவியர்கள்” மற்றும் “மாலிக்காஃபூர்களின்” துணையோடு இறங்கியுள்ளார்!
இன்று நாத்திகம் பேசும், இத்தகைய கொடுமைகள் பேசும் திராவிடர்களின் தாய்-தந்தையர், சகோதரிகள், மனைவிப்பெண்டுகள் இந்துக்கள்தாம், நம்பிக்கையுள்ளவர்கள்தாம்!
காலம் இப்படியே இருந்து விடாது!!!


சிவனுக்காகக் கோவில் கட்டிய செட்டியார் சமூகம்: சுமார் 200-300 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு செட்டியார் இந்த கோவிலைக் கட்டியுள்ளார்[1]. அது அவர்களது குடும்பத்தின் பராமரிப்பிலேயே ஆண்டாண்டுகளாக இருந்து வந்துள்ளது. அதற்கு நிலங்களும் தானமாக அளிக்கப் பட்டுள்ளன. காலப்போக்கில், வியாபாரம், குடும்பவிரிவு, படிப்பு, உறவுமுறை பாதிப்பு முதலிய பல்வேறு காரணங்களுக்காக, அவர்கள் சென்னை மற்ற இதர ஊர்களுக்கு இடம் பெயர்ந்து சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இன்று அந்த கோவிலைச் சுற்றியுள்ள தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
சீனாவிலும் சிவன் கோவில் கட்டிய செட்டியார் சமூகம்: திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடிய சமூகம் செட்டியார் சமூகம். இன்று கூட இலங்கை, தென்னமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, மொரிஸியஸ், சிஸெல்ஸ், முதலிய நாடுகளில் “செட்டித் தெரு / வீதி” என்றுள்ளதை காணலாம். அதே மாதிரி அவர்கள் சந்ததியினரும் உள்ளனர். அவ்வாறு எல்லா அயல்நாடுகளிலும் அவர்களது “இருந்த வாசம்” உணரப்பட்டு வருகிறது[2]. செக்கைக் கானிடம் அனுமதி பெற்று குவான்சூய் என்ற தென்மேற்குப் பகுதி சீனாவில், சம்பந்த பெருமாள் செட்டி, கோவில் கட்டியுள்ளார்[3]. அவ்வாறு சீனாவிலேயே சிவன் கோவிலைக் கட்டியச் செட்டியார்கள் தமிழ்நாட்டில் கட்டுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இடைக்காலத்தில் வரை (ஐரோப்பியக் கம்பெனிகள் வியாபாரத்தில் நுழையும் வரை) அவர்களது ஆதிக்கம் இருந்தது. மணிகிராமங்கள் எல்லாமே இவர்களால் வளர்ந்தன, செழித்தன.
இன்றைய பரிபாலனத்தின் நிலை: இன்று அதே சமூகத்தைச் சேர்ந்த ஒரு பரம்பரை தர்மகர்த்தாவினால் இக்கோவில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இப்போழுதும் 45 ஏக்கர் நிலம் கோவிலுக்குச் சொந்தமாக உள்ளதாக, ஊரிலுள்ளவர்கள் கூறுகிறார்கள்[4]. ஆனால், நிலத்தை உபயோகித்து வருபவர்கள், கோவிலுக்கு சிறிதே பதிலுக்குக் கொடுத்து வருகின்றனராம்! தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், கோவில் சொத்தை தமது இஷ்டத்திற்கு உபயோகப்படுத்தும் வழிமுறையை, அரசே மக்களுக்குக் காட்டியுள்ளது. அதிலும், திராவிடக் கட்சிகள் நாத்திகம் பேசிக்கொண்டு, கோவில் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், வழிமுறை முதலியவற்றை அழிப்பதில் அதிக அளவில் வெற்றிக் கொண்டுள்ளன. அதனால், யாரும் “சிவன் சொத்து குலநாசம்” என்றெல்லாம் நினைத்தோ, அறிந்தோ அஞ்சுவதில்லை[5].
நாத்திகத் திராவிடம் கோவில்களை அழித்த விதம்: ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளில் ஆழ்வார்கள், நாயன்மார்கள், தமிழரசர்கள் கோவில் கட்டி சாதித்ததை, இவர்கள் 60 ஆண்டு காலத்திலேயே, அழித்தொழித்து விட்டார்கள். ஆகவே “அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி” என்பதை இவர்கள் காலத்திலும் பொறுந்திதான் வந்துள்ளது. அன்று தலைவன் “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்று சொன்னதை, சொன்னதின் மகத்துவத்தினை, அந்த சித்தாந்தம் என்ன என்பதனை பகுத்தறிவு கொண்ட மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டு, மக்கள் தங்களுக்காகவே சேவை செய்துக் கொண்டு இருந்து வருகிறார்கள், இருக்கிறார்கள். அதற்கேற்றப்படித்தான் “நமக்கு நாமே” போன்ற திட்டங்கள் வேறு அறிமுகப்பட்டுத்தியுள்ளார்கள். நகரப்புறத்தில், கிராமப் புறத்தில் உள்ள மக்கள் இவற்றையெல்லாம் நன்றாகவேப் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். ஆகவே அத்தகைய திட்டங்களில் மற்றவர்கள் வரமுடியாது, பங்கு கொள்ள முடியாது.
சக்தி வாய்ந்த கடவுளும், குறைவாகவே நடக்கும் பூஜைகளும்: மாதம் ரூ.500/-ரே கொடுத்து வந்ததால், குருக்களும் சென்று விட்டாராம்! பாவம், அங்குள்ளவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். அங்கேயே, அதாவது கிராமம் எனப்படுகின்ற, நவீனங்கள் இருக்கும் இடத்திலேயே, ஒருவர் வாழ மாதம் ரூ.3,000/- ஆகிறதாம்! வழக்கம் போல இப்பிரச்சினைகள் இருந்தாலும், இக்கோவில் விஷேசமானது, விக்கிரகம் சக்தி வாய்ந்தது, நினைத்து வேண்டிக் கொண்டால் காரியம் கைக்கூடும் என்றேல்லாம், ஒருவர் கூறுகிறார். சுற்றியுள்ள கிராமத்தவர்களும், அவ்வாறு வேண்டுதல்களுக்கு வந்து செல்கின்றனராம்.
நாகப்பாம்புகள் காத்துவரும் விக்கிரங்கள்: கோவிலுக்கென்று உலோக விக்கிரங்கள் செய்யப் பட்டு, ஒரு அறையில் வைக்கப் பட்டுள்ளது என்றும், அவற்றை இரு நாகப் பாம்புகள் காத்து வருவதாகவும் அவர் கூறுகிறார். பூஜைக்கு, விஷேசத்திற்கு வேண்டும் என்றால் எடுத்துக் கொள்வார்களாம். அப்பொழுது, குருக்கள் கற்பூரம் காட்டி வேண்டிக் கொண்டால், அப்பாம்புகள் வழிவிடுமாம், விக்கிரங்கள் எடுத்துக் கொள்ளாலாம்[6]. பூஜைக்குப் பிறகு, அங்கு வைக்கப் பட்டுவிடும். இதுவரை, அப்பாம்புகள் யாருக்கும் தீங்கு விளைவித்ததுக் கிடையாதாம். பிரதோஷம் முதலிய பூஜைகள் நடத்த ஊர் மக்களுக்கு ஆசை அதிகமாகவே உள்ளது, ஆனால் செட்டியார் பால் ஊற்றின கதை மாதிரிதான் நிலைமை இருக்கிறது.
கிருத்துவர்கள் சதியை முறியடித்த கிராம மக்கள்: அருகிலுள்ள சிறு குன்றின் மீது பெருமாளின் கால்கள் பதிந்துள்ளதாக சுற்றியுள்ள மக்களுக்கு நம்பிக்கையுள்ளது. அதன்படியே, ஆண்டாண்டுகளாக, பெருமாள் உற்சவ விக்கிரத்தை ஊர்வலமாக எடுத்து வரும்போது, அங்கு கொண்ண்டு சென்று, ஒரு சுற்று சுற்றித் திரும்பி வருகிறார்கள். இந்த இடத்தை ஆக்கிரமிக்க, சில கிருத்துவர்கள், ஒரு சிலுவையை கொண்டு வந்து நட்டார்களாம்! உடனே, கிராம மக்கள் திரண்டு சென்று அதனை பிடுங்கி எரிந்து, அத்தகைய வேலைகளை அங்கு செய்ய வேண்டாம் என்று, கிருத்துவர்களுக்கு எச்ச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனராம். அருகில் அச்சிறுப்பாக்கத்தில், கிருத்துவர்கள் எப்படி ஒரு சிலுவையை நட்டு, அந்த குன்றையே இன்று ஆக்கிரமித்துள்ளார்கள் என்பதனைக் காணலாம்! இனி உழவாரப்பணி நடந்தது விளக்கப் படுகிறது.
 
