August 10, 2011

சிவ... சிவ.... ராத்திரி சிவராத்திரி




சிவராத்திரி என்பதற்கு மங்களகரமான இரவு, இன்பம் தரும் இரவு என்பது பொருள். இந்த உலகம் முழுவதும் மகா பிரளயத்தில் சிவபெருமானிடம் ஒடுங்கிய நாளே மகா சிவராத்திரி என்று சைவ சமயம் கூறுகிறது. சிவராத்திரி ஐந்து வகைப்படும். அவை

நித்திய சிவராத்திரி: ஒவ்வொரு சதுர்த்தியிலும் சிவபூஜை செய்து ஒரு வருடத்தில் 24 சிவராத்திரி பூஜை செய்ய வேண்டும்.

பட்ச சிவராத்திரி: தை மாதம் கிருஷ்ணப் பிரதமை முதல் தொடங்கி 13 நாட்கள் தினமும் ஒருவேளை உணவு உட்கொண்டு சதுர்த்தசியில் பூஜை செய்யவேண்டும்.

மாத சிவராத்திரி: மாசி கிருஷ்ண சதுர்த்தசி, பங்குனி மாதத்தில் முதலில் வரும் திருதியை, சித்திரை கிருஷ்ண அஷ்டமி, வைகாசி முதல் அஷ்டமி, ஆனி சுக்ல சதுர்த்தி, ஆடி கிருஷ்ண பஞ்சமி, ஆவணி சுக்ல அஷ்டமி, புரட்டாசி முதல் திரயோதசி, ஐப்பசி சுக்ல துவாதசி, கார்த்திகை முதல் சப்தமியும், அஷ்டமியும், மார்கழி இருபட்ச சதுர்த்தசிகள், தை சுக்ல திருதியை இவை அனைத்தும் மாத சிவராத்திரி எனப்படும்.

யோக சிவராத்திரி: சோமவாரத்தன்று பகல், இரவு இரு பொழுதுகளிலும் அமாவாசையாக இருப்பின் அது யோக சிவராத்திரி எனப்படும். மஹா சிவராத்திரி:மாசி மாதம் கிருஷ்ண பட்சம் சதுர்த்தசி இரவு மஹா சிவராத்திரி புண்ணிய காலமாகும்.

அன்றைய தினம் இரவு கடைசி 14 நாழிகை (5 மணி 36 நிமிடங்கள்) லிங்கோத்பவ காலம் எனப்படும்.

சிவமகாபுராணம், லிங்க புராணம், ஸ்காந்த பாத்மம் முதலிய பத்து புராணங்கள், மற்றுத் வாதூலம் முதலிய ஆகமங்கள் ஆகியவற்றில் சிவராத்திரியின் சிறப்பு சொல்லப்பட்டிருக்கிறது.

சிவராத்திரியில் சிவனருள் பெற்ற வேடன்


வேடன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடப் போனான். பகலில் விலங்கு ஒன்றும் கிடைக்காததால், இரவில்நிச்சயமாக வேட்டை ஆடலாம் என்று ஒரு மரத்தில்ஏறி அமர்ந்தான். இரவு தூங்காமல் இருக்க மரத்தில் உள்ள இலைகளைப் பறித்துப் போட்டுக் கொண்டே இருந்தான்.

இரவு கழிந்தது. சூரிய உதயம் ஆனது. பொழுது விடிந்ததும் மரத்திலிருந்து கீழே இறங்கினான். அவன் உறங்காமல் விழித்திருந்த நாள் மகா சிவராத்திரி. அவன் அமர்ந்திருந்த மரம் வில்வமரம். அவன் இலைகளைப் பறித்துப் போட்ட இடம் சிவலிங்கம் இருந்த இடம்.

அவனை அறியாமல் அவன் சிவபூஜை செய்தாலும், மறுபிறவியில் அவன் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து சுகமாக வாழ்ந்தான்.

இது போன்று இன்னும் பல வேடன் திருக்கதைகள் சொல்லப்படுவதுண்டு.




சிவராத்திரி விரத பலன்கள்



* சிவராத்திரி மகிமையை திருநந்திதேவர் உபதேசிக்க சூரியன், முருகன், மன்மதன், யமன், இந்திரன், அக்கினி, குபேரன் முதலியவர்கள் அனுஷ்டித்து பல வரங்கள் பெற்றார்களாம்.


* விஷ்ணு இந்த விரதம் இருந்து சக்கராயுதத்தையும், லட்சுமியையும் பெற்றார்.


* பிரம்மஹத்தி தோஷத்தையும் நீக்க வல்லது சிவராத்திரி விரதம்.


* சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பவருக்கு அசுவமேத யாகம் செய்த பலன்கிடைக்கும்.


* சிவராத்திரி விரதம் மேற்கொண்டால் புத்தி, முக்தி ஆகியவை கிடைக்கும்.

சிவராத்திரி ஏற்பட்டதற்கான ஒரு கதை



ஒரு யுகம் முடிந்தபோது பிரளயம் உண்டாகி உலகம் அழிந்தது.

ஆதலால் சகல உயிரினங்களும் ஒடுங்கியிருந்தன. எங்கும் இருள்மயமாகக் காட்சி அளித்தது. எஞ்சியிருந்தவர்கள் சிவனும் உமையவளும் மட்டுமே. அப்போது,

உயிர்கள் உய்யும் பொருட்டு நான்கு யாமங்களிலும் பார்வதி தேவி, சிவபெருமானைப் பூசித்து வேண்டிக்கொண்டார். சிவபெருமான் பிரம்ம தேவருக்கு ஆணையிடவே சிருஷ்டி உருவாகத் தொடங்கியது.

உமையவள் சிவபெருமானிடம், இந்த இரவைச் சிவராத்திரியாக அங்கீகரியுங்கள்.

சிவராத்திரியன்று தங்களை வழிபடுபவர்களுக்கு எல்லா நன்மைகளையும் தந்தருளுங்கள் என்று வேண்டிக்கொண்டார்.

ஒருசமயம் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர்?

என்று போட்டி ஏற்பட்ட போது ஆணவ இருள் தோன்றியது.

தேவர்கள் அஞ்சி நடுங்கினார்கள். சிவன் ஜோதி வடிவமாக நின்றார். அப்போது தேவர்கள் சிவனைப் பூஜித்த காலமே சிவராத்திரி எனப்பட்டது.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதில் வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உட்கொண்டார்.

விஷத்தின் கொடுமை அவரைப் பாதிக்காமல் இருக்கும் பொருட்டு தேவர்கள் இரவு முழுவதும் சிவபெருமானைப் பூஜித்தார்கள்.

அந்த நாளே சிவராத்திரி என்று ஆயிற்று. ஒரு முறை சக்தி விளையாட்டாகச் சிவபெருமானின் மூன்று கண்களையும் மூடினாள். அதனால் சர்வலோகங்களும் இருட்டில் மூழ்கின. அந்த நேரத்தில் தேவர்கள் ஒளி வேண்டி சிவபிரானை வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரியாக ஆயிற்று.

சிவராத்திரி புண்ணிய கதைகள்

கொடியவன் புனிதம் பெற்ற நன்னாள்


சுகுமாரன் என்ற கொடிய கொள்ளைக்காரனை அரசனின் காவலர்கள் பிடிக்க வந்தார்கள். சுகுமாரன் பயந்து காட்டில் மறைந்து வாழ்ந்தான்.

ஒரு நாள் இரவு. அங்குள்ள சிவாலயத்தில் இரவு முழுக்க சிவ வழிபாடுகள் நடைபெற்றன. அதை ஆவலலுடன் சுகுமாரன் கண்ணுற்றான். அந்த நாள் சிவராத்திரி ஆகும். கொடியவனான அவன் ஆயுள் முடியும் பொழுது கூட சிவ... சிவ... என்று சொல்லிக் கொண்டே உயிர் விட்டான். சிவராத்திரி அன்று பூஜையைக் கண்டதாலும் உயிர் போகும் தறுவாயில் சிவ... சிவ... என்று சொன்னதாலும்அவன் பேறுகள் பல பெற்று சிவனடி சேர்ந்தான்.

குணந்தியை குபேரனாக்கிய சிவராத்திரி


கலிங்க நாட்டை ஆட்சி செய்து வந்த குணந்தி என்ற மன்னன், சிவராத்திரி நாளில் சிவாலயங்களில் விளக்குகள் ஏற்றி ஒளிமயமாக விளங்கச் செய்து வழிப்பட்டான். அதன் பயனாக அவன் அடுத்த பிறவியில் குபேரனாகப் பிறந்தான். அவனை இறைவன் தனக்கு தோழனாக இருக்கும்படி அருளினார்.

விபரிசன் பெற்ற திருவருள்


விபரிசன் என்ற மன்னன் முன் பிறவிகளை அறியும் ஆற்றல் பெற்றவன். இந்தச் சக்தி தங்களுக்கு எப்படி வந்தது? என்று அவன் மனைவி குமுதவல்லி கேட்டாள். அதற்கு அவன். நான் முற்பிறவியில் ஒரு நாயாக இருந்தேன். அப்பொழுது ஒரு நாள் சிவன் கோவியில் இரவு முழுக்க வழிபாடுகள் நடந்து கொண்டிருந்தன. அந்த நாள் சிவராத்திரி.

நான் ஒன்றும் அறியாமல் ஏதேச்சையாக அந்தக் கோயிலை பூஜை வேளையில்சுற்றி சுற்றி வந்தேன். அதுவே எனக்கு இப்பிறவியில் முற்பிறவிகளை அறியும் சக்தியும், அரசப் பதவி கிடைப்பதற்கும் காரணமானது என்று விளக்கினான்.
மஹா சிவராத்திரி


பன்னிரு இருள் ராத்திரிகளில் அருள் சிவனின்-சுப
நல் அருளாய் ஒளிக்கும் அருள் மஹா சிவராத்திரி-பாரில்
ஆறிரு இருள் ராத்திரிகளில் அருள் சிவனின்-சுப
நல் அருளாய் ஒளிக்கும். அருள் மஹா சிவராத்திரி,

பற்றியத் துயரிருகல பாருலகில் பரமசிவனின்-அருள்
நெற்றிக் கண்ணொளிக்கும் மஹா சிவராத்திரி-பாரில்
முற்றியப் பகைப் பினி. மனத் துயரகழ அருள் சிவனின்-அருள்
வெற்றித் திருச் சூழமொளிக்கும் அருள் மஹா சிவராத்திரி

தில்லையிலாடிய சிவ சம்போ சங்கரனின் அருள்-கைச்
சிற்றுடுக்கை ஒலித்து வரும் அருள் மஹா சிவராத்திரி-சிலாபம்
முன்னையிலாடிடும் முக்கண்ணன் மஹேஸ்வரன்.-பாரின்
முட்டறுக்கல் தீர்க்க வரும் அருள் மஹா சிவராத்திரி.

இமயமலை மீதினிலருள் ஈஸ்வரியாள் சக்தியுடன் இணைந்தாடிய-அருள்
ஈசன் இதயமிரங்கியருள வரும், இம் மஹா சிவராத்திரி-மாந்தர்
இதய நிலைக் கண்டு தேவி மஹா சக்தியன்னையுடன்-அருள்
ஈசன் அபயமளித்தருள்வான் இம் மஹா சிவராத்திரியில்

சிவன் ஜோதியாய் எழுந்த திருநாள்


பிரம்மனுக்கும் விஷ்ணுவிற்கும் தங்களில் யார் பெரியவர்? என்ற அகந்தை ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. அப்பொழுது சிவபெருமான் அவர்களின் ஆணவ இருளை நீக்க ஜோதி வடிவாய், லிங்கோத்பவராய் சுடர் விட்டார். அந்த ஜோதி வடிவைக் கண்டு பிரம்மனும் விஷ்ணுவும் வியப்படைந்தனர்.

அப்போது, இதன் முடிவையும் அடியையும்காண்பவர்களே பரம் பொருள் ஆவர் என்ற அசரீரி ஒலித்தது. விஷ்ணு பன்றியாகவும், பிரம்மன் அன்னமாகவும் மாறி அடி முடி காண முயன்று தோற்றனர்.

இப்படி சிவபெருமான் ஜோதியாய் காட்சியளித்த இரவு சிவராத்திரி ஆகும். நிகழ்ச்சி நடைபெற்ற இடம் திருவண்ணாமலை. இதை உணர்த்தும் பொருட்டே சிவராத்திரி இரவு நடைபெறும் நான்கு கால பூஜைகளில் 3 ஆம் கால பூஜையில் ஆலயத்தில் சிவச் சந்நிதி பின்புறம் இருக்கும்லிங்கோத் பவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.





நன்றி!

சிவ பூஜையை விட சிறந்தது எது

எழில் மிகு இயற்கை வளம் கொஞ்சும் அந்த ஊரில் ஒரு ஆசிரமம் இருந்தது.

ஸ்வாமி விஸ்வானந்தரை அனைவருக்கும் தெரியும். மக்களுக்கு உபதேசிப்பதும் , பக்தி ரசம் பொங்க பாடல்கள் பாடுவதும் அவரின் முக்கிய பணி.
தனது சிஷ்யர்களுடன் ஆன்மீக பணி ஆற்றும் விஸ்வானந்தருக்கு சிவ பூஜை, சம்பிரதாயம் என தனது நித்திய கடமைகளில் மிகவும் கண்டிப்புடன் இருப்பார்.

காலை பிரம்ம முஹூர்த்ததில் எழுந்ததும் தனது பூஜையை ஆரம்பித்தார் என்றால் பகல் பத்து மணிவரை தொடரும். மேலும் மாலை சந்தியாகாலத்தில் மறுபடியும் பூஜை. அவரது சிஷ்யர்கள் அவருக்கு உதவியாக பூஜையில் ஈடுபடுவார்கள்.
பூஜைக்கு தேவையான மலர்கள் மற்றும் அபிஷேக பொருட்களை தயாரிப்பது, பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்வது என அனைவருக்கும் வேலை சரியாக இருக்கும்.


பூஜை துவங்கியதும் சிவலிங்கத்தை பார்த்து அவர் அமர்ந்து கொள்வார்.
கைகள் அவர் நீட்ட அந்த தருணத்திற்கு தேவையான பொருட்களை சிஷ்யர்கள் அவருக்கு தருவார்கள். தவறான பொருட்களை தந்தாலோ அல்லது காலதாமதம் செய்தாலோ அவ்வளவுதான். ருத்திர பூஜை செய்பவர், ருத்திரனாகவே மாறிவிடுவார். அந்த சிஷ்யனின் கதி அதோகதிதான்.


இன்னிலையில் தான் சில மாதங்களுக்கு முன் நாதன் அவரிடம் சிஷ்யனாக சேர்ந்திருந்தான். கடைநிலையில் தொண்டாற்றி வந்த நாதன் படிப்படியாக முன்னேறி அவரின் பூஜைகளுக்கு உதவி செய்ய துவங்கினான்.

நாதனின் எளிமை, பணிவு விஸ்வானந்தருக்கு பிடித்திருந்தது. தனது பூஜைக்கான பணியை பிறரைவிட நேர்த்தியான முறையில் நாதன் செய்ததும் இதற்கு ஒரு காரணம்.

ஒரு நாள் பூஜையை ஈடுபட்டிருந்தார் விஸ்வானந்தர். என்றும் இல்லாதது போல அன்று சில தடங்கலை உணர்ந்தார் விஸ்வானந்தர். பூஜையில் மனது ஈடுபடவில்லை. ஏதோ யோசனையில் இருந்தார். தன்னை பார்க்க வந்த ஒருவர் தரக்குறைவாக திட்டியது தான் முக்கிய காரணமாக இருந்தது. நேற்று முதல் அவருக்கு மனதில் இது ஓடிக்கொண்டே இருந்தது. பலர் முன்னில் தன்னை அவமானம் கொள்ள செய்ததாக நினைத்தார்.


திடிரென தனது உடலை யாரோ தொடுவதை உணர்ந்த விஸ்வானந்தர் சுயநினைவுக்கு வந்தார். எதிரே நாதன் நின்று கொண்டு, “குருவே பூஜையை தொடராமல் என்ன யோசனை? தயவு செய்து தொடருங்கள்” என்றான்.


என்றும் இல்லாத கோபம் விஸ்வானந்தரை சூழ்ந்தது. நித்திய பூஜைக்காக ஆச்சாரமாக இருக்கும் என்னை ஏன் தொட்டாய்? உனக்கு என்னை தொடும் அருகதையை யார் தந்தது? சிவ பூஜையை பற்றி உனக்கு தெரியுமா? இதை தான் சிவ பூஜையில் கரடி என்பார்கள். சரியான கரடி நீ. என் முன்னே நிற்காதே என கோபம் கொப்பளிக்க தத்தினார்.

அமைதியாக பார்த்த நாதன் கூறினான்.. “ குருவே ஆச்சாரம் என்பது ஏது?. நேற்று ஒருவன் சொன்ன கடும் சொல்லை மனதில் வைத்திருக்கிறீர்கள். உங்கள் உடல் ஆச்சாரம் பற்றி சொல்லிகிறீர்களா அல்லது மன ஆச்சாரம் பற்றி சொல்லுகிறீர்களா? உங்களுக்குள் இருக்கும் சிவனை பூஜித்திருந்தீர்கள் என்றால் அவனின் அவமான சொற்காள் உங்களுக்கனதல்ல சிவனுக்கானது என இருந்திருப்பீர்கள். யாராவது புகழ்ச்சியான சொல்லை கூறியிருந்தாலும் உங்கள் நிலை சமநிலை தவறி இருக்காது. சிவ சொல் இருக்க வேண்டிய மனதில் அவச்சொல் இருக்கலாமா?” என்றான்.


ஏற்கனவே கோபத்தில் இருந்த விஸ்வானந்தர் கோபத்தின் உச்சத்திற்கு சென்று, “தினமும் இரு வேளையும் சிவனை பூஜிக்கும் என்னை பார்த்து விமர்சிக்கும் தன்மை உனக்கு யார் அளித்தார்கள்? எனக்கு பக்தி போதவில்லை என கூறுகிறாயா? எனது மனதில் இருப்பதை நீ சொல்லுகிறாய் ஆச்சரியம் தான். பூஜை செய்யாத உனக்கு எப்படி இந்த ஆற்றல் வந்தது? நீ மாயக்காரனா?” என்றார்.

“நான் மாயன் அல்ல குருவே. பல மணி நேரம் பூஜை செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. ஒவ்வொரு ஷணமும் குருவாகிய உங்களை எனது மனதில் பூஜிக்கிறேன் இதை விட வேறு பக்தி என்ன வேண்டும்? என்னை பொருத்தவரை இறைவனை காட்டிலும் குருவான நீங்களே எனக்கு முக்கியம். நீங்கள் சிவனை பூஜிக்க நான் உங்களை பூஜித்ததன் விளைவே இந்த விமர்சனம் தவறிருந்தால் மன்னிக்கவும்”
என்றான் நாதன்.

நாதனின் குருபக்தியை உணர்ந்த விஸ்வானந்தர் அவனை ஆரத்தழுவினார்.

-------------------ஓம்--------------------------


தினமும் நான்கு வேளை குளிப்பதாக சொல்லும் பக்திமான்களே தவளை நித்தமும் நீரில் இருக்கிறது அது உங்களை விட ஆச்சரமானதல்லவா? எனும் சிவவாக்கியரின் பாடல் நினைவுக்கு வருகிறது.

உள் பூஜை செய்யாமல் பிறர் பார்வைக்காக வெளிப்பூஜை செய்து என்ன பயன்?


மானச பூஜை செய்ததால் பூசலார் மனதில் குடிகொண்டான் ஈசன்.
அரசனுக்கு கிட்டாதது ஆண்டிக்கு கிட்டியது.

குரு பக்தி இருக்கும் பட்சத்தில் பிற பக்திகள் சூரிய வெளிச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களே.

சிவன் எங்கே இருக்கிறார்

ஆலமரத்தின் மேல் ஒரு குயில் மெல்ல கூவியது...

மரத்தின் அடிப்பகுதியில் குருவின் முன் அமர்ந்திருந்தான் விஸ்வநாத பிரம்மச்சாரி.

அவனது கண்கள் கலங்கி இருந்தன... தனது கைகளால் குருவின் கால்களை பற்றியவாறே பேச துவங்கினான்...”குருவே உங்களிடமிருந்து வேத சாஸ்திரத்தையும் பிரம்ம சூத்திரத்தையும் முழுமையாக கற்றுகொண்டேன். உண்மை பொருளை கூறும் அனைத்து கருத்துக்களையும் நீங்கள் எனக்கு விளக்கியுள்ளீர்கள். உங்களிடம் பணிவிடை செய்வதிலும் , உங்களுடன் இருப்பதிலும் எனக்கு நிகரில்லாத ஆனந்தம் கிடைக்கிறது. இப்படி இருக்க என்னை ஏன் வேறு இடத்தில் இருக்கும் ஒரு ஞானியை குருவாக ஏற்க கட்டளை இடுகிறீர்களே. இது நியாயமா?”..

அவனை மெல்ல தனது கரத்தால் தூக்கி குரு அவனை தீர்க்கமாக பார்த்தார்..”விஸ்வநாதா..! சாஸ்திர ஞானத்தை மட்டும் தான்
என்னால் உனக்கு வழங்க முடியும். உனக்கு பிரம்ம ஞானத்தை வழங்க குரு ஒருவர் காத்திருக்கிர்றார் . காசிக்கு அருகில் இருக்கும் வனத்தில் வசிக்கும் அவரை கண்டு ஞானம் அடைவாயாக...வளர்ச்சி அடையும் வரைதான் புழு கூட்டில் வசிக்க முடியும். அதன் பின் வண்ணத்து பூச்சியாக மாற கூட்டை கடந்து சென்றாக வேண்டும்...சென்று வா”...என்றார் குரு.


பிரிய மனமில்லாமல் தனது குருநாதரிடமிருந்து விடைபெற்றான் விஸ்வநாத பிரம்மச்சாரி..



காசியை அடைந்து அங்கு அவன் பெயரில் வீற்றிருக்கும் விஸ்வநாதரை தரிசித்துவிட்டு , நகரின் வெளியே இருக்கும் வனத்தை நோக்கி நடந்தான்.

வனத்திற்கு உள்ளே இரு நாட்களாக நடந்தும் யாரும் கண்களுக்குதட்டுபடவில்லை. தனது குரு அனுப்பியதன் நோக்கம் புரியாமல் குழப்பம் மேலோங்க பயணத்தை தொடர்ந்தான். பசியும் தாகமும் அவனை சோர்வடைய செய்தது. வழியில் தென்பட்ட தடாகத்தில் நீர் அருந்த குனிந்தான்.

அந்த தடாகத்தின் மேல்பரப்பில் அருகில் இருந்த கோவில் கோபுரம் நிழலாகதெரிந்தது... நடுக்காட்டில் கோவில் இருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் அதை அடைந்தான்..

கோவில் வாசலை அடையும் முன் உள்ளே இருந்து ஓர் குரல் பேச துவங்கியது.....
”வா விஸ்வநாத உனக்காகத்தான் காத்திருக்கிறேன்...உனது குரு என்னை பார்க்கவே அனுப்பினார்..”

தனது ஞான குருவை காணும் ஆவலில் கோவிலின் உள்ளே சென்றான் விஸ்வநாதன்.

அங்கே கண்ட காட்சி அவனை மாபெரும் அதிர்ச்சி அடைய செய்தது...


பரதேசி போன்ற தோற்றம் கொண்ட ஒருவர்...கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மேல் தனது கால்களை வைத்து ஆட்டியவாறு தலையில் கைகளை வைத்து கொண்டும் படுத்திருந்தார்.

விஸ்வநாதனுகோ கோபத்தை கட்டுபடுத்த முடியவில்லை. “எனது குருஉங்களை பற்றி உயர்வாக கூறி அனுப்பினார். நீங்கள் அவர் சொன்னதற்கு நேர்மாறாக அல்லவா இருக்க்கிறீர்கள். ஐயா சற்று சிவன் மேல் இருக்கும் காலை எடுத்து கீழே வைக்க கூடாதா?” என்றான்.

அந்த பரதேசி சற்றும் அவனது கருத்துக்களை காதில் போட்டுக்கொள்ளாமல்அவனை பார்த்து கூறினார்..”ஓ நீ அவ்வளவு பக்திமானா? உனக்குவேண்டுமென்றால் எனது கால்களை எடுத்து வேறு இடத்தில் வை. என்னால் கால்களை எடுக்க முடியாது..” என்றார்.

கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற விஸ்வநாதன் , அவரின் கால்களை பற்றி சிவலிங்கத்தின் மேலிருந்து எடுத்து வேறு இடத்ததிற்கு மாற்ற முயற்சிசெய்தான்.
கால்களை எங்கு வைத்தாலும் அங்கே ஓர் சிவலிங்கம் முளைத்தது...

பல இடங்களில் மாறி மாறி வைத்தான்...அனைத்து இடத்திலும் சிவலிங்கம்தோன்றின...

கடைசியல் முடிவுக்கு வந்தவனாக...

தனது தலையில் அவரின் கால்களை வைத்து கொண்டான்...

தானே சிவமானான்...

----------------------------------ஓம்-----------------------------
திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி
ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி
ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி
ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம்
- 1598

ஞானகுருவின் திருவடி நம்மை முழுமையான பரப்பிரம்ம நிலைக்கு கொண்டுசெல்லும். வேத நூல்களோ அல்லது தத்துவமோ எட்ட முடியாத எல்லையை குருவின்கருணை எளிதில் எட்டிவிடும்.

August 07, 2011

திருப்பதி ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்

திருப்பதி ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்

100_0087

அய்யாவடி

பிரத்யங்கரா தேவி : அய்யாவடி


அய்யாவடி


தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் ஐவர்பாடி என்று பெயர் பெற்ற இருக்கும் ஒரு கிராமம் ஆகும். தற்போது அய்யாவாடி என்றழைக்கப்படுகிறது.
இங்குதான் பிரத்யங்கரா தேவி வாசம் செய்து வருகிறாள். சக்தியின் உக்கிரமான வடிவம்தான் மஹா பிரத்யங்கரா. இந்த பிரத்யங்கரா நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடு எட்டு கைகளோடு, மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காட்சி தருபவள்.
நரசிம்மர் பிரஹலாதனுக்காக இரண்யனை வதைக்க சிங்க உருவமெடுத்தபோது, அதிலிருந்து விடுபட முடியாமல் தன் வேகத்தைக் குறைக்க முடியாமல் நல்லவர்களையும் துன்புறுத்த துவங்கியபோது, அவரால் பாதிக்கப்பட்டவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டார்கள். சிவபெருமான் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, நரசிம்மமூர்த்தியின் உக்கிரத்தை தடுப்பதற்காக பறவையும், பூதமும், மிருகமும் கலந்த ஒரு புதிய வடிவை எடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன. அந்த வடிவுக்கு சரபேஸ்வரர் என்று பெயர். அந்த சரப வடிவத்தின் இறக்கைப் பக்கம் இருப்பவள் இந்த பிரத்யங்கரா தேவி.
இந்த பிரத்யங்கரா சிவனின் ஒரு பக்க சக்தி. அந்த சக்தியை தனியே வைத்து, அதற்கு தனியாக கோயில் கட்டி அய்யாவாடி என்கிற ஊரில், மக்கள் பூஜை செய்து வணங்கி வருகிறார்கள். ஐவர்பாடி என்று பெயர் பெற்ற இந்த கிராமம் தற்போது அய்யாவாடி என்றழைக்கப்படுகிறது. இங்குதான் நம் பிரத்யங்கரா தேவி வாசம் செய்து வருகிறாள்.

இந்தக் கோவிலின் தொன்மையைப் பற்றியும், பழமையைப் பற்றியும், வழிவழியாக பல விஷயங்கள் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன.
பஞ்சபாண்டவர்கள் இந்த இடத்திற்கு வந்து தரிசனம் செய்து, பிறகு அவர்கள் தங்களுடைய ஆயுதங்களை இங்குள்ள ஒரு மரத்தில் கட்டிவைத்துவிட்டு தென்தேசம் சஞ்சாரம் செய்யப்போனார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்தரஜித் இராவணனுக்குத் துணையாக தேவர்களை அடக்க நிகும்பலை யாகம் செய்தான். அவ்வாறு அவன் நிகும்பலை யாகம் செய்த இடம் இந்த அய்யாவாடிதான் என்றும் சொல்லப்படுகிறது.
இங்கு ஒவ்வொரு அமாவாசையன்றும், பௌர்ணமியன்றும் மிகச்சிறப்பாக ஹோமம் நடைபெறுகிறது. அந்த ஹோமத்தில் பல்லாயிரக்கணக்கான ஜனங்கள் கலந்து கொண்டு பயனடைகிறார்கள். 
உக்கிரமான
பணம் படைத்தவர்களால், அதிக உடல்பலம் படைத்தவர்களால் நல்லோர்கள் ஏமாற்றப்படுதலும் வதைபடுதலும் அதிகம் நடக்கிறது. அப்படி வதைபடுபவர்களால் பதிலுக்கு எதுவும் செய்ய முடிவதில்லை. அதிகாரத்தை, உடல்பலத்தை, பணபலத்தை எதிர்க்க பல பேருக்கு சக்தியில்லை. அப்படி சக்தி இல்லாதவர்கள் தங்களுடைய குறைகளை தெய்வத்திடம் முறையிடுகிறார்கள். அப்படி முறையிடுகிற கோயில்களில் மிக முக்கியமானது அய்யாவாடியிலுள்ள பிரத்யங்கரா தேவி கோயில்.
இந்த மஹா பிரத்யங்கரா தேவி கைமேல் பலன் தருவாள். உங்களை அழிக்க எவர் நினைத்தாலும், உங்களை வதைக்க எவர் முயன்றாலும் இங்கு வந்து ஒரு நிமிடம் மனம் கூப்பி தேவியின் பெயரைச் சொல்லி அழைத்து எனக்கு இந்த துன்பம் இருக்கிறது. தயவு செய்து நீக்கி விடு என்று சொன்னால் போதும். உங்கள் எதிரிகளை வெகுநிச்சயமாய் இவள் துவம்சம் செய்வாள். உங்கள் பக்கம் நியாயம் இருக்க வேண்டும் என்பதுதான் இதில் மிக முக்கியம்.