584 – ஏரிக்கரையிலிருந்து கோவிலின் தோற்றம். இக்கோவில் சூமார் 150 x 200 சதுர அடிகளில் உள்ள ஒரு செவ்வக வடிவ நிலத்தில் அமைந்துள்ளது. சிறிய கோவிலாகவே உள்ளது. கிழக்கில் வெற்றிடமுள்ளது. அங்கே ஒரு அம்மன் கோவிலும் உள்ளது. கோவில் சுவரையொட்டிடப்படி, தெற்கில் ஒரு வீடு உள்ளது. கோவில் குருக்கள் இங்கு தங்கியிருப்பதாகத் தெரிகிறது. இப்பொழுது காலியாக உள்ளது. வடக்கில் ஏரிப்பகுதியாக உள்ளது. மேலும் கோவிலுக்கருகிலுள்ள பகுதி பாறை பூமியாக இருப்பதனால் அங்கு கட்டிடங்கள் எதுவும் இல்லாதிருக்கிறது. தெற்கில் தெரு இருக்கிறது.
 
585 – கோவிலுக்கு எதிர்புறத்தில் உள்ள தெரு இது. 1960-70களில் இங்கிருந்த வீடுகளில் செட்டியார், ரெட்டியார், நாயக்கர் முதலிய சமூகத்தினர் இங்கு வசித்து வந்துள்ளனர். இப்பொழுது இடது பக்கத்தில் மூன்று வீடுகள் மற்றும் வலது பக்கத்தில் ஒரு வீடு, இவற்றில் வசிக்கிறார்கள், மற்ற வீடுகள் திறந்து கிடக்கின்றன அல்லது இடிந்த நிலையில் இருக்கின்றன. இவற்றின் சொந்தக்காரர்கள், சென்னையில் இருப்பதாகச் சொல்லப் படுகிறது.

586 – வலது பக்கத்தில் இருக்கும் இந்த வீடு திறந்தே கிடக்கிறது. உள்ளே சென்று பார்த்தால், ஒரு குடும்பம் வசித்தற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. சமைலறையில் தொங்கின்ற ஒரு கம்பியில், பொருட்கள் வாங்கியதற்கான சீட்டுகள் இன்றும் தொங்குகின்றன.

587 – இது மேலே குறிப்பிடப்பட்ட கோவில் சுவரையொட்டிடப்படி, தெற்கில் உள்ள கோவில் குருக்கள் தங்கியிருந்த வீடு.

557 – கோவில் நுழைவு வாயில். உழவாரப் பணி செய்ய இரண்டு-மூன்று குழுக்கள் வருகின்றன. எங்களது குழு தாமதமாக வரநேர்ந்ததால், ஏற்கெனவே, உழவாரப் பணியாளர்கள் கோவிலுக்குள் மண்டிகிடந்த செடி-கொடிகளை அப்புறப்படுத்திவிட்டு, வெள்ளையடிக்க ஆரம்பித்துவிட்டனர். சாலவாக்கம் கூட்ரோடு வந்தவுடன், நேராக பள்ளியகரம் நோக்கிச் செல்வதற்குப் பதிலாக, வலது பக்கம் திரும்பி சுமார் 10 கி.மீ வெறேங்கோ சென்று, மறுபடியும் திரும்பி வந்து பள்ளியகரத்தை அடைந்ததில் ஒரு மணி நேரம் விரயமாயிற்று!

558 – கோவிலின் இடது புறத்தில்  உழவாரப்பணி நடந்து கொண்டிருக்கிறது. இடது பக்கத்தில் காணப்படும் சிறிய கட்டிடம், 19970ல் திறந்து வைக்கப் பட்ட வானொலி அறைக் கட்டிடம். இப்பொழுது உள்ளே ஒன்றும் இல்லை, இரண்டு டிராட்டர் டயர்கள் வைக்கப் பட்டுள்ளன.

571 – குறிப்பிடப்பட்ட அந்த வானொலி அறைக் கட்டிடத்தின் சுவற்றில் காணப்படும் கல்வெட்டு.

மதுராந்தகம் ஊராட்சிய ஒன்றியம் கருணாகரச்சேரி மன்றம் பள்ளியகரம் வானொலி மன்ற கட்டிடத் திறப்பு தலைமை: திரு. ரங்கபாஷ்யம் நாயக்கர், திறப்பாளர்: திரு ஆர்.சி.ராஜா, நாள்: 17-07-1970; பெருந்தலைவர்: பி. ஜானகிராம்; மா.கு. கருணாநிதி, ஆணையர், திரு. பி.டி. வெங்கட்ராம நாயக்கர்; ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அங்கத்தினர்கள், பள்ளியகரம்.


572 – வானொலி அறைக் கட்டிடத்தின் முன்பக்கத் தோற்றம்.

559 – கோவிலின் இடது பக்கத்துப் பின்புறம். குருக்கள் தங்கியிருந்த வீடு ஒட்டியிருப்பதைக் காணலாம்.

560 – கோவிலின் வலது பக்க மூலை.

561 – கோவிலின் வலது பக்கத்து நடுப்பகுதி.

562 – கோவிலின் வலது பக்க பின் மூலை. செடி-கொடிகள் மண்டிக் கிடக்கின்றன. குருக்கள் வீட்டின் பின்பகுதி.

563 – நவக்கிரக சந்நிதிக்கு வெள்ளையடிக்கிறார்கள். 2006ல் இது கட்டப்பட்டது.

582 – அருகில் காணப்படும் சிலைகள் – பைரவர், சூரியன், ஒரு சக்கிரம்.

564 – கோவிலின் இடது பக்க உள்-மூலை.

565 – கோவிலுக்குள் இடதுபுறம் சுவற்றில் வைக்கப் பட்டுள்ள பல்கை – அதில் – “ஶ்ரீ பரமபுரி ஈஸ்வரர் ஆலயம், பள்ளியகரம் பரம்பரை தர்மகர்த்தா பி. வி. தயாள செட்டியார்”, என்றுள்ளது.

566 – விநாயகர் சன்னிதி.
567 – மேற்குப்பகுதி சுவர் – கோவிலின் உட்புறம்.

568 – கோவிலின் உட்புறம். கோவிலின் வலது பக்க பின் மூலை. சுப்ரமணியர் சந்நிதிக்கு வெள்ளையடிக்கப் படுகிறது.

569 – சிறிய கோவில் – அதிகமான உழவாரப் பணியாளர்கள்!

570 – வழக்கம் போல திரு. சரவணன் அழகாக படம் வரைந்து, சிவ-சிவ மற்றும் தேவாரப் பதிகங்களை வரைய-எழுத ஆரம்பித்துவிட்டார்.

578 – “அருள்மிகு பர்வவர்த்தினி அம்பாள் உடனாய பர்வதபுரீஸ்வரர் திருக்கோவில், பள்ளியகரம்” என்று எழுதப் பட்டது.

579 – படம் முடிந்து, தேவாரமும் எழுதப் பட்டுவிட்டது.

580 – பூஜைப் பாத்திரங்கள் சுத்தம் செய்யப் படுகின்றன.

581 – சுத்தம் செய்யப் பட்டு வைக்கப் பட்டுள்ள பூஜைப் பாத்திரங்கள்.

573 – “மீட்டிங்” நடக்கிறது! வலது காலை உயர்த்தி அதன் மீது வலது கையை வைத்துக் கொண்டு, காவி வேட்டிக் கட்டிக் கொண்டு, கண்ணாடி போட்டுக் கொண்டு, படிக்கட்டில் உட்கார்ந்திருக்கும் நபர் தான் – “ஶ்ரீ பரமபுரி ஈஸ்வரர் ஆலயம், பள்ளியகரம் பரம்பரை தர்மகர்த்தா பி. வி. தயாள செட்டியார்”.

574 – பி. வி. தயாள செட்டியார், தமது அங்கத்தினர்களை அறிமுகப் படுத்துகிறார்.

575 – பி. வி. தயாள செட்டியார், தமது மற்ற அங்கத்தினர்களை அறிமுகப் படுத்துகிறார்.

583 – மாலை மறுபடியும் மீட்டிங் – கூட்டுப் பிரார்த்தனை, அறிப்புகள் முதலியன.

576 – எல்லா வேலைகளும் நடந்த பிறகு. கோவிலின் முன்புறம்.

577 – எல்லா வேலைகளும் நடந்த பிறகு. கோவிலின் வலதுபக்க மூலைப்பகுதி.

பிற்குறிப்பு: 2002லிருந்து நடைப்பெற்றுவரும்[7], 111வது உழவாரப்பணி நடந்த அன்று, கீழ்கண்ட சுற்றறிக்கைக் கொடுக்கப்பட்டது!