ஒவ்வொரு அமாவாசையன்றும், பௌர்ணமியன்றும் நடக்கும் ஹோமத்தின் உச்சகட்டமாக, வடமிளகாயை அம்பாளுக்கு நிவேதனம் செய்வார்கள். கூடைகூடையாய் மிளகாயைக் கொட்டுவார்கள். ஆனாலும் ஒரு சிறுகமறல் கூட அங்கு எழாது. சகலமும் அவள் உள்வாங்கிக்

இதுதான் புதுகை

புதுகை வரலாறு

தலைநகரம் : புதுக்கோட்டை
பரப்பு : 4,649 ச.கி.மீ
மக்கள் தொகை : 1,452,269
எழுத்தறிவு : 919,086 (71.96 %)
ஆண்கள் : 720,847
பெண்கள் : 731,422
மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 312



வரலாறு:

புதுக்கோட்டை என்பது புதியக் கோட்டை எனப் பொருள்படும். 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொண்டைமான் ரகுநாதா என்பவரால் ஒரு புதிய கோட்டை கட்டப்பட்டு, புதுக்கோட்டை எனப் பெயரிடப்பட்டது. இம்மாவட்டம் பரப்பளவில் சிறிது என்றாலும், வரலாறு, சிற்பம், ஓவியம், ஏனைய கலைகள் மற்றும் கனிம வளம் போன்ற சிறப்புக்களால் பெருமைப் பெற்ற மாவட்டமாகத் திகழ்கிறது. இம்மாவட்டம் பல்லவர், பாண்டியவர், ஹேர், சோபூர், முத்தரையர், ஹொய்சளர், முஸ்லீம்கள், விஜயநகர அரசு, நாயக்கர்கள்,மராத்தியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் படையெடுக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, அவர்களின் கலை கலாச்சாரங்களால் தாக்கம் பெற்றது. சுதந்திரத்திற்கு முன்பு தொண்டைமான்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. 1974 ஜனவரி 1ஆம் தேதி திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களின் சில பகுதிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

பொது விவரங்கள்:

எல்லைகள்:

கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் தஞ்சை மாவட்டமும்; மேற்கிலும் வடக்கிலும் திருச்சி மாவட்டமும்; தெற்கில் சிவகங்கை மாவட்டமும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எல்லைகளாக உள்ளன. கடற்கரை நீளம் 36 கி.மீ.

பருவநிலை:

புதுக்கோட்டை மாவட்டம் வடகிழக்கு பருவ மழையால் நல்ல மழை பெறுகின்றது. சராசரி மழையளவு (ஆண்டுக்கு) 1395.1 மி.மீ.

வருவாய் நிர்வாகம்:

கோட்டங்கள்-2 (புதுக்கோட்டை, அறந்தாங்கி) வட்டங்கள்-7 (கந்தர்வக் கோட்டை, குளத்தூர், ஆலங்குடி, திருமயம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார் கோவில்).

உள்ளாட்சி நிறுவனங்கள்:

நகராட்சிகள்-2 (புதுக்கோட்டை, அறந்தாங்கி) ஊராட்சி ஒன்றியங்கள்-13 (புதுக்கோட்டை, அன்னவாசல், திருமயம், விராலிமலை, குன்றாண்டார் கோவில், பொன்னமராவதி, அரிமழம், அறந்தாங்கி, கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை, மணல்மேல்குடி, திருவரங்குளம், ஆவுடையார் கோவில்); பேரூராட்சிகள்-8; கிராமங்கள்-757.

பாராளுமன்ற தொகுதி

இம்மாவட்டத்திலுள்ள பாராளுமன்றத் தொகுதி-1 (புதுக்கோட்டை)

கல்வி:

பள்ளிகள்: துவக்கநிலை-1,103; நடுநிலை-182; உயர்நிலை-81; மேனிலை-38. கல்லூரிகள்-9; மாட்சிமை தாங்கிய மாமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை; அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, புதுக்கோட்டை; ஸ்ரீகணேசா செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி; ஸ்ரீமூகாம்பிகை பொறியியல் கல்லூரி, கீரனுர்; அரசினர் பாலிடெக்னிக், அறந்தாங்கி; சீனிவாசா பாலிடெக்னிக், கீரனுர்; ஜெ.ஜெ. கலைக்கல்லூரி, புதுக்கோட்டை; ராயவரம் சுப்பிரமணியம் பாலிடெக்னிக், வெங்கடேஸ்வர பாலிடெக்னிக் ஆகிய கல்வி நிறுவனங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன.

இவை தவிர, இலங்கை, பர்மா முதலிய இடங்களிலிருந்து குடிபெயர்ந்தோரின் குழந்தைகள் கல்வி பெறுவததற்காக மாட்டூர் பகுதியில் அகதிகளுக்கான உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 18 வயதிற்கு மேல் 23 வயதிற்கு உட்பட்ட இளங்குற்றவாளிகள் கல்வி பெற ஒரு அரசுப் பள்ளி புதுக்கோட்டையில் இயங்கி வருகிறது.

முக்கிய ஊர்கள்:

அம்புக்கோயில்:

ஆலங்குடி வட்டத்தைச் சேர்ந்த இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து 43 கி.மீ. தொலைவில் உள்ளது. சங்க இலக்கியமான அகநானுறில் இவ்வூர் அலும்பில் எனக் குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டுச் சான்றுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. அலும்பில் என்பதே இன்று அம்புக்கோயில் என்று அழைக்கப்படுகிறது. புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் சக்கரவர்த்தி இங்கு குடியிருந்ததாக 1210 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று கூறுகிறது.

ஆவுடையார் கோயில்:

புதுக்கோட்டையிலிருந்து 49 கி.மீ. தொலைவிலுள்ள இவ்வூர் அறந்தாங்கி வட்டத்திலுள்ளது. இங்குள்ள கோயில் பெயரே ஊர் பெயராய் அமைந்துள்ளது. இது அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய சைவ சமயக் குரவர்களால் பாடப்பெற்ற தலமாகும். இத்தலப் பெருமையை திருப்பெருந்துறை புராணமும், திருவாசகமும் விரித்துரைக்கின்றன. உருவமற்ற வழிபாட்டு முறை இக்கோயிலில் பின்பற்றப்பட்டு, இறைவுருவற்ற மூலத்தானத்தில் பூசைகள் நடைபெறுகின்றன. இவ்வழிபாட்டு முறைக்கு ஆதரவாக கோயிலில் சிறப்பு வாய்ந்த சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படுகின்றன. இவ்வூர்ச் சிவன் கோயில் காலங்காலமாக சைவ வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. கண்கவர் ஓவியங்களும், சிற்பங்களும், கோயிலின் வடிவமைப்பும் இக்கோயிலுக்குப் பெருமை சேர்க்கின்றன. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.

ஆவூர்:
avur_church
புதுக்கோட்டையிலிருந்து 42 கி.மீ. தொலைவிலுள்ள இக்கிராமம் குளத்தூர் வட்டத்திலுள்ளது. இங்கு வாழ்வோரில் பெரும்பாலோர் கிறித்துவர்கள். 1697ல் தந்தை ஜான் வெனன்டியஸ் பவுக்கெட் என்பவரால் கட்டப்பட்ட தேவாலயம் ஒன்று இங்குள்ளது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும். ஈஸ்டர் பெருநாளையொட்டி கிறித்துவர்கள் நடத்தும் சிலுவைப்பாடுகளின் நாடகம் 'ஆவூர் பாஸ்கா' புகழ்பெற்றதாகும்.

கீழநிலை:

Kizhanilaiபுதுக்கோட்டையிலிருந்து 33 கி.மீ. தொலைவிலுள்ள இவ்வூர் திருமயம் வட்டத்திலுள்ளது. சோழர், பாண்டியர் ஆட்சிக் காலத்தில் போர்ப்படைகள் தங்கும் இடமாக கீழநிலை இருந்தது. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் சோழ நாட்டின் எல்லையாக விளங்கியது. கடைசி நாயக்க மன்னர் விஜயராகவா இவ்வூர்க் கோட்டையைக் கட்டினார். இக்கோட்டை பல்வேறு காலக் கட்டங்களில் பல அரசர் கைகளுக்கு மாறியதால் சீரழிந்த நிலையில் உள்ளது. 1683இல் சேதுபதி அரசர் காலத்தில் போர்த்தளவாடங்கள் இக்கோட்டையில் உற்பத்தி செய்யப்பட்டன. கோட்டை 45 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து, சுற்றிலும் மதில்சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. கோட்டையினுள் சிறிய அனுமான் கோவில் உள்ளது. அரியநாயகி அம்மன் கோவிலும், அம்மன் குளமும், விஷ்ணு ஆலயமும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோட்டையிலுள்ள சுரங்கப்பாதை ராமநாதபுரத்து சாக்கோட்டைக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது. என்றாலும் சுரங்கம் அடைபட்டுள்ளது.

கொடும்பாளூர்:

புதுக்கோடடையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள இவ்வூர் குளத்தூர் வட்டத்திலுள்ளது. இவ்வூரின் கலைச் சிறப்புமிக்க கோயில்கள் தென்னிந்திய சிற்பக் கலைப் பெருமைக்குச் சான்றாகத் திகழ்கின்றன. 108 சைவ ஆலயங்கள் கொடும்பாளூர் பராமரிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இவ்வூர் மண்ணை எங்குத் தோண்டினாலும் லிங்கமோ நந்தியோ கிடைக்கின்றன. உடைந்த சிற்பங்களும், புதைந்தும் புதையாமலும் இருக்கும் உருவச் சிலைகளும் பல இடங்களில் காணப்படுகின்றன. சோழர் தலைநகரான உறையூருக்கும் பாண்டியர் தலைநகரான மதுரைக்கும் இடையில் கொடும்பாளூர் இருந்ததாகச் சிலப்பதிகாரம் விவரிக்கிறது.
muvarkoil_vimanam
பெரிய புராணம் இவ்வூரை கோனாட்டுடன் இணைந்த கோனாட்டுக் கொடி நகரம் எனச் சொல்கிறது. இங்குள்ள மூவர் கோயில் பெயர் பெற்றதாகும். இக்கோயிலில் சிற்பங்கள் கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்துள் லிங்க உருவமே இல்லை. சோழர், பல்லவர் கால கலைச் சிறப்பு கோயில் முழுவதும் காணப்படுகிறது. இக்கோயில் நந்தி சுமார் 7 அடி உயரம், 10 அடி நீளம், 11 அடி சுற்றளவுடையது. பல்லவ நரசிம்மன் கால கலை அமைப்பை இந்நந்தி கொண்டுள்ளது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூவராலும் கட்டப்பட்டதால் மூவர் கோயில் என்பர்.

muchukundesvara-templeவேறு சிலர் சேர, சோழ, பாண்டியர்களால் எழுப்பப்பட்டதால் இப்பெயர் பெற்றதென்பர். மற்றும் சிலரோ பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களுக்காக இக்கோயில் கட்டப்பட்டதால் இப்பெயர் வழங்கலாயிற்று என்பர். இவ்வூரிலுள்ள முச்சுக்கொண்டேஸ்வரர் கோயில் முற்காலச் சோழர் கால ஆலயமாகும். பல்லவ கலை அமைப்பில் லிங்கம் கலை வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது மற்றும் இவ்வூரிலுள்ள ஜவஹர் கோவில் சிவாலயமாகும். ஐவர் கோயிலுக்கு சில மீட்டர் தூரத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் பல சோழர் காலச் சிற்பங்கள் கண்டெடுக்கப் பெற்றன. அவை புதுக்கோட்டை, சென்னை அருங்காட்சியங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.

விராலிமலை:
Viralimalai
விறலி (நாட்டியமாடும் பெண்) மலையே விராலி மலை என்று திரிந்ததாகவும் கூறுவர். விராலூர் மலை என்பது விராலிமலை என அழைக்கப்படுகிறது. புதுக்கோட்டையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது. இம்மலையில் சுப்பிரமணியர் கோயில் உள்ளது. நூற்றுக்கணக்கான மயில்கள் இம்மலையில் காணப்படுகின்றன. இத்தலம் அருணகிரிநாதரால் பாடப்பெற்றது. இது ஒரு சுற்றுலாத்
தலமாகும்.

திருவரங்குளம்:
thiruvarangulam_temple
புதுக்கோட்டையிலிருந்து 25 கி.மீ. தொலைவில் புதுக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு ஹரிதீர்தீஸ்வரர் கோயில் உள்ளது. சிற்பங்களுடன் விளங்கும் இக்கோயிலின் நடராசர் சிலை தற்சமயம் டில்லி தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சோழ, பாண்டிய, நாயக்கர் காலத்தைச் சேர்ந்த 65 கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. பெரிய கோட்டை ஒன்று இருந்து அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஊராட்சி ஒன்றியம் இதுவேயாகும்.

திருமயம்:

திருமெய்யம் என்பதே இதன் பூர்வீகப் பெயராகும். அழகிய மெய்யர் இவ்வூர் பெருமாளின் பெயர். புதுக்கோட்டையிலிருந்து கிழக்கில் 12 மைல் தொலைவில் மதுரைக்கு போகும் சாலையில் இவ்வூர் உள்ளது. இங்குள்ள கோட்டை இராமநாதபுரம் அரசர் விஜயரகுநாத சேதுபதியால் கி.பி. 1687 இல் கட்டப்பட்டது. இம்மலையின் தென்சரிவில் இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன. ஒன்று இவை பல்லவர் காலத்தவை.
thirumayam
ஆதிரங்கம் எனப்படும் 'வைணவ ஆலயம்' இவற்றில் ஒன்று. இது திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற தலமாகும். சிவாலயத்தில் இசை சம்பந்தமான பல அபூர்வ செய்திகளைக் கூறும் கல்வெட்டுகளும் உள்ளன. சிவாலயத்தில் உள்ள லிங்கோத்பவர் மிக உயரமானதாகும். இவ்விரு கோவில்களும் இன்று நலிந்த நிலையில் பராமரிப்பற்று உள்ளன. இவ்வூர் பிரமுகர்கள் 'திருமெய்யர் அறக்கட்டளை' என்ற அமைப்பை ஏற்படுத்தி பராமரிப்பு வேலைகளை ஆற்றத் துவங்கியுள்ளனர். தீரர் சத்தியமூர்த்தி இவ்வூரில் பிறந்தவர்.

தேனீ மலை:
புதுக்கோட்டையிலிருந்து 31 கி.மீ. தொலைவில் திருமயம் வட்டத்தில் உள்ளது. இவ்வூர் சுப்ரமணியர் ஆலயம் பழம்பெருமை பெற்ற தலம். மலையின் கிழக்குச் சரிவில் ஆண்டார்மடம் எனும் குகைக் கோயில் இருக்கிறது. ஜைனக் கலாச்சாரம் இப்பகுதியில் பரவி இருந்தமைக்குக் கல்வெட்டு ஆதாரம் காணப்படுகிறது.

திருக்கட்டளை:

புதுக்கோட்டைக்கு 6 கி.மீ. தொலைவில் ஆலங்குடி வட்டத்தில் உள்ளது. கி.மு. 874 ஆம் ஆண்டில் முதலாம் ஆதித்ய சோழனால் இங்கு கட்டப்பட்ட சிவாலயம் சோழர் காலச் சிறப்புடன் திகழ்கிறது. பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் இவ்வாலயச் சுற்றுச் சுவர்களில் காணப்படுகின்றன.

சித்தன்னவாசல்:

Siththannavasalஇது ஒரு சுற்றுலாத்தலம். கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க சித்தன்ன வாசல் குகைக் கோயில்கள் உலகப் புகழ்பெற்றவை. சித்தன்னவாசல் பெரியபுராணம், தேவாரப் பாடல்களிலும் கல்வெட்டுகளிலும் அண்ணல்வாயில் என்று குறிக்கப்படுகிறது. அண்ணல் வாயில் என்பது அன்னவாசல் என்று மாறி வழங்கப்படுகிறது. இங்குள்ள கோயில்கள் பல்லவர் காலச் சிற்பக்கலையைப் பின்பற்றியவை. பாண்டியர் காலத்திய 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அற்புதமான சுதை ஓவியங்கள் இக்கோயில்களில் அழகுற அமைந்துள்ளன.
Siththannavasal
விலங்குகள், மீன், வாத்துக்கள், குளத்தில் தாமரை மலர்களை சேகரிக்கும் மக்கள், இரண்டு நடன ஓவியங்கள் என்று காணப்படும் இவ்வோவியங்களின் தேர்ந்த வண்ணங்கள் இன்றுவரை மெருகு குன்றாமல் காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. அர்தி மண்டபத்தில் 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுதை ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்த ஓவியங்களையும் சிற்பங்களையும் காண நாள்தோறும் வெளிநாட்டினரும் வருகிறார்கள். இங்கு சிறப்பு மிக்க ஜைன ஆலயங்கள் ஆதியில் அமைந்திருந்த தாகவும், பிற்கால பல்லவ, சோழப் பேரரசுகளால் அவை அழிவுற்று சைவ வைணவக் குகைக் கோயில்கள் அமைக்கப்பட்டதாகவும் வரலாறு குறிப்பிடுகிறது. சித்தன்னவாசல் புதுக்கோட்டைக்கு 16 கி.மீ. தொலைவில் குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது.

புதுக்கோட்டை:
Pudukkottai
புதுக்கோட்டை நகரம் சென்னைக்குத் தென்மேற்கில் 366 கி.மீ. தொலைவில் இருக்கிறது. நகரின் மத்தியில் கோட்டை ஒன்று வலுவான மதிர்சுவர்கள் சூழ, தக்க பாதுகாப்பு அரண்களுடன் கட்டப்பட்டுள்ளது. கோட்டைக்கு எதிரில் கிழக்கிலிருந்து மேற்காகவும் வடக்கிலிருந்து தெற்காகவும் அகலமான பெரிய வீதிகள் அமைந்துள்ளன. கோட்டைக்கு நடுவில் பழைய அரண்மனை உள்ளது. தட்சிணாமூர்த்தி கோயிலும் தர்பார் மண்டமும் கட்டப்பட்டுள்ளன. ராமச்சந்திர தொண்டைமானால் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலும், பெரிய குளத்தின் தென்கரையில் வினாயகர் கோயிலும் உள்ளன. திருவாப்பூர் ராஜராஜேஸ்வரம் ஆலயம் சோழர் கால சிற்பச் சித்திரங்களைக் கொண்டு விளங்குகிறது. சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட கல்யாண பிரசன்ன வெங்கடேஸ்வரர் ஆலயமும், பிறகு கட்டப்பட்ட வேணுகோபால ஸ்வாமி ஆலயமும் திருவப்பூரில் உள்ள வைணவ ஆலயங்களாகும். திருக்கோகர்ணம்- திருவாப்பூர் மார்க்கத்தில் மாரியம்மன் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கருப்பரPudukkottai் கோயிலும் புகழ்வாய்ந்த ஆலயம் ஆகும். சாந்தநாத ஸ்வாமி கோயிலும், பிருகதாம்பாள் ஆலயமும் சிறப்பு பெற்றவையாகும். வரதராஜா, விட்டோபா, வெங்கடேச பெருமாள்களுக்கு வைணவ ஆலயங்கள் உள்ளன. சுற்றுலா பயணிகளைக் கவருவதில் புவனேஸ்வரியம்மன் ஆலயம் முதலிடம் வகிக்கிறது. இங்கு வைகாசி மாதத்தில் உற்சவங்கள் நடைபெறுகின்றன. நகருக்குத் தென்மேற்கில் தொண்டைமான் அரசரால் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட அரண்மனை உள்ளது. இது பிச்சாத்தான்பட்டி அரண்மனை என வழங்கப்படுகிறது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.

பொற்பனைக் கோட்டை:
பொன் பரப்பினான்பட்டி என்ற பண்டையப் பெயர் பொற்பனைக் கோட்டை என மாறி வழங்கப்படுகிறது. புதுக்கோட்டைக்கு 6 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. இங்குள்ள பாழடைந்த கோட்டை 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். சுமார் 2000 போர் வீரர்கள் தங்க வசதியானது.

பொன்பட்டி:

இவ்வூர் அறந்தாங்கி வட்டத்தை சேர்ந்தது. இக்கிராமத்தின் மேற்கிலமைந்த கரூர் எனும் ஊரில், தியான நிலையில் அமர்ந்தவாறு 2 1/2 அடி உயரம் கொண்ட புத்தர் சிலை காணப்படுகிறது. இதிலிருந்து சோழர் ஆட்சியில் புத்தமதம் இப்பகுதியில் பரவியிருந்தது தெளிவாகிறது. சோழ அரசன் வீரராஜேந்திரன் வேண்டுகோளுக் கிணங்க, பொன் பட்டியை ஆண்ட புத்தமித்திரனால் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் வீரசோழியம் என்னும் நூல் இயற்றப்பட்டது. வீரசோழியம் சிறந்த தமிழ் இலக்கண நூலாகும். கலித்துறையால் ஆக்கப்பெற்ற இந்நூல் சந்தி, சொல், பொருள், யாப்பு, அலங்காரம் என்னும் ஐவகையாலும் சிறப்புற்றது. புத்தமித்திரன் பிறந்த ஊரும் இதுவேயாகும்.

பேரையூர்:

புதுக்கோட்டைக்கு 15 கி.மீ. தொலைவில் திருமயம் வட்டத்தில் அமைந்துள்ளது. பேரையூரில் நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் வரிசை வரிசையாக நாகக் கற்சிலைகள் புதையுண்டுள்ளன. இக்கோயில் அருகில் உள்ள குளம் குறிப்பிட்ட அளவு நிறைந்ததும், வீசும் காற்றால் ஒருவித இசை ஒலி எழும்புகிறது. இவ்வித இனிய இசை நாதம் ஒரிரு நாட்கள் தொடர்ந்து கேட்பதுண்டு. ஆதிசேஷன் சிவனை இத்தகைய நாதவெள்ளத்தால் வழிபடுவதாகக் கூறப்படுகிறது. 13ஆம் நூற்றாண்டுச் சோழர், பாண்டியர் கல்வெட்டுக்கள் நிறைய காணப்படுகின்றன. இக்கோயில் பிரகதாம்பாள் உருவம் விஜய நகர அரசர் கால கலைச் சிறப்பைப் பெற்றுத் திகழ்கிறது. பனை ஓலை விசிறிகளுக்கு இவ்வூர் புகழ்பெற்றதாகும்.

பள்ளிவாசல்:

இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் திருமயம் வட்டத்தில் அமைந்துள்ளது. காட்டுபாவா பள்ளிவாசல் என்பது இயற்பெயர். கிழவர் சேதுபதியால் இரண்டு ஏரிகளும் பெரிய நிலப்பரப்பும் இக்கோயில் கட்டுவதற்காக வழங்கப்பட்டது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.

நெடுங்குடி:

புதுக்கோட்டையிலிருந்து 35 கி.மீ. தொலைவில், திருமயம் வட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவாலயமும், இங்கு நடத்தப்படும் தேர் திருவிழாவிற்கு ஏராளமான மக்கள் கூடுவதும் இவ்வூருக்கு பெருமை சேர்ப்பனவாகும்.

நார்த்தாமலை:

Narttamalaiபுதுக்கோட்டையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் குளத்தூர் வட்டத்திலுள்ளது. ஒன்பது சிறிய குன்றுகள் அமைப்பாக காணப்படும் இடம் நார்த்தாமலை. ஒரு குடைவரைக் கோயிலையும் சேர்த்து இங்கு சில பழங்காலத்திய கற்கோயில்கள் உள்ளன. மைய மண்டபத்தில் கைதேர்ந்த சிற்பத்திறனுடன் வடிவமைக்கப்பட்ட ஆறு விஷ்ணு சிலைகள் உள்ளன. விஜயாலயா சோழீச்சுவரம் கோயிலுக்கு முன்னால் தெற்கில் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குகைக்கோயில் ஒன்று சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. விஜயாலயன் பிற்காலச் சோழர்களில் முதலாமவன். சிற்பங்கள் அடங்கிய இந்த சிவன் கோயில் சோழர்களின் ஆரம்பகால படைப்புகளில் ஒன்றாகும். விஜய சோழீச்சுவரம் கோயிலிலும் சுற்றுப்புறங்களிலும் இறை உருவங்கள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவை 17ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட கால ஓவியங்களாகும். கடம்பர் மலையில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட திருக்கடம்பூர் உடைய நாயனார் கோயில் உள்ளது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.

குடுமியான் மலை:
kudumiyamalai
இங்குள்ள சிவன் கோவில் பல கல்வெட்டுகளையும் அழகான சிற்பங்களையும் தாங்கி நிற்கிறது. எட்டு நாண்களை உடைய பரிவதினி எனும் இசைக்கருவியைக் கொண்டு மகேந்திரவர்மன் பல்லவன் இசை பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்ததைக் குறித்து ஒரு கல்வெட்டு கூறுகிறது. சிதிலமடைந்த நிலையில் ஆயிரங்கால் மண்டபம் கோயிலுக்கு முன்னே உள்ளது. உள் மண்டபம் விஜயநகர காலத்து ஓவியங்களால் நிறைந்துள்ளது. உள் மகா மண்டபம் சோழர் கால கலைச் சிறப்பையும், கோபுரம் பல்லவர் கால கலைச்சிறப்பையும் பெற்று விளங்குகின்றன. மலை மேல் இருக்கும் மேலக்கோயிலின் பல இடங்களில் சோழர் கால கல்வெட்டுகள் உள்ளன. இது ஒரு சுற்றுலாத் தலமாகும். இது புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் தொலைவில் குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. தமிழக அரசின் மிகப்பெரும் விவசாயப் பண்ணையான அண்ணா பண்ணை இங்கு அமைந்துள்ளது.

மடத்துக் கோயில்:

புதுக்கோட்டையிலிருந்து 38 கி.மீ. தொலைவில் குளத்தூர் வட்டத்தில் உள்ளது. இங்குள்ள கோயிலின் முன் மண்டபம் சோழர் காலத்தைச் சேர்ந்தது. கருங்கற்களால் அமைந்துள்ளது. உள் மண்டபம் விஜயநகர அரசர் காலத்தது. சிவப்புக் கற்களால் அமைந்துள்ளது. இங்கு சோழர், பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயிலில் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறந்த சிற்ப வேலைபாடுகளுடன் உயரமான பைரவர் சிலை உள்ளது.

திருக்கோகர்ணம்:

இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குடைவரைக் கோயில் உள்ளது. இங்குள்ள அருங்காட்சியகத்தில் புவியியல், விலங்கியல், மானுடவியல், கல்வெட்டியல், வரலாறு மற்றும் கலை தொடர்பான பிரிவுகள் உள்ளன. இதற்கருகில் உள்ள குமாரமலையில் சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.

வேளாண்மை:

புதுக்கோட்டை மாவட்டத்தை பூகோள அடிப்படையில் பாறைகள் நிறைந்த பகுதி, சமவெளிப் பிரதேசம் என இருப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். பாறைப் பகுதிகள் விவசாயத்திற்கு இலாயக்கற்றவை. சமவெளிப் பிரதேசத்தில் விவசாயம் செழிப்பாய் விளங்குகிறது. விவசாயத்திற்கான நீர்ப்பாசனம் ஆறுகள், அணைக்கட்டுகள், ஏரிகள், குளங்களிலிருந்து பெறப்படுகிறது. வெள்ளாறு, பாம்பாறு, அக்னி ஆறு, அம்புலியாறு, கோரையாறு, குண்டாறு, கோவலனாறு, நரசிங்க காவேரி ஆகிய ஆறுகள் இம்மாவட்டத்தில் பாய்கின்றன. குடுமியாமலைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள அணையால் விசலூர், வயலோகம், பெருமானாடு, கவிநாடு ஏரிகள் நீர் பெறுகின்றன. சேந்தமங்கலத்தில் கட்டப்பட்டுள்ள அணையாலும் கவிநாடு ஏரி நீர் பெறுகிறது. ஹோல்ட்ஸ்வர்த் அணைக்கட்டு வளநாடு ஏரிக்கு நீர் வழங்குகிறது.

விவசாயத்திற்குப் பயன்படும் குளங்கள் இம்மாவட்டத்தில் நிறைந்து காணப்படுகின்றன. குளத்தூர் வட்டத்தில் 1968 குளங்களும், திருமயம் வட்டத்தில் 1595 குளங்களும், புதுக்கோட்டை வட்டத்தில் 533 குளங்களும் அறந்தாங்கி வட்டத்தில் 531 குளங்களும் விவசாயச் செழிப்புக்கு உதவுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை மழையால் நீர் பெறுபவையாகும். இம்மாவட்டம் மருதம், முல்லை, நெய்தல், குறிஞ்சி, பாலை என்னும் ஐவகை நிலப் பண்புகளையும் கொண்டுள்ளது. வறட்சி காலங்களில் இம்மாவட்டம் பாலையாகக் காணப்படும். இங்கு காலங்காலாக நெல், சோளம், கம்பு, கேழ்வரகு இவைகளைப் பயிரிட்டு விவசாயப் பணி மேற்கொண்டு வருகிறார்கள். செவ்வல் மண் இருக்கும் பகுதிகளில் கம்பு, திணை, முந்திரி ஆகியவற்றை விளைவிக்கிறார்கள். கரிசல் மண் இருக்கும் பகுதிகளில் நெல், வாழை இவற்றை அதிகம் பயிரிடுகிறார்கள். கோடையில் இப்பகுதிகளில் வேர்க்கடலை, உளுந்து , துவரை முதலிய பணப் பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. 440 ச.கி.மீ. பரப்பளவில் பரந்து கிடக்கும் படுகைப் பகுதிகளில் தென்னை பயிர்களாக புகையிலை, மிளகாய், வாழை, மாங்காய், பலாப்பழம் ஆகியன விளைவிக்கப்படுகின்றன. இம்மாவட்டத்தில் மொத்தம் 1.75 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

தாது வளம்:

புதுக்கோட்டை மாவட்டம் இயற்கை தாது வளத்தில் சிறந்து காணப்படுகிறது.