உழவாரப்பணி அடியார்களுக்கு அன்பான வேண்டுகோள்!
Y உழவாரப்பணி செய்தவுடன் தாங்கள் உபயோகப்படுத்திய கருவிகளை தாங்களே உரிய இடத்தில் திருப்பி ஒப்படைக்க வேண்டுகிறோம்.
Y தயவு செய்து சாப்பிட்டப் பிறகு இலையையும் மீதம் உள்ள உணவு பொருட்களையும் அதற்குரிய பிளாஸ்டிக் கவரிலோ அல்லது குப்பைத்தொட்டியிலோ போடுமாறு வேண்டுகிறோம்.
Y உழவாரப்பணி முடிந்தவுடன் திருக்கோவில் மற்றும் அதை சார்ந்த பகுதிகள் அனைத்தும் தூய்மையாக இருக்க ஒத்துழைப்புத் தந்து உதவ வேண்டுகிறோம்

வேதபிரகாஷ்
26-04-2011.

[1] இச்செய்திகள் அக்கிராமத்தில் உள்ள பெரியவர்கள் மற்றும் கோவில் நற்காரியங்களில் ஈடுபச்ட்டுள்ளவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள்.
[2] இதிலிருந்தே, இந்துக்கள் கடல் கடந்து செல்லக்கூடாது என்பதெல்லாம், அபத்தமான பிரச்சாரங்கள் என்பதனை அறிந்து கொள்ளலாம். ஒருவேளை தமக்குப் போட்டியாக வந்துவிடக் கூடாது என்று அவ்வாறு பிரச்சாரத்தை பரப்பி விட்டிருக்கலாம்.
[3] செங்கிஸ்கான் அனுமதியுடன் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, இந்த சிவன் கோவிலில், சோழர்காலச் சிற்பங்கள் இருந்தன.
[4] சட்டரீதியாக, கோவில்களுக்கு அளிக்கப் பட்ட அசையும் மற்ற அசையா சொத்துக்கள் கோவில்களுக்குத்தான் சொந்தமானது. விடுதலை அடைந்த பிறகும், அந்நிலை மாறாது. ஆகவே, அக்கிரமிப்பில் உள்ள அனைத்து கோவில் சொத்துக்களும், சட்டப்படி, ஆக்கிரமிப்பாளர்களை விரட்டிவிட்டு கோவில்களுக்குத் திரும்பி அளிக்கவேண்டும்.
[5] திருமூலர் பற்றி பேசுபவர்கள், அவர் சொல்லியதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. அதாவது, சிவன் கோவிலின் மதிற்சுவரிலிருந்து, ஒரு கல் கீழே விழுந்தால் என்னாகும் என்று விளக்கியுள்ளார்.
[6]இதனால்தான் பெரியார் பாப்பனையும் பாம்பையும் பார்த்தால் முதலில் பாப்பானை அடித்துக் கொல் என்று சொன்னார் போலும்.
[7] 100-வது உழவாரப்பணி திருமுறை வழிபாட்டு மலர், இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றம், சென்னை.

கடலில் குளிக்கக் கூடாத நாட்கள்

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புண்ணிய தினங்கள் (விசேஷம்) ஏதாவது வந்தால் அன்று கடலில் நீராடுவதை தவிர்க்க வேண்டுமென சாஸ்திரங்கள் சொல்கின்றன. காரணம் அன்று கடல் அரசனும், நதி தேவதைகளும் சங்கமிக்கும் நாட்களாகும். அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. உதாரணமாக ஆடி அமாவசை வெள்ளி அல்லது செவ்வாயில் வந்தால் நதியில் குளிக்கலாம். ஆனால் கடலில் சென்று நீராடுவதை தவிர்த்துவிட வேண்டும்.