பாறைகள்:

கோயில், கட்டடங்கள் கட்டுவதற்கும், நீர்நிலைகளில் கரை அமைப்பதற்கும் இங்கு கிடைக்கும் பாறைகள் சிறந்து விளங்குகின்றன. திருக்கோகர்ணம், புத்தாம்பூர், திருமயம், லம்பலக்குடி, கோனாப்பட்டு, மலைக்கோயில், பேரையூர், உசிலை மலைப்பாறை, விராலிமலை, விட்டமாப்பட்டி, குடுமியாமலை, பனங்குடி, அம்மாசமுத்திரம், வீரப்பட்டி, சித்தாம்பூர், கீரனுர் முதலிய இடங்களில் இக்கற் பாறைகள் மிகுந்த அளவில் கிடைக்கின்றன. இங்கு எடுக்கப்படும் கருங்கல் ஜல்லிகள் பாதைகள் அமைப்பதற்கும், அஸ்திவாரங்கள் அமைப்பதற்கும் பயன்படுகின்றன.

லேடரைட்:

இம்மாவட்டத்தில், உறுதியான கட்டுமானப் பணிகளுக்குத் தேவைப்படும் லேடரைட் என்னும் கனிமம் மிகுந்த அளவில் கிடைக்கிறது. இரும்பும் அலுமினிய கனிமங்களும் இயற்கையாகவே அளவாகக் கலந்த நிலையில் கிடைக்கின்றன.

காவி மண்:

செட்டிப்பட்டிப் பகுதிகளில் பாதுகாக்கப்படும் காட்டுப் பகுதிகளில் கிடைக்கும் இம்மண் வண்ணங்கள் தயாரிப்பதற்கும், சாக்கட்டிகள் செய்வதற்கும் பயன்படுகிறது. வீடுகளுக்குத் தேவைப்படும் டிஸ்டம்பர் தயாரிக்கவும் இம்மண் மிகுந்த அளவில் பயன்படுத்தப்படுகிறது. இம்மண் சுமார் 16000 ச.மீ. பரப்பளவில் கிடைக்கிறது. செட்டிப்பட்டியில் சுமார் 15000 டன் கிடைப்பதில் மூன்றில் இரண்டு பாகம்
உபயோகப்படுத்தப்படுகிறது.

கங்கர்:
வீடுகளுக்குத் தேவைப்படும் சுண்ணாம்பு இதிலிருந்து தயாரிக்க முடியும். வெள்ளை நிறத்திலும் இது காணப்படுகின்றது. ஆதனக்கோட்டை, ஆலங்குடி பகுதிகளில் இது நிறையக் கிடைக்கிறது.

ஸ்படிகம்:

வெங்கச்சங்கல் எனப்படும் ஒருவகை ஸ்படிகம் வீரலூர் ஏரிக் கரைகளில் கிடைக்கிறது. கல்தச்சு வேலைக்கருவிகள் செய்ய இது பெரிதும் பயன்படுகிறது. வீட்டு உட்புற அழகு வேலைகள் செய்யவும் இதை உபயோகிக்கிறார்கள்.

வெள்ளைக்களிமண்:

விவசாயத்திற்கு லாயக்கற்ற, இரும்புச் சத்து அதிகம் கொண்ட இம்மண் 70,000 டன் அளவுக்கு பரவியுள்ளது. அறந்தாங்கி-புதுக்கோட்டை மார்க்கத்தில் கிடைக்கும் இம்மண் சிமெண்டு கலவைக்கு ஏற்றதாகும்.

ஆல்கலைன்:

இது கண்ணாடி வளையல்கள் செய்வதற்குச் சிறந்த மூலப்பொருள் ஆகும். இதைப் பல நாட்கள் உலையிலிட்டு, பிலிங்க் என்னும் பொருளைச் சேர்த்து கருமை நிறமாக்கி வளையல்கள் செய்ய வேண்டும். ஆனால் இந்த முறைக்கு செலவு அதிகமாவதால் இலாபகரமற்ற தொழிலாகக் கருதி கைவிடப்பட்டுள்ளது. ஆனால் தொழில் முனைவோர் இதை கண்ணாடி சம்பந்தமான வேறு தொழில்களுக்குப் பயன்படுத்தலாம்.

இல்மினைட்:

மிமிசல்-அதிராம்பட்டிணம் மார்க்கத்தில் இது கிடைக்கிறது. ஆனால் குறைந்த அளவே காணப்படுகிறது.

மைகா

புதுக்கோட்டை நகரப் பகுதியில் சில இடங்களில் மைகா கிடைப்பதாக 1903 ஆம் ஆண்டில் தெரியவந்தது. தக்க ஆய்வு மேற்கொண்டால், மேலும் இதைப் பற்றிய விவரம் தெரியவரும்.

காந்தக்கல்:

குளத்தூர் வட்டத்திலுள்ள மல்லம்பட்டியில் சுமார் 50,000 டன் காந்தக்கல் காணப்படுகிறது. இதில் 34 சதவீதம் இரும்பு உள்ளது. ஆனால் இன்னும் இது பொது உபயோகத்திற்கு வரவில்லை.

மீன்வளம்:

அறந்தாங்கி வட்டத்திலுள்ள ஏரிகளில் வெண்கெண்டை, அறிஞ்சான், காக்கா மீன், கருஞ்சேல், கருமுழிக் கெண்டை, சேல்கெண்டை, சல்லிக்கெண்டை, கெழுத்தி, கருபுத்தேளி, கொரவை, ஜிலேபிக் கெண்டை முதலியன மிகுதியாக கிடைக்கின்றன. கருஞ்சேல், சேல்கெண்டை, ஜிலேபிக் கெண்டை மீன் வகைகள் மீன்வளத் துறையினரால் புதுக்கோட்டை வட்டத்தில் 16 இடங்களிலும், அறந்தாங்கி வட்டத்தில் 35 இடங்களிலும் வளர்க்கப்படுகின்றன. பிறவகை மீன்கள் காவேரி சங்கமமாகும் இடத்தில் மிக அதிகமாகக் கிடைக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தில் 28 மைல் நீள கடற்கரை ஓரங்களில் அமைந்த 18 கிராமங்கள் மீன்பிடி தொழிலில் சிறந்து விளங்குகின்றன. அவையாவன: காட்டுமாவடி, பிரதாபிராமன் பட்டினம், கிருஷ்ணாஜி பட்டினம், திருமங்கலம் பட்டினம், வடக்கு அம்மா பட்டினம், சீதாராமப்பட்டினம், அம்மா பட்டினம், புதுக்குடி, ஆயிப்பட்டினம், கோட்டைப் பட்டினம், ஜகதாப்பட்டினம்,கோபாலப்பட்டினம், அய்யம்பட்டினம், புதுப்பட்டினம், அரசனேரி, முத்துக்குடா முதலியன இப்பகுதியில் சுமார் 10,000க்கு மேற்பட்டோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மீன், இறால் இவைகளைப் பதப்படுத்தும் நிலையம் மணமேல்குடியில் 1.54 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. மீனும் இறாலும் பனிக்கட்டிகளால் மூடப்பட்டு அறந்தாங்கி, பட்டுக்கோட்டை வழியாகப் பல ஊர்களுக்கும் இரயில் மூலம் அனுப்பப்படுகின்றன. கோட்டைப் பட்டினம், ஜகதாப்பட்டினம் கடற்கரைகளில் இறால்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன. புதிய மீன்பிடிப் பகுதிகளையும், அதிகமாக மீன் கிடைக்கக்கூடிய இடங்களையும், அதிகமாக பிடிபடும் மீன் இனங்களையும் அறிய வருவதற்காக 1975 ஆம் ஆண்டு மல்லிப்பட்டிணம் அருகில் மீன்பிடி ஆராய்ச்சி நிலையம் ஒன்றை மீன்வளத்துறையினர் கட்டியுள்ளனர். 465 ச.கி.மீ. பரப்பளவுக்கு இரண்டு இயந்திரப் படகுகளைக் கொண்டு புதுக்கோட்டை, அறந்தாங்கிக் கடற்கரைப் பகுதிகளில் இந்நிலையம் பலவித ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. அம்மாப்பட்டினத்தில் நாட்டுப்படகுக் கட்டும் நிலையம் ஒன்று செயல்படுகிறது.மீன்பிடிக்கும் தொழிலில் பர்வதராஜ குலத்தைச் சேர்ந்த இந்துக்களும், ராவுத்தர், மரைக்காயர் பிரிவுகளைச் சேர்ந்த முஸ்லிம்களும், கள்ளர் இனத்தைச் சேர்ந்த கிறித்துவர்களும் ஈடுபட்டுள்ளனர். இத்தொழில் செய்வோரில் கல்வியறிவு பெற்றோர் மிக மிகக் குறைவு.

புகழ் பெற்றோர்:

எழுத்தாளர் அகிலன், விடுதலைப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தி, குழந்தை எழுத்தாளர் அழ. வள்ளியப்பா, கல்வியாளர் முத்துலட்சுமி அம்மாள், திரைப்பட இயக்குனர் ப.நீலகண்டன், திரைப்பட நடிகரும், இயக்குனருமான பி.கே. ராஜா சாண்டோ, நடிகர்கள் பி.யு. சின்னப்பா, ஏ.வி.எம். ராஜன் போன்றோர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்து புகழ்பெற்றோர் ஆவர்.

பொது விவரங்கள்:

சுகாதாரம்: அரசு மருத்துவமனைகள்-12; ஆரம்ப சுகாதார மையங்கள்-55; துணை சுகாதார மையங்கள்-241.
வங்கிகள்: 90 வங்கிகள் உள்ளன. காவல் நிலையங்கள்: மொத்தம் 35 காவல் நிலையங்கள். காவலர்கள்: ஆண்-1059 பேர்; பெண்-20 பேர். அனைத்து மகளிர் காவல் நிலையம் - 2 (புதுக்கோட்டை, அறந்தாங்கி)

தபால் நிலையங்கள்: மொத்தம் 329.
பதிவுப் பெற்ற வாகனங்கள்: 23,450.
சாலை நீளம்: 3,802.

தொழில் வளர்ச்சி:

புதுக்கோட்டை மாவட்டத்தைத் தொழில் துறையில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆயினும் கைத் தொழில்களில் இம்மாவட்டம் சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது. திருவாப்பூர், அறந்தாங்கி, பரம்பூர், இலுப்பூர் ஆகிய இடங்களில் பட்டு, பருத்தி நெசவுத் தொழில் செயல்பட்டு வருகிறது. சோனியாப்பட்டியில் விலை மலிவான புடவைகளைத் தயாரிக்கிறார்கள்.

அன்னவாசல், இலுப்பூர், மாங்குடி, சத்தியமங்கலம், திருவேங்கை வாசல், கூத்தாடி வயல், மலையூர், நாரங்கிப்பட்டி, கள்ளம்பட்டி, சும்பூதி, பூவரசக்குடி, கோசலக்குடி முதலிய ஊர்களில் மண் சிலைகளைச் செய்து விற்கிறார்கள். நெடுஞ்சாலைக்கு அருகிலும், ஆற்றங்கரை ஓரங்களிலும், கிராம தேவதைக்கான கோயில்கள் முன்பும் வைக்கப்படும் பெரிய பெரிய குதிரை, யானை, நாய் உருவங்களை மண்ணால் செய்து சுட்டு வண்ணங்கள் பூசி விற்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பனை மரம் மிகுதியாதலால், இங்கு பனை ஓலையைக் கொண்டு பாய் முடைதல், தடுக்கு முடைதல், பெட்டிகள், கூடைகள், விளையாட்டு சாமான்கள் செய்தல் ஆகிய குடிசைத் தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இத்தொழில் கற்க அரசு தரப்பில் ஒரு தொழில் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

ஓலைச் சீவ ஒரு இயந்திரம் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. செங்கோட்டை, சென்னை முதலிய இடங்களிலிருந்து பிரம்பு இறக்குமதி செய்யப்பட்டு, அதைக் கொண்டு நாற்காலிகள், மேஜை, டீப்பாய் போன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. பிரம்புப் பொருட்களைத் தயாரிக்க புதுக்கோட்டையில் ஒரு பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

வரப்போரங்களில் விளைந்திருக்கும் கத்தாழையை தண்ணீரில் ஊறவைத்து, அடித்துத் துவைத்து, நாரை மட்டும் பிரித்தெடுத்து கயிறு உற்பத்தி செய்கின்றனர். மற்றும் ஆற்றோரங்களில் விளைந்திருக்கும் கோலைப் புல்லைக் கொண்டு பாய் முடைவதும் தொழிலாக நடைபெறுகிறது. இவ்விதம் பாய் முடைதல் அமனாப்பட்டி, கந்தர்வக் கோட்டை, முள்ளங்குறிச்சி, பல்லவராயன் பட்டி, தீத்தான் விடுதி முதலிய இடங்களில் நடைபெறுகின்றன. கோரைப் பாய்கள், ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்புக்குத் தயாரிக்கப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பப்படுகின்றன. இத்தொழிலில் நவீன முறைகளைப் புகுத்தினால் மேலும் இது முன்னேறும்.

ஆத்திப்பள்ளத்தில் மூங்கில் கூடைகள், மூங்கில் தட்டிகள் செய்யப்படுகின்றன. திருக்கோகர்ணத்தில் கருங்கற்களில் சிற்பங்களை, குறிப்பாக கடவுளர் உருவச் சிற்பங்களை வடிக்கும் தொழில் நடைபெறுகிறது. சிலத்தூர், ராயவரம் முதலிய ஊர்களில் மரங்களைக் கொண்டு கடவுளர் வாகனங்கள் செய்யப்படுகின்றன. எருது, சிங்கம், மாடு, குதிரை முதலிய உருவச் சிலைகள் ஒருவகை பொதிய மரத்தைக் கொண்டு படைக்கப்படுகின்றன.

தேர்ந்த வர்ணப் பூச்சைக் கொடுத்தபின் கோயில்களில் வைப்பதற்காகவும், வீடுகளில் வைப்பதற்காகவும் விற்பனை செய்யப்படுகின்றன. 1960 ஏப்ரல் முதல் தேதியில் இம்மாவட்டத்தில் காதி மற்றும் கிராமத் தொழில் வளர்ச்சி இணையம் தோற்றுவிக் கப்பட்டது. புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி முதலிய இடங்களில் தொழில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கீழ்க்கண்டத் தொழில்கள் அதன் கட்டுப்பாட்டில் உள்ளன.

தீப்பெட்டித் தொழிற்சாலைகள் - 2
பதநீர், பதநீர் பொருள் உற்பத்தி - 15
கைக்குத்தல் அரிசி ஆலை - 1
மட்பாண்ட தொழில் நிலையங்கள் - 2
தச்சு, கருமாரநிலையம் - 1

இன்னும் பல கிராமக் கைத்தொழில் நிலையங்கள் அமைக்கும் திட்டம் ஆய்வில் உள்ளது. அதனால் தொழில்துறையில் பின்தங்கியுள்ள இம்மாவட்டம் மேலும் பல தொழில் வாய்ப்புகளைப் பெறும். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முக்கியத் தொழிற்சாலைகள்: சிப்காட் காம்ப்ளக்ஸ், புதுக்கோட்டை; ஸ்பெக்சுரல் பேப்ரிக்கேஷன்ஸ், நல்லூர்; பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ், நல்லூர்; மாத்தூர் இண்டஸ்ட்ரியல் காம்ளக்ஸ், சால்வன்ட் எக்ஸ்ட்ராக்ஷன் யூனிட், புனக்குளம்; கெமிக்கல் யூனிட் மற்றும் டெக்ஸ்டைல் மில், அறந்தாங்கி; டெக்ஸ்டைல் மில், நமனசமுத்திரம். புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில் மற்றும் வணிகத்துறையில் பதிவு பெற்ற தொழில் நிலையங்கள்
பின்வருமாறு:

மரப்பட்டறைகள் - 77
அச்சகங்கள் - 10
இரும்புக் குழாய் பொருட்கள் - 9
சோப்பு தயாரித்தல் - 15
மிட்டாய் செய்தல் - 4
மெழுகுப் பொருட்கள் - 12
விவசாயக் கருவிகள் - 90
தீப்பெட்டி -7
சிமெண்ட் பைப்புகள், மொசைக் கற்கள் - 22
வீட்டுப் பொருட்கள், (பித்தளை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அலுமினியப் பாத்திரங்கள்) - 33
கற்கள் பட்டைத் தீட்டுதல் - 9
டயர் ரீடெரேடிங் - 5
பாக்கு, புகையிலை - 5
பஸ் பாடி கட்டுதல் - 22
பேப்பர் அட்டை செய்தல் - 2
கதவுத் தாழ்ப்பாள், குதிரை, மாடு லாடம் செய்தல் - 6
துணிப் பொருட்கள் - 4
இரும்புப் பெட்டிகள் - 3
பிளாஸ்டிக் பொருட்கள் - 5
மருந்து உற்பத்திப் பொருட்கள் - 4
கயிறு உற்பத்தி - 1
சர்க்கரை தயாரித்தல் - 1
அரிசி ஆலை - 1
சேமியா தயாரித்தல் - 1
ஐஸ் தயாரிப்பு - 2
கால்சியம் குளூகோனட் - 1

இவை தவிர பதிவுப் பெறாத பல தொழில் நிலையங்களும் உள்ளன. மொத்தம் 351 தொழிற்சாலைகளில் புதுக்கோட்டையில் 122 தொழிற்சாலைகளும், அறந்தாங்கியில் 138 தொழிற்சாலைகளும், திருமயத்தில் 37 தொழிற்சாலைகளும், குளத்தூரில் 47 தொழிற்சாலைகளும், ஆலங்குடியில் 7 தொழிற்சாலைகளும் உள்ளன.

பெருந்தொழில் வாய்ப்புகள்:

இம்மாவட்டத்தில் டிட்கோ ஆதரவில் எண்பது கோடி ரூபாய் மூலதனத்தைக் கொண்டு டிறால்விங் பல்ப் மற்றும் விஸ்கோஸ் ஸ்டேபிள் பைபர் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையால் 2000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், சுமார் 10,000 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.சிப்காட் ஆதரவில் ரூபாய் 292.75 இலட்சம் முதலீட்டில் ஹார்டு போர்டு தொழிற்சாலை ஒன்றும் அமையவிருக்கிறது. இதனால் சுமார் 200 பேர் வேலை வாய்ப்பு பெறலாம்.

சோளத்தைப் பக்குவம் செய்து, குழந்தை உணவுப் பொருட்களுக்கும், டெக்ஸ்ட்ரோஸ், குளூகோஸ், ஸ்டார்ச் இவைகளுக்குப் பயன்படும் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு வேளாண்மைத் தொழில் கார்ப்பரேசன் ஆய்வில் வைத்துள்ளது. இது ஆலங்குடி வட்டத்திலாவது திருமயம் வட்டத்திலாவது அமையலாம். சுமார் ஆயிரம் பேர் இதனால் வேலைவாய்ப்பு பெறுவர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வேர்கடலை சந்தைக்குப் பெயர் பெற்ற இடம். வேர்கடலை வனஸ்பதி தயாரிக்க உதவும் அத்தியாவசிய மூலப்பொருள் ஆதலால், இங்கு 200 டன் உற்பத்தித் திறன் கொண்ட வனஸ்பதித் தொழிற்சாலை ஒன்று அமையும் வாய்ப்பு உள்ளது.

சிறுதொழில் வாய்ப்புகள்:

சிறுதொழில் சேவை நிலையம் இம்மாவட்டத்தில் கீழ்க்கண்ட சிறுதொழில்களை அமைக்க ஆலோசனை வழங்கியுள்ளது. இம்மாவட்டத்தில் 46,400 டன் வேர்க்கடலை பயிராகிறது. 20,000 டன்கள் எண்ணெய் உற்பத்திக்கும் பயன்படுகிறது. மீதமுள்ளதைக் கொண்டு மேலும் சில எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் அமைக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. இத்துடன் மணிலா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் துவங்கலாம். முந்திரிப் பருப்பு பாடம் பண்ணுவதும், முந்திரி எண்ணெய் உற்பத்தியும் சிறந்த லாபம் தரக்கூடிய தொழில்கள். கந்தர்வக்கோட்டையில் இதற்கென ஒரு தொழிற்சாலை உள்ளது. இதைத் தவிர்த்து இம்மாவட்டத்தில் வேறு தொழிற்சாலைகள் கிடையாது. ஆண்டுக்கு 2000 டன் முந்திரி பயிராகும் இம்மாவட்டத்தில் இன்னும் பல ஆலைகள் திறக்க முடியும்.

முந்திரிப் பருப்பும், முந்திரி எண்ணெயும் அந்நியச் செலாவணியை ஈட்டி தருபவனாகும். மக்கள் பயன்படுத்தியது போக மீதமுள்ள சுமார் 1200 டன் முந்திரிப் பழங்கள் மாட்டுத் தீவனமாக உபயோகிக்கப் படுகின்றன. இவைகளைப் பதப்படுத்தி ஜாம், ஸ்குவாஷ் தயாரித்து விற்பனைக்கு அனுப்ப இயலும். குறைந்த மூலதனத்தில் நிறைந்த இலாபம் கிடைக்கும். முந்திரிக் கொட்டையில் பிரவுன் கலரில் மெல்லியத் தோல் ஒன்று மூடியிருக்கும். இது ஆடு, மாடு தோல்களைப் பதப்படுத்த மிகவும் சிறந்ததாகும். மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் இதைப் பரிந்துரை செய்துள்ளது. ஆறு லட்சம் ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைத்து பயன் பெறலாம்.

இம்மாவட்டத்திலிருந்து 5000 டன் புளியங்கொட்டை மாட்டுத்தீவன உற்பத்திக்காக கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. இதைக் கொண்டு துணி ஆலைகளுக்கும், கைத்தறித் துணிகளுக்கும் தேவைப்படும் ஸ்டார்ச் தயாரிக்க முடியும். ஒரு இலட்சம் ரூபாய் மூலதனத்தில் நிறைந்த இலாபம் தரும் தொழிலாகும்.

மீனைப் பதப்படுத்துதல் அன்னிய செலாவணி ஈட்டித் தரும் தொழிலாகும். மீன்களையும், இறால்களையும் பதப்படுத்தி, டின்களில் அடைத்து ஏற்றுமதி செய்வது அதிக இலாபம் ஈட்டும் தொழிலாகும். சுமார் ஆறு இலட்ச ரூபாய் முதலீட்டில் பலருக்கு வேலை வாய்ப்பும் அதிக இலாபமும் பெறலாம். 3430 இயந்திரப் படகுகள் இருக்க வேண்டிய இம்மாவட்டத்தில் 1550 படகுகளே பயன்பாட்டில் உள்ளன.

படகு கட்டும் கூடம் ஒன்று அமைக்க சுமார் ஒரு இலட்ச ரூபாய் முதலீடு போதுமானது. இக்கூடத்தில் 30 அடி நீளம் கொண்ட 18 படகுகள் கட்ட முடியும். அறந்தாங்கி வட்டத்தில் மிமிசல் பகுதி இத்தொழிலுக்கு ஏற்ற இடமாகும். சுமார் 100 பேர் வேலை வாய்ப்பும் பெறுவர். கடல் உப்பைக் கொண்டு சாப்பாடு உப்பு, பண்ணைகளுக்குப் பயன்படும் உப்பு, உயர்தரமான உப்பு, மாடுகளுக்குப் பயன்படும் உப்பு, டிஸ்டில் வாட்டருக்கு தேவைப்படும் உப்பு, மாக்னீசியம் கார்பனேட்டுக்குத் தேவைப்படும் உப்பு என்று பல வகை உப்புகள் தயாரிக்கும் தொழில் அமைக்கவும் வாய்ப்பு உள்ளது.

பவநகர் மத்திய ஆராய்ச்சி நிலையத்தை அணுகினால் இத்தொழில் பற்றிய ஆலோசனைகளைப் பெறலாம். பேப்பர், சர்க்கரை மற்றும் இரசாயனத் தொழில்களுக்குத் தேவைப்படும் ஒருவகைச் சுண்ணாம்பு கடற்கரைகளில் கிடைக்கும் கிளிஞ்சல்களிலிருந்து தயாரிக்க முடியும். ஆண்டுக்கு 1500 டன் கடற்சுண்ணாம்பு தேவைப்படுகிறது.

நீண்ட கடற்கரையைப் பெற்றுள்ள அறந்தாங்கி வட்டம் இத்தொழில் அமைய ஏற்ற இடம். சுமார் 1 இலட்சம் மூலதனத்தில் தொழிற்சாலை அமைக்கலாம். சலவை சோப்புகளுக்கு ஸின்தடிக் டிடர்ஜன் என்னும் கலவைப் பொருள் சேர்க்கப்படுகிறது. எண்ணெய் கொழுப்புப் பொருட்கள் கிடைக்காததால் அரிசி உமியிலிருந்து இப்பொருள் எடுக்கப்படுகிறது. சுமார் 10,000 ரூபாய் முதலீட்டில் தினசரி 50 கிலோ ஸின்தடிக் டிடர்ஜன்ட் தயாரிக்க முடியும். மாட்டுத் தீவனம் தயாரிக்கவும் மிக்க வாய்ப்புகள் இம்மாவட்டத்தில் உள்ளன சாக்பீஸ் தயாரிப்பதற்கான மூலப்பொருள் இம்மாவட்டத்தில் நிறைந்துள்ளதால், கல்வி நிலையங்களுக்குத் தேவையான சாக்பீஸ்களைத் தயாரித்து அளிக்க முடியும்.

இவை தவிர இம்மாவட்டத்தைச் சுற்றிலுமுள்ள பெரிய தொழிற்சாலைகளுக்குத் தேவையான இரும்பு வார்ப்படங்கள், இரும்பு குழாய்கள் செய்யும் தொழிற்சாலைகளைக் களத்தூர் அல்லது திருமயத்தில் அமைக்கலாம். இம்மாவட்டத்தில் புதுக்கோட்டையில் மட்டுமே தோல் பதனிடும் தொழிற்சாலை இயங்குகிறது. மேலும் சில தோல் பதனிடும் நிலையங்களை அமைக்கலாம்.

 

கல்லிலே கலைவண்ணம் கண்டோம்

சித்தன்னவாசல் - மடிந்த ஓவியம் - பாகம் இரண்டு


சித்தன்னவாசல் பற்றிய எந்தன் முதல் பதிவுக்கு ஆதரவு தந்த அத்தனை நெஞ்சங்களுக்கும் நன்றி! சித்தன்னவாசலின் சோகக்கதையை கலையுள்ளம் கொண்ட யாரால்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? இதோ இன்னொரு பதிவு. கடைசியாகக் காணப்படும் கோலங்கள் கலைப் பார்வைக்காக மட்டுமே என்பதனை முன்னமேயே சொல்லிவிடுவது நல்லது.
நான் இந்த அழகியை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன், சில தெளிவுகள்.
நீங்கள் காண்பது ஒரு மதத்தினர் சம்பந்தப்பட்டது என எண்ணாமல் வரைந்தவர் தம் கலைத் திறனைக் காண்பிக்கும் சித்திரமாகவே மனதில் கொள்ளவேண்டும். நிர்வாணம் என்பதே அலங்கோலம், அருவருப்பு, கவர்ச்சியின் உச்சகட்டம் என்பதெல்லாம் தற்போதைய கணிப்புதானே தவிர பழைய காலங்களில் அதனை அழகாகக் காட்டும்போது வெகுவாகவே ரசித்ததாகவே தெரிகிறது. நாகரீகம் உலகில் எங்கெல்லாம் வெகுவாக போற்றப்பட்டதோ அங்கெல்லாம் கூட நிர்வாணக் கலையும் வெகு அழகாக ரசிக்கப்பட்டு போற்றப்பட்டது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். கலை வெளிப்பாடு என்பது கலைஞனின் ஆழ் உள்ளத்தில் எழுந்து அது தூய்மையான எண்ணமாக வெளிக் கொணரும்போது அங்கு அருவருப்பு என்று சொல்லுக்கே இடமில்லை. கலைஞனின் கைவண்ணம் காவியம் போலவே நம் கண்களுக்கு விருந்தாகப் படுகிறது. அந்தக் கலை ஒரு நிர்வாணமான ஆணோ அல்லது பெண்ணோ யாராக இருந்தாலும் அந்தக் கலைஞனின் கையிலிருந்து பெறப்படும்போது அவன் திறமையை நாம் போற்ற வேண்டும். அப்படிப்பட்ட கலைஞன் யுகத்துக்கு ஒருவனாகக் கூட தென்படலாம்.
சித்தன்னவாசலும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். கலைஞனின் ஞானத்தை நாமும் போற்றலாமே.
வழக்கம் போல தொலைவில் இருந்து நாம் அருகில் செல்வோம்.
sittanavaasal dancer3
sittanavasal dancer2
sittanavaasal dancer 23
sittanavaasal dancer234
“என்னடா ஒண்ணுமே தெரியலை?” என்று உங்கள் குரல் கேட்கிறது , இன்று நீங்கள் அங்கு சென்றால் இப்படி தானே இருக்கும். சரி சற்று அருகில் செல்வோம்.
sittanavaasal dancer 23435
sittanavasal dancer 23456
பெரிய பில்ட் அப் கொடுத்துட்டு வெட்டி சுவரை காட்டுகிறானே இவன் என்று நினைக்காதீர்கள் . இந்த அவல நிலைதான் இவளின் நிலை.
sittannavasal_dancer
கொஞ்சம் வண்ணம் தீட்டுவோம். கையில் முதலில் தீட்டி பிறகு கணினியில் (திரு அசோக் அவர்களுக்கு நன்றி.) இப்போது ..
artist impression
பாருங்களேன்.. அந்த அழகியின் ஒயிலான இடை, கவர்ச்சியால் தன்னை நோக்கி அழைக்கும் கண்கள், ஒரு பக்கம் சற்றே சாய்ந்த நிலையில் ‘என்னைப் பாராயோ’ என்பது போல அந்த அழகியின் முகம், வலது கையை மூடிய அழகு, ஒன்றைப் புகழ்ந்தால் இன்னொன்று கோபிக்குமோ என்ற நிலையில் அவள் ஒவ்வொரு உயிர்த் துடிப்பான அங்கமும் எந்த கலை ரசிகனையும் எங்கெங்கோ அழைத்துச் செல்லுகிறதே..
எனினும் இந்த அழகு ஓவியம் கலைந்த சிதைந்த நிலையை பார்க்கும் பொது நெஞ்சில் ஒரு சோகம், கண்களின் ஓரத்தில் சிறு கண்ணீர்த் துளிகள் … இந்த அற்புத வடிவங்களை அழிய நாம் விட்டுவிட்டோமே !