மஹாபாரதம் நிகழ்வுக்குக் காரணம

மஹாபாரதம் நிகழ்வுக்குக் காரணம: அதர்மம் அதிகரிக்க பூமி தேவி பாரம் தாங்காமல் பிரம்மாவை வேண்ட, அவர் தேவர்கள், கந்தர்வர்கள், அப்ஸரஸுகள் உள்ளிட்ட அனைவரையும் அவரவர் அம்சத்தில் பூமியில் பிறக்குமாறு கட்டளையிட்டு, விஷ்ணுவையும் அவதரிக்குமாறு வேண்டுகிறார். எனவே விஷ்ணு கிருஷ்ணராக அவதரிக்கிறார். மஹாபாரத நிகழ்வு நடக்கப் போகிறது. ஆகவே அனைத்து தேவர்களும் அவரவருக்கு உரிய இடங்களில் பிறந்து விடுங்கள் என்று கட்டளையிடுவதை ஆதிபர்வம் (65ம் அத்தியாயம்) விளக்குகிறது.
நளாயினியே திரௌபதி: நளாயினியே தனது பெண் திரௌபதியாகப் பிறந்திருக்கிறாள் என்பதை வியாஸர் சொல்லக் கேட்டு ஆச்சரியமடைந்த துருபதன் அவளது ஜனனத்திற்கான காரணத்தை வினவ, அவளது முன் ஜென்ம வரலாற்றை வியாஸர் விரிவாக விளக்குகிறார். (ஆதி பர்வம் - 213ம் அத்தியாயம்) அருவருப்பான உருவம் கொண்ட கிழவரும் வியாதியால் பீடிக்கப்பட்ட வருமான மௌத்கல்யர் என்ற மஹா முனிவருக்கு மனைவியாக வாய்த்த நளாயினியுடன் காம போகங்களில் திளைத்து வாழும்போது ஒருநாள் அதில் சலித்துப் போன மௌத்கல்யர் வைராக்கியமடைந்து பிரம்ம தியானத்தில் ஈடுபடத் தொடங்கினார். அப்போது நளாயினியை அவர் விடவே, நளாயினி பூமியில் விழுந்தாள். தான் இதுவரை அனுபவித்த போகங்களில் திருப்தியுறாதவளாயிருப்பதை நளாயினிக்கு தெரிவிக்கவே மௌத்கல்யர். துருபதனின் புத்திரியாக நீ இருப்பாய். அப்போது ஐந்து கணவர்கள் உனக்கு இருப்பார்கள். அழகான உருவம் உடைய அவர்களுடன் நீ வெகு காலம் இன்பத்தை அடைவாய் என்று கூறுகிறார். பிறகு அவள் சங்கரரை நோக்கித் தவம் புரியவே அவர் நேரில் தோன்றி, நீ ஐந்து கணவர்களை அடுத்த ஜென்மத்தில் அடைவாய் என ஆசீர்வதித்து வரம் கொடுகிறார். ஏன் ஐந்து கணவர்கள்? என்று திகைப்புடன் நளாயினி வினவ, நீ ஐந்து முறை பதியைக் கொடும் என்று கேட்டாய்! ஆகவே, உனக்கு ஐந்து கணவர்கள் அமைவார்கள் என்று மஹேஸ்வரர் பதில் அருளுகிறார். நளாயினியைப் பற்றி மஹாபாரதம் விவரிக்கையில் நள-தமயந்தியின் புத்திரியே அவள் என்ற ஒரு சுவையான செய்தியையும் அது தருகிறது.
ஹிரண்யகசிபுவே சிசுபாலன்: ஆதி பர்வத்தில் மிக விவரமாகக் கூறப்படும் புனர்ஜென்ம விவரங்கள் ஆச்சரியம் தருபவை. ஹிரண்யகசிபுவே சிசு பாலனாகப் பிறக்கிறான். விப்ரசித்தி என்ற அசுரனே ஜராசந்தனாகப் பிறக்கிறான். ப்ரஹ்லாதனுக்குத் தம்பியாக இருந்த ஸம்ஹ்லாதன் சல்லியனாகவும், இன்னொரு தம்பியாகிய அநுஹ்லாதன் த்ருஷ்ட கேதுவாகவும் பிறக்கின்றனர். அஜகன் என்பவன் ஸால்வனாகப் பிறக்கிறான். ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவரான அனுமன், த்வாபர யுகத்திலும் இருந்து பீமனைச் சந்தித்து ஆசி கூறுகிறான்.
பீஷ்மரே அஷ்டவஸுக்களில் கடைசி வஸு: அஷ்டவஸுக்கள் வஸிஷ்டருடைய சாபத்தாலும், இந்திரனுடைய கட்டளையினாலும், சந்தனு ராஜாவுக்கு கங்காதேவியிடம் புத்ரர்களாக ஜனித்தனர். அவர்களில் கடைசி வஸுவே பீஷ்மர். ருத்ரர்களுடைய கூட்டத்திலிருந்து வந்தவர் கிருபாசாரியார். துவாபுர யுகமே வந்து பிறந்து சகுனியாக ஆனது ! ஸப்த மருந்துகளின் பட்சத்திலிருந்து கிருஷ்ணனது நெருங்கிய தோழனான சாத்யகி பிறந்தான். விராட ராஜாவும் ஸப்த மருத்துக்களிலிருந்து தோன்றியவனே. பாண்டவர்களின் ஜனனம் அனைவரும் அறிந்ததே. ஹம்ஸன் என்ற பெயர் பெற்ற கந்தர்வ ராஜனே திருதராஷ்டிரனாகப் பிறந்தான். அவனது தாயார் செய்த குற்றத்தினால் ரிஷியின் சாபத்திற்கு ஆளாகிக் குருடனாக அவன் பிறக்க வேண்டி நேர்ந்தது. பாண்டு ஸப்த மருத்துக்களின் கூட்டத்திலிருந்து ஜனித்தவன். கலியின் அம்சம், கெட்ட எண்ணமுடைய துரியோதன ராஜாவாக பூமியில் ஜனித்தது. மிக நீண்ட பட்டியலான இந்த புனர் ஜென்ம விவரங்களை ஆதி பர்வம் அறுபத்தெட்டாம் அத்தியாயம் விவரிக்கிறது. பரந்த நூல் நெடுகிலும் நாம் காணும் புனர்ஜென்ம விவரங்களைத் தனி நூலாகவே ஆக்கி அதன் மர்மங்களை அவிழ்க்க முற்படலாம். இவை எல்லாம் ஹிந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றான மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தி அன்றறிவாம் என்னாது அறம் செய்க என்ற கட்டளையைப் போதித்துக் கொண்டே வருகிறது. இவற்றை நுணுகி ஆராய்ந்தால் மறம் வலிமையுறுவது போலத் தோன்றுவதும், ஆனால் இறுதியில் அறமே ஜெயிப்பதையும் பார்த்து மகிழ முடிகிறது.