நான் இத்தனை காலம் காத்துவந்த பொக்கிஷம்

நான் இத்தனை காலம் காத்துவந்த பொக்கிஷம்

நாம் இது போன்ற சிதைந்த ஆலயங்கள் பல பார்த்துள்ளோம். இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் இப்படி தடுக்கி விழுந்தால் இரண்டு இருப்பதால் இவற்றின் மதிப்பை நாம் உணருவதில்லை. இதுவே வெளிநாடாக இருந்தால் தங்கள் பாரம்பரியத்தின் உன்னத வெளிப்பாடாக தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள். எனினும், இந்த புள்ளலூர் விமானம் மட்டும் ஏனோ கண்ணையும் சிந்தனையும் விட்டு விலக மறுத்தது.
சிதலமடைந்தும் கம்பீரமாக நிற்கும் விமானம் - புள்ளலூர்
சில நொடிகளே அங்கு கழித்தோம் - மாலை நேரம், வெளிச்சம் குறைந்துக்கொண்டு இருந்தது, மதிய உணவு சாப்பிடவில்லை !! அதற்கும் மேலாக முந்தைய இடத்தில வழியில் ஓடிய பாம்பு, அத்துடன் விமானம் இருந்த நிலைமை என்று பல காரணங்கள். இருந்தும் மனம் எதோ அடித்துக்கொண்டது. வந்த பின்னரும் பார்ப்பவர்கள் அனைவரிடத்திலும் அந்த கோயலின் நிலையை பற்றி சொல்லி தீர்த்தேன். அப்படி சொல்வதை கேட்டு நண்பர் திரு சந்திரசேகரன் ரீச் பௌண்டேஷன் உடனே சென்று பார்க்கிறேன் என்று உறுதி கூறினார். மனதில் அங்கு விமானத்தில் உள்ள சுதை உருவங்களின் நல்ல படங்கள் கிடைத்தால் இந்த கோயிலின் காலத்தை கணிக்க உதவும் என்பதே எனது நோக்கம்.
vimana+sudhai
sudhai+work+on+vimana1
sudhai+work+on+vimana2JPG
sudhai+work+on+vimana3
sudhai+work+on+vimana4
சந்திரா அவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று
திரு தியாக சத்யமூர்த்தி அவர்களையும் அழைத்துச் சென்றார். மேலே என்ன நடந்தது ?
மாலை எனக்கு சும்மார் நாலு மணி அளவில் குறுஞ்செய்தி
ஷங்கர் : ” ரீச் உள்ளே ஓவியங்கள் இருப்பதாக கூறுகின்றார்கள்”
நான் . ” எந்தக் கோயில் ?”
ஷங்கர் : புள்ளலூர் !
நான் : அங்கே எந்த கோயில்
ஷங்கர் : செங்கல் இடிந்த கோயில்.
நான் : இதோ அழைக்கிறேன் ….
சரி, இதை நாங்கள் எப்படி கவனிக்காமல் விட்டோம் ? நீங்களே பாருங்கள்.
sri+TS+inspecting
இந்த சுவரில் தான் ஓவியங்கள் உள்ளன என்றால் நம்புவீர்களா ?
looks+like+plain+wall
notice+the+paintings
so+much+details+two+faces
so+much+to+see
ஆமாம், இதில் தான் நான்கு உருவங்கள் உள்ளன. அருமையான அணிகலன்கள், மகுடங்கள் - ஏன் உற்றுப் பாருங்கள் கண் , புருவம் என்று அனைத்தும் மெதுவாக தெரிய வரும். யார் இவர்கள் ?
crown+detail
details+of+the+paintings
fantastic+ornaments
notice+eye+brow
notice+eye+brow+face
so+much+details
the+face+on+extreme+left
இதை விட பெரிய கேள்வி - இந்த ஆலயத்தின் காலம் என்ன. உள்ளே இருக்கும் இந்த ஓவியங்களின் காலம் என்ன ?

மாதவிப் பந்தல்

விராலிமலை முருகப்பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி!

"அடங் கொக்க மக்கா! என்ன நடக்குது இங்க? முருகன் நைவேத்தியத் தட்டில் எதுக்குச் சுருட்டு பீடி? இவ்வளவு நேரம், உள்ளாறத் திரையப் போட்டு, தம் அடிச்சிக்கிட்டு இருந்தானா அந்தப் பால முருகன்? அடப் பாவி! பார்த்தா பால் வடியும் பால முகம்! முருகக் குழந்தையை அள்ளிக் கட்டிக்கணும் போல இருக்கு! முளைச்சி மூனு இலை விடல! அதுக்குள்ள உனக்குச் சுருட்டு கேக்குதா? OMG! I just can't believe this!..."

வாங்கப்பு வாங்க! "யார் தமிழ்க் கடவுள்"-ன்னு பதிவு போட்டு ஒரு மாசம் ஆச்சுல்ல? அதே போல தான் இந்தப் பதிவும்-ன்னு நினச்சிக்கிட்டு வர்றவங்க எல்லாருக்கும் ஆப்பு! :-) இன்னிக்கி எங்க குல தெய்வம் முருகப்பெருமானைப் பார்க்க விராலிமலைக்குப் போகப் போறோம்...வாரீங்களா?

நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி நியூயார்க் நகரில் எனக்கு ஒரு விபத்து. சுரங்க ரயில் வண்டி ஏறும் போது, வண்டி இடுக்கில் கால் சிக்கிக் கொண்டு ஒரே களேபரம்! NYPD போலீஸ் மாமாக்கள் வந்து ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போயி அட்மிட் பண்ணாங்க. யாருக்காச்சும் சொல்லணுமா-ன்னு கேட்டாங்க. நன்றிங்க ஆபிசர், நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டேன். கையில் செல்பேசியும் பிளாக்பெரியும் இருந்திச்சி.

யார் கிட்டயும் சொல்லலை! வார இறுதி - அலுவலகம் இல்லை என்பதும் ஒரு வகையில் நல்லதாப் போச்சு! பத்து மணி நேரக் காரோட்டும் தூரத்தில் இருக்கும் என் தம்பி-நண்பனுக்கு மட்டும் மருத்துவமனையில் இருந்து ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன், தகவலுக்காக! :-)

அனுப்பிட்டு, நாமளே சமாளிச்சிக்கலாம்-ன்னு தனியா இருந்தேனா? ராத்திரி ஆக ஆக வலியும் பயமும் சேர்ந்து கூடிக்கிச்சு!
இது போன்ற நேரங்களில் தனிமை கற்றுக் கொடுக்கும் வாழ்க்கைப் பாடங்களும் நட்புப் பாடங்களும் தான் எத்தனை எத்தனை? :-)

இதுக்கு மேல வேணாம்டா சாமீ-ன்னு, நியூயார்க்கிலேயே இருக்கும் என் ஈழத்து நண்பி ஒருத்தியை அழைத்தேன்! அவளும் அவள் கணவரும் பதறியடிச்சிக்கிட்டு ஓடியாந்தாங்க! அன்றைய இரவு, வலியிலும் கண்ணீரிலும் நட்பிலும் அமைதியாய்க் கழிய....

கொஞ்ச நாள் கழிச்சி இந்தியாவுக்குத் தொலைபேசும் போது, அம்மா கிட்ட உளறி விட்டேன்! அம்மாவிடம் அவ்வளவா எதையும் மறைச்சிப் பழக்கம் கிடையாது பாருங்க! (உங்களில் பல பதிவர்களின் பேரு கூட எங்கம்மாவுக்குத் தெரியும்! பொறுமையின் சிகரம்! என் பதிவு-பின்னூட்டம் பற்றிய மொக்கையைக் கூட பொறுமையாக் கேட்டுப்பாங்க! :-)

அம்மா பயந்தே போயிட்டாங்க! "ஏண்டா இப்படி எல்லாம் பண்றே-ன்னு?" ஒரே அழுகை! உடனே அவங்களுக்கு நன்கு தெரிந்த என் அமெரிக்க நண்பர்கள் கிட்ட போனைப் போட்டு அங்கேயும் ஒரு சீனைப் போட்டாங்க! போட்டதுமில்லாம என்னைப் போட்டும் கொடுத்தாங்க! பசங்க எல்லாரும் என்னைப் பிலுபிலுன்னு பிடிச்சிக்க...

இந்த விபத்தால் பயந்து போன அம்மா, விராலிமலைத் தெய்வம் முருகப் பெருமானுக்கு வேண்டிக் கொண்டாங்க போல!
இந்த முருகன் மருத்துவ முருகனாம்! பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமும் அல்லவா? விராலிமலையில் வேலும் உண்டு! எக்கச்சக்கமா மயூரமும் (மயில்) உண்டு! அதனால் இந்த முறை இந்தியப் பயணத்தின் போது விராலிமலையில் தரிசனம்!

திருச்சி-திருவரங்கம் வரை ரயிலில் சென்று, பின்னர் விராலிமலைக்கு வாடகைக் காரில் செல்லலாம்! பேருந்தும் நிறைய உண்டு! சுமார் முப்பது கிலோ மீட்டர்!
திருச்சி-மதுரை சாலையில், புதுக்கோட்டைக்கு அருகில் இருக்கும் சிற்றூர் விராலிமலை! சிறிய ஆனால் அழகிய ஊர்! அழகன் இருக்கும் ஊரல்லவா? அழகா இருக்காதா பின்ன?


அது என்ன விராலி மலை? விரலி மஞ்சள் தெரியும்! விரல் மாதிரி நீட்டு நீட்டா இருக்கும்! ஆனா அது என்னாங்க விராலி??

விறலி என்பது தான் விராலி என்று திரிந்து போனது-ன்னு சிலர் சொல்லுறாய்ங்க! விறலி-ன்னா நாட்டியப் பெண்! கோயில்களில் நடனமாடும் தேவதாசிகள் நிறைய பேரு விராலிமலையைச் சுற்றி இருந்தாங்களாம். இங்கு இசை வேளாளர் குடும்பங்களில், வீட்டில் பிறக்கும் முதல் பெண்ணை, வேலக் கடவுளுக்குக் கட்டி வைக்கும் வழக்கமும் இருந்ததாம்!

இதுக்குன்னே முக்கோண வடிவில், விராலிமலை முருகன் தாலி-ன்னு வழக்கத்தில் இருந்திருக்கு போல!

இவர்கள் ஆடுவது பரதநாட்டியம் இல்லை; சதிர் என்ற ஒரு வகையான ஆட்டம்! இவர்களுக்கு என்றே எழுதப்பட்ட விராலிமலைக் குறவஞ்சியை நடித்துக் காட்டுவார்கள் என்றும் கூறப்படுகிறது! ஆனால் கால மாற்றத்தாலும் அரசின் சட்டத்தாலும் இப்போது விறலியர்கள் அவ்வளவாக இல்லை-ன்னு அங்கிருந்த சிவாச்சாரியார்(அர்ச்சகர்) சொன்னாரு!
விராலி மலையில் கால் வைத்ததுமே நாம் காண்பது சிறு குன்று! சுமார் 200 படி இருக்கும் போல! கொஞ்சம் விராலி மரங்கள்! டிசம்பர் பூ மாதிரி ஒரு பூ...வில்வ இலை மாதிரி ஒரு இலை! இது ஏதோ மருத்துவச் செடியாம்-ல! கடம்பனே ஒரு மாமருந்து! அவன் மலையில் வளரும் செடிகளுமா மருந்து?

இந்தச் செடியெல்லாம் Analgesic, Pain Killer-ன்னு நம்ம டாக்டரம்மா - தங்கச்சியம்மா சொல்லிப் போர் அடிச்சிக்கிட்டே வந்தாங்களா? "உன் கூட வரேன்-ல? நெறைய Pain Killer தேவைப்படும்! கொஞ்சம் பறிச்சிப் போட்டுக்கவா"-ன்னு அவ புருசனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே நானும் அவளை ஓட்டிக்கிட்டு வந்தேன்!:-)

குன்றில் இந்தப் பக்கம் திரும்பினா நிறைய மயில்கள்! அட, எங்கிட்டு தான் இம்புட்டு மயிலு இருக்கும்னே தெரியலை! பறபறன்னு ஓடியாருதுங்க!

தோகை மயில்(ஆண்), தோகை இல்லாத மயில்(பெண்), வெள்ளை மயில்-ன்னு எக்கச்சக்கமான மயில்கள்!
நான் எந்த முருகன் கோயில்-லயும், ஏன் அறுபடை வீட்டுல கூட, இம்புட்டு மயிலைப் பார்த்தது கிடையாதுப்பா!
அதுங்க டொக்கு டொக்கு-ன்னு நடக்குற அழகே தனி! ஏதாச்சும் ஒரு மயிலு தோகையை விரிக்குமா-ன்னு நானும் கேமிராவை வச்சிக்கிட்டு அப்படியும் இப்பிடியும் குழந்தை மாதிரி திரும்பித் திரும்பிப் பார்த்தது தான் மிச்சம்! "வெண்ணை, யார் தமிழ்க் கடவுள்-ன்னு பதிவு போட்டல்ல? தோகையை விரிக்க மாட்டோம் போடா"-ன்னு சொல்லுதுங்க போல! :-)

மயில் போடுற சத்தம் தான் கொஞ்சம் கேட்க ஒரு மாதிரி இருக்கு!
மயில் கத்துது-ன்னு சொல்லக் கூடாதாமே? என்னன்னு சொல்லணும் சொல்லுங்க பார்ப்போம்?