ஆன்மிக கதை

பயமுறுத்த பழகிக்கொள்

 
ஒரு கிராமத்தில் வசித்த 17 வயது இளைஞன் மகாகெட்டவன். வயதுக்கு மீறிய பேச்சு, நடத்தை... அவனைப் பார்த்தால் இளம்பெண்கள் நடுங்கி ஓடுவார்கள். இருந்தாலும், அவர்களை விரட்டிச் சென்று துன்புறுத்துவான்.
ஒருமுறை, ஒரு முனிவர் அவ்வூருக்கு வந்தார். இளைஞன் வசித்த தெருவுக்குள் சென்றார். ஊர் மக்கள் அவரை மறித்து, ""சுவாமி! அங்கே போகாதீர்கள். அங்கே ஒரு துஷ்டன் வசிக்கிறான். அவனைக் கண்டு பயந்து, அந்தத் தெருவையே காலி செய்துவிட்டு வேறு தெருக்களில் நாங்கள் குடியிருக்கிறோம். ""நான் வேறு தெரு வழியாக சுற்றி செல்வதானால், நேரம் அதிகமாகும். என்னிடம் என்ன இருக்கிறது! இம்சை செய்ய, நான் அவ்வழியிலேயே போகிறேன்,'' என்று சொல்லிவிட்டு நடந்தார். இளைஞன் அவரை மறித்தான்.
""யோவ், சாமி! ஊருக்குப்புதுசா! இந்த இடம் எனக்கு மட்டும் சொந்தம். நீர் சுற்றிச்செல்லும்,'' என்று சொல்லி கையை ஓங்கினான்.
""தம்பி! ஒன்றே ஒன்று கேட்பேன். நீ பதிலளித்து விட்டால் நீ சொன்னபடி செய்கிறேன்,'' என்றவர், ""நான் வழிமாறி சொல்வதால் உனக்கென்ன லாபம்!'' எனக்கேட்டார்.
"ஒன்றுமில்லை' என்றான் அவன்.
""எந்த லாபமும் இல்லாத ஒன்றைச் செய்யாதே. இறைவனை வணங்கு, நல்லதைச் செய்ய முயற்சி செய்,'' என்றார் முனிவர். இளைஞன் மனதில் எப்படியோ இந்த வார்த்தைகள் ஆழமாகப் பதிய, அன்றுமுதல் அவனும் சாந்தமாகி விட்டான்.
இதைப்பயன்படுத்தி ஊர்மக்கள் அவனைத் துன்புறுத்த ஆரம்பித்தனர். சிலர் அடிக்கவும் செய்தனர். உடலெங்கும் காயம் ஏற்பட்டாலும் அவன் அமைதி காத்தான். முனிவர் திரும்ப வந்தார்.
""என்னாச்சு உனக்கு?'' என்றார். நடந்ததை விளக்கிய அவனிடம்,""பிறரை நீ அடிக்க வேண்டாம் என்று தான் சொன்னேன். உன்னைத் தாக்க வந்தால் பயமுறுத்த வேண்டாம் என சொல்லவில்லையே!'' என்றார். அதன்பின் மீண்டும் அவன் பயமுறுத்தலை துவங்க மக்கள் விலகிச் செல்ல ஆரம்பித்தனர்.
நல்லவனாய் இருக்கலாம்; ஆனால், ஆபத்து வந்தால், அதைத்தடுக்கும் விதத்தில் பயமுறுத்துவதில் தவறில்லை.

ஆன்மிக கதை

நாம் பல சாதனைகளைப் புரிகிறோம்.
சிலவற்றுக்காக பாராட்டப்படுகிறோம், பல பாராட்டைப் பெறுவதில்லை. கீதை சொல்கிறது ""கடமையைச் செய், பலனை எதிர்பாராதே'' என்று. ஆனால், பாழும் மனம் என்னவோ புகழைத் தேடி பேயாய் அலைகிறது. பல சாதனைகள் செய்தும் அதற்கான பலனை எதிர்பாராமல் வாழும் நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்கள் புகழடையா விட்டாலும் மக்கள் நெஞ்சங்களில் என்றும் வாழ்ந்து கொண்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஒரு சினிமா நடிகர் அல்லது நடிகையின் பெயரைச் சொன்னதுமே இவர் இன்னார், இன்ன படத்தில் நடித்துள்ளார், இன்ன காட்சியில் சிறப்பாக நடிப்பார் என்றெல்லாம் பிளந்து கட்டி விடுகிறோம். டாக்டர் ஜோனாஸ் சால்க் என்பவரும் இருந்தார். "யார் அவர்?' என்றால், பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே!
இன்று உலகில் பல மனிதர்கள் ஒழுங்காக நடமாடக் காரணமே இவர் தான். ஆம்...இவரும் இவரது குழுவினரும் தான் போலியோவைக் குணப்படுத்தும் வைரஸ் ஒன்றைக் கண்டுபிடித்தனர். புளூகாய்ச்சலுக்கு மருந்து தயாரிக்கும் பணியையும் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம் இவரிடம் ஒப்படைத்தது. அந்த மருந்தைக் கண்டுபிடித்து உலகப்புகழ் பெற்றார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்ற இவர், தனது சாதனைகளுக்காக அமெரிக்க ஜனாதிபதியிடம் விருதெல்லாம் வாங்கியிருக்கிறார்.
நம்மூர் காந்திஜிஜையே மறந்து விட்ட நாம், இவரை ஞாபகம் வைத்திருக்க நியாயமில்லை தான்! இனியாவது ஒவ்வொரு போலியோ முகாம் நடக்கும் போதும் இவரை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சாதனைகள் மூலம் நாம் புகழ் பெறலாம், பரிசுகள் பெறலாம். இதெல்லாம் நமது ஆத்ம திருப்திக்காகவே. ஆனால், நமது கண்டுபிடிப்பு அல்லது சேவை மூலம், முகம் தெரியாத கோடிக்கணக்கான மக்கள் பயனடைகிறார்கள் என்றால், அதை விட ஆத்மதிருப்தி வேறென்ன வேண்டும்! ஊருக்காக வாழ்பவர்களுக்கு இறைவனின் இதயத்தில் இடஒதுக்கீடு உண்டு. அவர்கள் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டுவோம்.

கடவுள் எங்கே

கடவுள் எங்கே இருக்கின்றார்?
கடவுள் இருக்கின்றாரா என்பது பலருக்கு ஐயப்பாடு. இருந்தால் அவர் எங்கே இருக்கின்றார் என்பதிலும் ஐயம். அவர் என்ன வடிவில் இருக்கின்றார் என்பதிலும் ஐயம்.
சில பொருள்களைக் கண்ணால் காணமுடியாது. காணமுடியாமையால் அப்பொருள் இல்லை யென்று கூறுவது அறிவுடமையாகாது. மலரில் மணம் இருக்கின்றது. அந்த மணத்தைக் கண்ணால் காண முடியாதல்லவா? ஒருவன், இம்மலரில் மணம் இருக்கின்றதா என்று முப்பது ஆண்டுகளாகக் கண்ணால் உற்றுப் பார்த்தேன். பூதக் கண்ணாடி வைத்தும் பார்த்தேன். வாசனை இருந்தால் என் கண்ணுக்குத் தெரியாதா? ஆகவே இம்மலரில் வாசனை இல்லை என்று முடிவு கட்டினான். அப்படி முடிவு கட்டிய மேதாவிக்கு மூக்கில் சதை வளர்ந்திருந்தது.