விராலி மலையின் கீழ் சரவணப் பொய்கை! குளத்தில் கால் நனைத்துக் கொண்டு மலைப்படி ஏறினோம்! கீழே கிராம தேவதையான மைக் கண்ணுடையாள் சன்னிதி-ல கும்பிட்டுத் தான் மலை ஏறணுமாம்!
அரோகரா-ன்னு சொல்லச் சொன்னாங்க அம்மா! நானும் சொன்னேன்!
அம்மா என் கையில் சிறிய திருக்கை வேல் ஒன்னு கொடுத்தாங்க! நேர்த்திக் கடன் வேல்!

அட சக்தி வேல் வாங்கிட்டேனா? அப்ப நான் தேன் முருகன்! :-)
அப்படியே குழந்தை முகமா, பால் வடியும் பால முகமா, பழமா, அப்பாவியா வேற இருக்கேனா?
ஒரு முருக மிடுக்கோடு மலை ஏற ஆரம்பிச்சேன்! கெக்கெக்கே-ன்னு ஒரு சத்தம்!
அட நம்ம மயிலு தோகைய விரிக்கிறான்-டா!

படபட-ன்னு கீழே ஓடியாந்து காமிராவில் சுட்டேன்! ச்சே...ஒரே ஷேக்கு! "செல்லம், மனக் கொறையோட ஏன் மலை ஏறுற நீயி?
யார் தமிழ்க் கடவுள்-ன்னு பதிவுக்கு, ஒன்னும் புரியாத மனுசன் தான் கோச்சிப்பான்! ஒன்றே-ன்னு புரிந்த மருகன் கோச்சிப்பானா?

மாமனும் மருகனும் - இருவருமே தமிழ்க் கடவுள்-ன்னு உண்மையைத் தானே சொன்னே! இந்தா தோகை!"-ன்னு சொல்வது போல, நல்லா விரித்து விரித்து ஆடியது அந்த மயிலு! எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! வாயெல்லாம் சிரிப்போட மீண்டும் படி ஏறினேன்!

படிகளுக்கு நடுவே அழகா மண்டபம் எல்லாம் இருக்கு! சின்ன மலைங்கிறதாலே சீக்கிரமாவே ஏறிடலாம்!
வழியில் இடும்பன், மீனாட்சி-சொக்கநாதர், வசிட்டர்-அருந்ததி, அகத்தியர், அருணகிரிநாதர் எல்லாருக்கும் சின்னச் சின்னச் சன்னிதிகள்! இதோ மலை உச்சிக்கு வந்தாச்சு! அழகான ராஜகோபுரம்!

மகாமண்டபம் தாண்டினாக் கருவறை! மகாமண்டபத்தில் மாணிக்க விநாயகருக்கு ஒரு சல்யூட் அடிச்சிட்டு உள்ளே முருகனைப் பார்க்கலாம்-ன்னு திரும்பிப் பாக்குறேன்.....
அடடா! அந்த அழகனைப் பாக்கலாம்-னு வந்தாக்கா, இந்த அழகன் எங்கேப்பா இங்க வந்தான்?
இது என்ன இன்ப அதிர்ச்சி? கருப்பன்-கள்ளச் சிரிப்பன் நிற்கிறான்!
என்னப்பன்,
பொன்னப்பன்,
முத்தப்பன்,
மணியப்பன்,
தன் ஒப்பார் இல் அப்பன்,
தாயார் உடனுறை திருமகள் கேள்வன் (ஸ்ரீநிவாசன்) = மருகனும் மாமனும் சைடு கேப்புல ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டு இருக்காங்க!

எனக்குச் சிரிப்பு தான் வந்தது! நான் பாட்டுக்குச் சிவனே-ன்னு முருகன் கோயிலுக்கு வந்தாக் கூட, இவன் என்னைய சும்மா வுட மாட்டான் போல இருக்கே! இவனைப் பார்த்துட்டு தான் அவனைப் பார்க்க முடியும் போல இருக்கே! இது என்னடா கொடுமை? வேறு வழியில்லை!

கேஆரெஸ் என்னும் போவான் போகின்றாரை...
போகாமல் காத்து,
உன்னைக் கூவுவான் வந்து நின்றோம்! - என்கிறானோ?

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால், ஆ! வா! என்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்!
தீர்த்தம் பெற்றுத் துளசி மணக்க, முருகனைத் திரும்பிப் பார்க்கிறேன்! ஆகா...யார் சொன்னா அந்த சிக்கல் சிங்காரவேலன் தான் அழகு-ன்னு?


இதோ...விராலி மலையான்! சண்முக நாத சுவாமி என்னும் திருப்பெயர்!
மயில் மீது அமர்ந்த ஒய்யார வடிவம்! இடக்கால் மடித்து, வலக்கால் தொங்கவிட்டு,
மூவிரு முகங்கள், முகம் பொழி கருணை,
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள்,
மாவடி வைகும் செவ்வேள் மலரடி!

தோளில் ஓர் கூர் வேலலைத் தாங்கி நிற்கும் திருக்கோலம்!
சேவல் கொடியில் என் ஆவல் கொடி பறக்கும் திருக்கோலம்!

வலப்புறம் வள்ளியாள் - அவள் கரத்திலோ தாமரைப்பூ - அவன் வலக்கண் சூரியன் அல்லவா?
இடப்புறம் அத்தியாள் - அவள் கரத்திலோ அல்லிப்பூ - அவன் இடக்கண் சந்திரன் அல்லவா?
சாயரட்சை என்னும் மாலை நேரப் பூசையில் அடுக்கு விளக்குகள் எல்லாம் கருவறையில் ஜொலிக்கின்றன! ஆறுமுகத்தில் பின் மூன்று முகங்கள் கண்ணாடியில் பளிக்கின்றன! கூட்டமே இல்லை! இனிது இனிது ஏகாந்தம் இனிது! என்னையும் அறியாமல் என் வாய் மெல்லிசா, மென் குரலில் கூவத் தொடங்குகிறது!

மயூ ராதி ரூடம், மகா வாக்ய கூடம்!
மனோ ஹாரி தேகம், மகா சித்த கேஹம்!
மகீ தேவ தேவம், மகா வேத பாவம்!
மகா தேவ பாலம், பஜே லோக பாலம்!

என்று சரவணன் சதிராடுவது போலவே பாடலும் ஏற்ற இறக்கம் காட்ட.......

ஐயோ, இது என்ன? பாத்துக்கிட்டே இருக்கும் போதே இவங்க திரையைப் போடுறாங்க???


பொதுவா சன்னிதியில் எனக்கு வடமொழி சுலோகங்கள் வராது! தமிழ் அருளிச் செயல்கள் தான் பெரும்பாலும் வரும்! ஆனா இன்னிக்கு என்னமோ தெரியலை, ஆதிசங்கரர் வாயில தானா வந்துட்டாரு! நான் என்னத்த சொல்ல!

"அப்பா தமிழ்க் கடவுளே! தமிழில் பாடாததற்கு எனக்குப் பாதியில் திரையா? இது என்ன கொடுமைன்னு" மனசு பரபரக்குது!
திரும்பிப் பாத்தா அம்மா என்னைப் பார்த்து ஒரு லுக்கு வுடறாங்க!
வாயில் நுழையாத பாஷையை எல்லாம் இவன் எங்கிட்டுப் போயி படிச்சான்-ன்னு அவங்களுக்கு எப்பமே என் மேல ஒரு பயம் தான்! :-)

ஒரு வட்டத் தட்டு, துணி மூடிக் கொண்டு, உள்ளாற போறாங்க சில குருக்கள்! ஓ நைவேத்தியமா? அதான் திரை போட்டாங்களா?
அதானே பார்த்தேன்! என் முருகனுக்கு எம்மேல கோபமோ-ன்னு நினைச்சிட்டேன்! அப்படியே அவன் கோவப்பட்டாலும் நாங்களும் பதிலுக்குக் கம்புச் சண்டை, அன்புச் சண்டை எல்லாம் போடுவோம்-ல? :-)

கொஞ்ச நேரத்துக்குப் பின், உள்ளாற போன தட்டு தொறந்தபடி வெளியே வருது!
அதைப் பார்த்த உடனே நான் மயக்கம் போட்டு விழாத குறை தான்!

ஆகா...இது என்ன தட்டில் சுருட்டு பீடி?

"அடங் கொக்க மக்கா! என்ன நடக்குது இங்க? முருகன் நைவேத்தியத் தட்டில் எதுக்குச் சுருட்டு பீடி?
இவ்வளவு நேரம், உள்ளாறத் திரையப் போட்டு, தம் அடிச்சிக்கிட்டு இருந்தானா அந்தப் பால முருகன்?
அடப் பாவி! பார்த்தா பால் வடியும் பால முகம்! முருகக் குழந்தையை அள்ளிக் கட்டிக்கணும் போல இருக்கு! முளைச்சி மூனு இலை விடல! அதுக்குள்ள உனக்குச் சுருட்டு கேக்குதா? OMG! I just can't believe this!..."

என் வியப்பும் திகைப்பும் மூஞ்சிலயே எழுதி ஒட்டி இருக்கு போல! பக்கத்தில் இருந்த அர்ச்சகரே அதைப் பார்த்துவிட்டு விளக்கம் சொன்னாரு!

குமாரவாடி குறுநில மன்னனின் அமைச்சர் பேரு கருப்பமுத்துப் பிள்ளை. முருக பக்தர். அதே சமயம் சரியான சுகபோகி. தொடர் புகையாளர் (Chain Smoker). ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தரிசனத்துக்கு மலைக்கு வருவாராம்.

ஆனால் ஒரு முறை வெள்ளம் பெருக்கெடுத்து வர முடியாமல் போனது. கரையில் உணவு கூடக் கிடைக்காமல் தவித்தார் அமைச்சர்.
உணவை விட அவர் விரும்பிப் புகைக்கும் சுருட்டு தடைபட்டது தான் அவருக்குத் தவிப்பாகிப் போனது.

முருகன் அந்த நள்ளிரவிலும் அவர் முன் தோன்றி, சுருட்டு அளித்து, மலைக்கு அழைத்து வந்தான் = எதை நினைக்கிறாயோ அதாகவே ஆவாய்!
வேண்டியவர்க்கு வேண்டியதை "ஆராய்ந்து" பின்னரே அருளும் வழக்கமா என்ன கருணைக் கந்தனுக்கு? = சுருட்டு அளித்தான் சுப்ரமணியன்!!!

கருப்பமுத்துப் பிள்ளை அன்று முதல் பூசை வேளயில் சுருட்டும் சேர்த்து சண்முக நாதனுக்கு நிவேதனத்தில் தர வேண்டும் என்ற அரசாங்க உத்தரவு பிறப்பித்து விட்டார்! இன்றும் அதுவே நடைமுறையில் உள்ளது! இந்த நாட்டு பீடிக்குச் சுருட்டுக் களஞ்சி என்றே பெயர்!

இதோ திரை விலகி, மேளங்கள் முழங்க, ஆறுமுகனுக்கு ஆரத்தி! முன்பு சங்கரர் பாடிய அதே புஜங்க நடையில் அழகு ஜொலிக்க நிற்கிறான் என் ஆணழகன்! விராலிமலைத் திருப்புகழ் அடியேன் வாயில் சன்னமாய் ஒலிக்கிறது. செய்ப் பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு...செப்பு என எனக்கு அருள்கை மறவேனே! (பாடலை இங்கு கேட்கலாம்!)சீரான கோல கால நவமணி
மால் அபிஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செய்யும் முக - மலர்ஆறும்

சீர் ஆடு வீர மாது மருவிய
ஈர் ஆறு தோளும் நீளும் வரி அளி
ஸ்ரீ ராகம் ஓதும் நீப பரிமள - இருதாளும்

....
....
கூர் ஆழியால் முன் வீய நினைபவன்
ஈடேறும் ஆறு பாநு மறைவுசெய்
கோபால ராயன் நேயம் உள திரு - மருகோனே

கோடாமல் ஆரவார அலை எறி
காவேரி ஆறு பாயும் வயலியில்
கோனாடு சூழ் விராலி மலை உறை - பெருமாளே!

(திருப்புகழ் வித்தகர் நம்ம SK ஐயாவை, இந்த அழகிய சந்தப் பாட்டுக்குப் பொருள் சொல்லுமாறு அன்போடு அழைக்கிறேன்!)


அனைவரும் தரிசனம் கண்ட மகிழ்ச்சியில் திளைத்திருந்தோம். அங்கிருந்த சிவாச்சாரியார்கள் அடியேன் பாடலை மிகவும் சிலாகித்து அன்புடன் பேசினார்கள். அம்மா என் கால் குணமானதற்கு உண்டான வேண்டுதலை நிறைவேற்றினார்கள்! திருக்கை வேலினைக் காணிக்கை அளித்தார்கள்! திருச்சி நகருக்குத் திரும்பி வந்தோம்.

எங்கள் மால் ஈசன் கிடந்ததோர் கிடக்கையாம், பச்சை மாமலை போல் மேனியைக் காண மனசு துடிக்குது.
திருவரங்கம் செல்ல மெள்ளப் பேச்செடுத்தேன். அம்மாவோ "ஊருக்குப் போகலாம்-பா, ரொம்ப லேட்டாயிடிச்சி" என்று சொல்லி விட்டார்கள்!
பாவம் மிகவும் களைத்துப் போய் இருந்தார்கள்! என் பொருட்டு இவ்வளவு தூரம் வந்ததே பெருசு! சரிம்மா-ன்னு சொல்லிட்டேன்.

திருச்சியில் ரயிலேறிச் சென்னைக்குக் கிளம்பி விட்டோம். ஆற்றுப் பாலம் வரும் போது ரயிலின் கதவோரம் போய் நின்று கொண்டேன். அரங்கனின் நெடிதுயர்ந்த கோபுர மாமலை கண் சிமிட்டுகிறது!
"போய், பின்னொரு நாள் வருகிறேன் ரங்கா!" என்று சொன்னேன்! கால்வலித் துடிப்பில் மருத்துவமனைத் தனிமையில் இருந்தது நினைவுக்கு வந்து...கண்கள் பனிக்க...

"பயந்த தனி வழிக்குத் துணை நான் அல்லவா? அதான் மருகன் வீட்டில் மாமனைக் கண்டாயே!
மை வண்ணம் இங்கு கண்டாய்!
மால் வண்ணம் அங்கு கண்டாய் அல்லவா?"
என்று சொன்னான் போலும் அரங்கன்! அகண்ட காவேரியின் மை வானத்து இருளில்...ஒரு மின்னல் பளிச்ச...

கோபாலராயன் நேயம் உள திரு - மருகோனே
காவேரி ஆறு பாயும் வயலியில்,
கோனாடு சூழ் விராலி மலை உறை - பெருமாளே!