காற்று வாய் வழியாக வந்து போய்க் கொண்டிருந்தது. அவன் மலரின் மணத்தைக் கண்ணாலன்றி வேறு எதனால் அறியத் தலைப்படுவான்? அவனைப்  போலவே மூக்கில் சதை வளர்ந்தவர்கள் ஊருக்கு நான்கு பேர் ஒன்றுகூடி மலரில் மணம் இல்லையென்று தீர்மானம் செய்தால், அதை நல்ல மூக்குள்ள ஒருவன் ஒப்புக் கொள்வானா என்பதைச் சிந்தியுங்கள்.

மலரின் மணத்தை நாசியினால் அறிதல் வேண்டும். ஒரு செய்யுளில் பொதிந்து கிடக்கும் கருத்தை அறிவினால் அறிதல் வேண்டும். இனிக் கடவுளை மெய்யறிவினால் அறிதல் வேண்டும். மெய்யறிவு என்பது நூல்களைப் படிப்பதனால் வரும் கலையறிவு அன்று. நூலறிவால் வாலறிவனாகிய இறைவனை அறிய முடியாது. மெய்யறிவு என்பது அநுபவத்தில் விளைவது. சுட்டியறிகின்ற உலக அறிவு முழுவதும் அற்றுப்போன இடத்திலே அநுபவ அறிவு தலைப்படும். அந்த அளவில் அறிவுக்கறிவான இறைவனுடைய அருட்காட்சி தோன்றும். இதனை அநுபவ ஞானியாகிய அருணகிரிநாத சுவாமிகள் கந்தரநுபூதியில் இனிமையாகவும் அழகாகவும் கூறுகின்றார்

"அறிவொன் றறிநின் றறிவார் அறிவில்
 பிறிவொன் றறநின்ற பிரானலையொ
 செறிவொன் றறவந் திருளே சிதைய
 வெறிவென் றவரோ டறும்வே லவனே."
-  கந்தரநுபூதி

"அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சும்
 அடியா ரிடைஞ்சல் தளைவோனே"
-             திருப்புகழ்

ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன் அறிஞர்கள் பலர் ஒன்றுகூடி கடவுளைப் பற்றி ஆராய்ந்து விவாதித்தார்கள்.
ஒருவர், "கடவுள் கைலாயத்தில் இருக்கின்றார்" என்றார்.
ஒருவர், "கடவுள் சூரியமண்டலத்தில் இருக்கின்றார்" என்றார்.
ஒருவர், கடவுள் தேவேந்திர உலகத்தில் இருக்கின்றார்" என்றார்.
ஒருவர், "கடவுள் அண்ட முடிவில் இருக்கின்றார்" என்றார்.
ஒருவர், "கடவுள் வேத முடிவில் இருக்கின்றார்" என்றார்.
ஒருவர், "கடவுள் அறிஞர் நடுவே இருக்கின்றார்" என்றார்.
இவ்வாறு பலர் பலவாறு கூறித் தருக்கம் புரிந்தார்கள். தாம் தாம் கூறியதே சரியென்று வாதிட்டு வழக்கிட்டுக் கொண்டார்கள்.

அக்காலத்தில் காரைக்கால் என்ற திருநகரத்தில் அறிவின் கருவூலமாகப் புனிதவதியார் விளங்கிக் கொண்டிருந்தார். ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அறிவில் சிறந்தவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஞானத்தைப் பெண்ணாகக் கூறுவது சாத்திரம்.

"சக்தி தான் யாதோ என்னில் தடையில்லா ஞானமாகும்".
- சிவஞான சித்தியார்

ஆதலினால் கடவுள் எங்கே இருக்கின்றார் என்று வாதிட்டுக் கொண்ட அறிஞர்கள் அனைவரும் ஒருங்கு திரண்டு காரைக்காலுக்கு வந்தார்கள். அங்கே அறிவும் அன்பும் ஆசாரமும் பண்பும் ஒழுக்கமும் கற்பும் சேர்ந்து ஓர் உருவாக அவதரித்தது போல் காரைக்கால் அம்மையார் இருந்தார். அவரிடம் அறிஞர்கள் சென்று வணங்கி, தாங்கள் கடவுள் எங்கே இருக்கின்றார் என்று வாதம் புரிந்ததையும் முடிவு காண முடியாமல் போனதையும் கூறி நின்றார்கள்.
அம்மையார் தனித்தனியே அவர்களை நோக்கி அவர்கள் கருத்தை வினவினார்கள். அவர்களும் கடவுள் வானத்திலும் வானவர்கோன் தானத்திலும் இருக்கின்றார் என்று தத்தம் கருத்தை கற்ற நூலறிவைக் கொண்டு கழறினார்கள்.

தலைமை சான்ற புலமை நிறைந்தவரும் மெய்யறிவு பெற்றவருமான அம்மையார் புன்னகை புரிந்து, கடவுள் இருக்குமிடம் இதுவென ஒரு நேரிசை வெண்பாவில் விடை பகர்ந்தார்.

"வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாருந் தாமென்க - ஞானத்தான்
முன்னஞ்சத் தாலிருண்ட மெய்யொளிசேர் கண்டத்தான்
என்னெஞ்சத் தானென்பன் யான்."

இறைவன் நினைப்பவர் மனம் கோயிலாகக் கொள்பவன். பொதுவாக எல்லோருடைய உள்ளங்களிலும் இருக்கின்றான். உள்ளம் உருகி நினையாதார் உள்ளத்துள் பாலில் நெய் போல் மறைந்திருக்கின்றான். உருகிய உள்ளத்துடன் ஓவாது உள்குவார் உள்ளத்துள் தயிரில் நெய் போல் வெளிப்பட்டுத் தோன்றி நிற்பான். அம்மையார் இடையறாது இறைவனை நினைந்தவராதலின் அவருடைய நெஞ்சிலே விளங்கித் தோன்றினான்.

ஆதலால் அம்மையார், ஆண்டவன் வானத்திலிருக்கின்றான், வானவர்கோன் தானத்திலிருக்கின்றான், வேத நடுவில் விளங்குகின்றான் என்று கூறுவாரெல்லாம் கூறுக. நான் கடவுள் என் நெஞ்சிலிருக்கின்றான் என்று கூறுவேன் என்று யாரும் மறுக்க முடியாத அளவில் அழகாகக் கூறினார்.

இப்பாடலின் மூன்றாவது வரி முன்னஞ்சத்தாலிருண்ட மெய்யொளி சேர் கண்டத்தான் என்பது மிகவும் அருமையானது. இறைவனுடைய கண்டம் நஞ்சினால் இருண்டு ஒளி செய்கின்ற இருளில் ஒளி என்ற முரண்தொடையணியாக மொழிந்த அழகு நனிபெருஞ் சிறப்புடையது.

எனவே இறைவன் இடையறாது எண்ணுவார் இதயத்தில் இருக்கின்றான் என்பதை யாவரும் அறிந்து ஐயந்தீர்ந்து அக மகிழ்ந்தார்கள்.

August 29, 2011

Lord Shiva
India is the religious country and Indian spends their lots of time in worship. There are so many Lords, whom they believe and worship but the Lord Shiva is the Generator of the earth and most of the people likes to spend their time in the meditation of Lord Shiva. There are so many different shapes or designs that are known as jyotirlinga in which, Lord Shiva arrived on the earth. People esteem that “the Lord Shiva manifested on the earth on Aridra Nakshatra in the form of columns fire or light and a person seen him to converted into the jyotirlinga” but there is no distinguish of it.
Twelve Jyotirlinga
There are twelve jyotirlinga available on the earth which are famous as the shrine in the world and people go for see these jyotirlinga and to virtue. These jyatirlinga present in different states of India and the places where these jyotirlinga presents are given below:
1. Somnath is located in Saurashtra of Gujarat which is known as prabhas patan. This temple is destroyed and re-built six times.
2. Mallikarjun is present in the Shrishailam or Srisailam of Andhra Pradesh which is known as the ancient temple.
3. Mahakal is present in Ujjain which is known as Mahakalaswar of the Madhya Pradesh state.
4. Omkar is also known as Mammaleshwaram which is present beside the Narmada River of the Madhya Pradesh.
5. Vaijnath is present in the parli of Maharastra which is also known as Vaijnath temple.
6. Bhima Shankar is present near of pune in maharastra.
7. Rameshwaram is located in Setubandha of TamilNadu.
8. Naganath is also known as Nageshwar which is located in Darukavana of Maharastra.
9. kashi Viswanath is located in Banaras or Varanasi of Uttar Pradesh.
10. Trimbakeshwar is present near Nasik on the banks of river Godavari and it comes in state Maharastra.
11. Kedarnath is located in Utterkhand Himalayas of the state of Uttar Pradesh.
12. Ghurmeshwar present in Shivalaya OR Grineshwar present in Visalakam, near Ellora caves of Maharastra.
"12 twelve Jyotirlinga"
These are the twelve Jyotirlinga of the lord shiva which are famous in the world and in Indian culture it is known as shrine place where people go for getting peace and to virtue. These places are also famous for completing desire that means people believes that they can every thing in their life by going these places because these are the haven of the earth and everyone wants to feel it.
Amarnath
The amarnath is present in the jammu & Kashmir and it is placed 145 km east from the Srinagar. Amaranth is also a jyotirlinga of the lord shiva and people believes that lord Shiva present in the earth in the form of ice at amarnath. The amarnath jyotiflinga is completely made by the ice and it generates automatically from the earth in the form of ice. The size of the jyotirlinga continuously changes which may be decreases and increases every year according to the seasons and also with the change in moon that means it deceases as moon waxes and increases as moon wanes. The size of the shivalinga goes up to 6 fts.
Amarnath Yatra
The amarnath yatra is possible in two times in a year and people go to see that beautiful sculpture of the lord Shiva which is not possible any other place. It is very difficult to go for amarnath yatra separately by own vehicle and it becomes costly for each person so mostly people goes in group with their relatives or neighbour or other pilgrims. You can get different packages for going to amarnath yatra and the charges of amarnath yatra are different for different season.
"amarnath image"

LORD SHIVA



Kailashnath Mahadev : World's Tallest Lord Shiva Statue (143 ft)



Kailashnath Mahadev : Situated at Kailashpuri, just 20 kms from Kathmandu Valley on the way to Banepa

Kailashnath Mahadev is the world's tallest Lord Shiva statue (143 ft), Situated just 20 Kms from Kathmandu Valley at Kailashpuri (Sanga) on the way to Banepa. The statue is built by Mr Kamal Jain (Founder of Hilltake Group of Companies). Although he was born in India, he made the tallest statue in Nepal & made Nepal & Nepalese feel proud to the world...

Lord Shiva Graphics,Siva photos,Parvati,Ganesha,Shivji Animation Images

Latest and beautiful graphics of Lord Shiva for your blog and website.Religious pictures & gif images of lord shiva with parvati mata with their family and children for myspace,google+,facebook and multiply.Maha Shivratri Festival is celebrated by worshippers of siva to obtain his blessings and progress in spirituality and meditation.One of the great among all gods is shankara who saves his bhaktas from evil, diseases and death whosoever recites his name with faith and decotion.HD images and pictures of lord shiva along with his shakti in tantra pose and in meditative asana in himalayas.Lord shiva names are many which are recited with love by his ardent devtees all over india and the world.Mantra of lord shiva is "Aum Namah Shivaya".Shiva songs and bhajans are sung by people who have faith in siva power in this universe.


Lord Shiva dancing f death after destroying evil

Lord Shiva and kali and mahakaal
 
Lord Shiva family graphics ,ganesha, parvati ,kartikeya

 
Lord Shiva shivalinga with parvati in himalayas
 
Lord Shiva angry pics, blessing photos

 
Lord Shiva animation gifs images

Lord Shiva wit baby ganesha loving pose


Lord Shiva meditating in yoga

Vandana of lord shiva is done by shivaites in south india and those wh follow his path of yoga and tantra.On Shivaratri people around the world worship shivalinga with panchgavya, belapatra, dhatura and other articles.You can download pics of siva free from our site for your blog and blogger.